தஞ்சை பாராளுமன்ற தொகுதி தலைவர் திருச்செந்தில் அவர்களின் தலைமையிலும், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ரவிந்தரதாஸ், அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை மைதீன், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் ஆகியோரின் முன்னிலையில் இனிதே துவங்கியது .
இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :
1. செல்லிக்குறிச்சி ஏரி மற்றும் அதிரையின் அணைத்து குளங்களுக்கும் நீர் ஆதாரத்தை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பது.
2. அதிரை நகருக்கு ஆம்புலன்ஸ் வழங்கக் கோரி தமிழக அரசை கேட்டுக் கொள்வது.
3. அதிரை கரையூர் தெரு, காந்தி நகர் துறைமுக சாலையை சீரமைத்து தருவது
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அதிரை நகர காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteThakavalukku nanre
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது ?
ReplyDeleteநமதூர் பேரூராட்சி தலைவர் மற்றும் சமுக நல ஆர்வலர்கள் இணைந்து பெரும் முயற்சி செய்தும் இன்னும் சில மணிநேரத்தில் நமதூர் சி.எம்.பி வாய்க்காளை அடைய இருக்கும் தருணத்தில் இப்படி ஒரு தீர்மானம் நமதூருக்கு தேவையா ?
இளைஞர் காங்கிரஸ் இந்த தண்ணீரை வைத்து காமெடி ஏதும் பண்ணலேய?
Fentastic...These are all politics comedy.. Too many cooks spoil the food..
Deleteசமுக நல ஆர்வலர்கள் யார் ?
ReplyDeleteஅப்ப எங்க பக்கம்லாம் தண்ணீர் வரல அது எப்போ வரும் ?
Deleteநமதூருக்கு தற்போது சேர்மன் அஸ்லம் மற்றும் சில சகோதரர்கள் இணைந்து இறைவனின் துணை கொண்டு வெற்றிகரமாக செக்கடி குளம் ஆலடி குளங்கள் ருசித்து கொண்டும் மேலும் மற்ற குளங்கள் ருசிக்க இருக்கின்ற நீரை கடும் முயற்சியால் கொண்டு வந்தவர்கள் தான் சமுக நல ஆர்வலர்கள் ;
Deleteஇது கூட தெரியாமல் நீங்கள் பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை மைதீன்,