.

Pages

Saturday, December 21, 2013

அதிரையில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் அதிரை பொதுநலன் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றம் !

அதிரை நகர இளைஞர் காங்கிரஸ் கட்சியினர்  நடத்திய  செயல்வீரர்கள் கூட்டம்  இன்று காலை 11 மணியளவில்  காங்கிரஸ்  கட்சி  அலுவலகத்தில் நடந்தது .
தஞ்சை  பாராளுமன்ற தொகுதி  தலைவர் திருச்செந்தில் அவர்களின் தலைமையிலும், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ரவிந்தரதாஸ், அதிரை  நகர காங்கிரஸ் தலைவர்  M.M.S. அப்துல்  கரீம், பட்டுக்கோட்டை  சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை  மைதீன், நகர  இளைஞர்  காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் ஆகியோரின் முன்னிலையில்  இனிதே துவங்கியது .

இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் : 
1. செல்லிக்குறிச்சி ஏரி மற்றும் அதிரையின் அணைத்து குளங்களுக்கும் நீர் ஆதாரத்தை வழங்க  வேண்டும் என மாவட்ட  ஆட்சியரிடம்  கோரிக்கை வைப்பது.
2. அதிரை  நகருக்கு  ஆம்புலன்ஸ் வழங்கக் கோரி தமிழக  அரசை கேட்டுக் கொள்வது.
3. அதிரை  கரையூர் தெரு, காந்தி நகர்  துறைமுக சாலையை  சீரமைத்து தருவது

ஆகிய தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அதிரை நகர காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




7 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. என்ன கொடுமை சார் இது ?


    நமதூர் பேரூராட்சி தலைவர் மற்றும் சமுக நல ஆர்வலர்கள் இணைந்து பெரும் முயற்சி செய்தும் இன்னும் சில மணிநேரத்தில் நமதூர் சி.எம்.பி வாய்க்காளை அடைய இருக்கும் தருணத்தில் இப்படி ஒரு தீர்மானம் நமதூருக்கு தேவையா ?


    இளைஞர் காங்கிரஸ் இந்த தண்ணீரை வைத்து காமெடி ஏதும் பண்ணலேய?

    ReplyDelete
    Replies
    1. Fentastic...These are all politics comedy.. Too many cooks spoil the food..

      Delete
  3. சமுக நல ஆர்வலர்கள் யார் ?

    ReplyDelete
    Replies
    1. அப்ப எங்க பக்கம்லாம் தண்ணீர் வரல அது எப்போ வரும் ?

      Delete
    2. நமதூருக்கு தற்போது சேர்மன் அஸ்லம் மற்றும் சில சகோதரர்கள் இணைந்து இறைவனின் துணை கொண்டு வெற்றிகரமாக செக்கடி குளம் ஆலடி குளங்கள் ருசித்து கொண்டும் மேலும் மற்ற குளங்கள் ருசிக்க இருக்கின்ற நீரை கடும் முயற்சியால் கொண்டு வந்தவர்கள் தான் சமுக நல ஆர்வலர்கள் ;


      இது கூட தெரியாமல் நீங்கள் பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை மைதீன்,

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.