.

Pages

Thursday, December 5, 2013

கந்தூரி பதிவு நீக்கியது குறித்து நிர்வாக அறிவிப்பு !

அதிரை நியூஸ் - 'உள்ளூர் நிகழ்வுகளை உடனுக்குடன்' வழங்கி வருகின்ற ஒரு செய்தித்தளம். இதில் நேற்று அதிரையில் நடந்த கந்தூரி நிகழ்வை "தவ்ஹீத் அமைப்புகளின் எதிர்ப்புக்கு மத்தியில் கடற்கரைத்தெரு கந்தூரி விழா !" என தலைப்பிட்டு தலையங்கச் செய்தியாக தளத்தில் படங்களுடன் வெளியிட்டிருந்தோம். இவற்றை பார்வையிட்ட பெரும்பாலான வாசகர்கள், இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான செயல் இது என குறிப்பிட்டு தங்களின் உணர்வுகளை பின்னூட்டங்களில் வெளிப்படுத்திருந்தனர்.

அதிரை நியூஸ் ஆலோசகர்களும், தளத்தின் மீது அக்கறை காட்டும் சில நண்பர்களும் தனி மின்னஞ்சல் மூலம் பதிவு குறித்து சில கருத்துகளை எங்களுக்கு சுட்டிக்காட்டினார்கள். இவற்றை உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட அதிரை நியூஸ் நிர்வாகக்குழுவினர் இறுதியில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு பதிவை முன்னறிவிப்பின்றி நீக்குவது என முடிவு செய்து, அதன்படி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதிரை நியூஸ் பங்களிப்பாளர்கள் - ஆலோசகர்கள் - நண்பர்கள் - வாசகர்கள் ஆகியோரின் தொடர் ஆலோசனைக்கும் - ஒத்துழைப்பிற்கும் மிக்க நன்றி !

அதிரை நியூஸ் குழு

20 comments:

  1. சமாதி விழா செய்திக்கு முழுக்கு போட்டமைக்கு மிக்க நன்றி.

    நேற்று எனது தனி மெயிலை அங்கீகரித்து குறிப்பிட்ட வரியை நீக்கியமைக்கு மீண்டும் நன்றி.

    அல்லாஹ் உங்களுக்கு மகத்தான கூலியை தருவானாக!

    அடுத்தாண்டு முதல் இந்த சமாதி விழாவே இல்லாமல் ஆக்க அதிரை நியூசும் பாடுபடும் என நம்புகிறேன். இன்சா அல்லாஹ்.

    ReplyDelete
  2. நன்றி, நன்றி, நன்றி
    அல்லாஹ் உங்களுக்கு மகத்தான கூலியை தருவானாக!

    ReplyDelete
  3. Thank u vry much for removing d message Khanthoori News..
    No, d Tomb of d festival..

    ReplyDelete
  4. அதிரை நியுஸ் ஒரு நாடு நிலையுடன் செய்திகளை வெளியிடுகிறது என்பது இது போன்ற நீக்கால் மூலம் ஒத்தக்கருத்துடையவர்கள் ஆதிக்கத்தில் வலைத்தளம் இருப்பதால் அவர்கள் பக்கம் சாய்கின்றதோ என்பது புரியமுடியாத ஒன்றாக உள்ளது.

    574 வருடம் வாழ்ந்த மக்கள் எல்லோரும் அதாவது நம் முன்னோர்கள் எல்லோரும் வழிதவறியவர்கள் என்ற முத்திரை குத்துவது ஏற்றுக் கொள்ளமுடியாது. கொள்கை மாறிப் போனவர்கள் யாவருக்கும் அது தவறாகத்தான் தெரியும். செயல்பாடுகளில் சில தவறுகள் தொழுகையில் விரல் ஆட்டுவதைப்போல் இருக்கலாம். அதனை நீக்குவது தான் தகுமானவர்களின் செயல். ஆயிரம் பேர் பொய்யை உண்மை என்றால் பொய் உண்மையாகுமா ?

    நடுநிலை தவறக்கூடாது. தலைமுறைகள் ஒன்ற இரண்டா ? தாங்கள் குறிப்பிட்ட 574 வருடம் பத்து தலைமுறைக்கு மேல் இருக்கும்.

    தன் மூதாதையர்களை குறைகூறும் சமுதாயம் வாழும்காலம் கொடுமையானது. அதாவது தன்னையே திட்டுவது எப்படி சரியாகும். இரும்பு பறக்கும் என்றால் சிரித்தார்கள். ஆனால் பறக்கிறது. தனக்கு புரியவில்லை என்றால் ஒதுங்குபவன் நல்லவன். அவனே அறிவாளி. அதுதான் மார்க்கம். இதை ஏற்காதவன் என்ன சொன்னாலும் தவறியவனே.

    தவறியவர்கள் பலரானால் அது நியாப்படுத்துவதும் தவறே.

    ReplyDelete
  5. இதுமாதரிஎல்லாம் எழுதி எந்தபயனும் இல்லை. ஒரே பக்கம் சாயும் கூட்டம் வலைதளத்தில் இருக்க நியாம் கேள்விக்குறியே !
    இஸ்லாம் அம்மாரக்கத்தைப் பின்பற்றுபவர்கள் தவிர அதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இம்மார்க்கத்தைப் பற்றி எவ்வாறு சாதகமாகப் பேசுவார்கள் ? அதனால் இஸ்லாம் தவறா என்று கேட்டால். ஆதாரம் இருக்கா என்றுதான் பார்ப்பார்கள். ஆதாரம் தந்தால் அது தவறு, பித்தத் என்று கூறியே பழக்கப் படுதப்பட்டவர்கள். இங்கு உணர்ச்சிக்கு மயங்குபவர்கள் தான் அதிகமாக இருக்கின்றாகள். விசால, பரந்த, சமத்துவ சிந்தனை கேள்விக்குறியே ! இறைவனுக்கு உருவம் இருக்கு என்று சொன்னவர்கள் தானே ? அப்ப இவர்கள் மார்க்கம் வேறு. அவர்கள் மார்க்கம் வேறு.

    ReplyDelete
  6. அதிரை நியுஸ் நடுநிலையுடன் என்றும் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  7. செய்திகளை உடனுக்குடன் சேகரித்து தரும் அதிரை நியுஸ் இப்படி நடுநிலை தவறுவது சரியா ? எதோ யாரின் நிர்பந்தங்களுக்கு அடிபனிகிறதோ ! யாருமே நியாயமாக இருக்கமாட்டார்களா ?

    ReplyDelete
  8. இனி அதிரை நியுஸில் செய்தி வந்தால் வலைதள ஆதிக்க சக்திகளின் ஆதரவு செய்தி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமா ?

    யாருக்காவும் நடுநிலை தவறலாமா ?

    ஊரின் அனைத்து செய்திகளையும் போட முயல வேண்டும். அவ்வாறல்லாமல் மாற்றுக்கருத்தாரின் செய்திகளையும் போடாமல் இருப்பதுதான் ஒருவகையில் ஆறுதல் நியாயமாகவும் இருக்கலாம்.

    இப்படி அவர் விருப்பம் இவர் விருப்பம் என்றுப் போனால் அதிரை நியுஸ் யார் கண்றோலில் இருக்கிறது என்பது குழப்பமாகிப் போகிடுமல்லவா ?

    என்றும் போல் நடுநிலையுடன் எல்லாச் செய்திகளையும் வெளியிடவும். அதுவே நியாயம். எனவே மீண்டும் நீக்கியப் பகுதியை வெளியிடவும் என்று வேண்டுகிறோம்.

    ReplyDelete
  9. ஒரு சிலரை சந்தோசப்படுத்த செய்திகளை நீக்குவது நியாயம் அல்ல.

    ReplyDelete
  10. அறியாமல் கப்ர் வணக்கத்தில் ஈடுபடும் நமது சகோதர சகோதரிகள் அதை விட்டு மீண்டு வர துஆ செய்வோம், பிரச்சாரத்தையும் வீரியப்படுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
    Replies
    1. //அறியாமல் கப்ர் வணக்கத்தில்//

      கப்ர் வணக்கம் என்றால் என்ன ?

      Delete
  11. ஒவ்வொரு ஊரிலும் கொடிமரங்கள். தெருவிலும் கொடிகள். ஆனால் கொடிமரம் என்றால் கசப்பு. அந்த விளக்க கூட்டம். இந்த விளக்க கூட்டம். ஆனால் கந்தூரியும் விளக்க கூட்டம். இடையில் புகுந்த சில தவறுகள் நீக்க வேண்டும். அதற்காக அதனை தடுக்க வேண்டும் என்பது சரியல்ல. மேடைதோறும் தன் தலைவனை புகழ்வார். மகானை புகழ்ந்தால் சிருக்காம்.

    ReplyDelete
  12. Ansareboysolvathel oruthavarum ellai anpathu makkalukku pureyum

    ReplyDelete
  13. //தன் மூதாதையர்களை குறைகூறும் சமுதாயம் வாழும்காலம் கொடுமையானது. அதாவது தன்னையே திட்டுவது எப்படி சரியாகும். இரும்பு பறக்கும் என்றால் சிரித்தார்கள். ஆனால் பறக்கிறது. தனக்கு புரியவில்லை என்றால் ஒதுங்குபவன் நல்லவன். அவனே அறிவாளி. அதுதான் மார்க்கம். இதை ஏற்காதவன் என்ன சொன்னாலும் தவறியவனே.//


    ''ஆதமுடைய மக்களின் முது குகளிலிருந்து189 அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?'' (என்று கேட்டான்.) ''ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர். ''இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்'' என்றோ, ''இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?'' என்றோ கியாமத் நாளில்1 நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தோம்.)

    ReplyDelete
    Replies
    1. தனக்கு புரியவில்லை என்றால் ஒதுங்குபவன் நல்லவன். அவனே அறிவாளி. அதுதான் மார்க்கம். இதை ஏற்காதவன் என்ன சொன்னாலும் தவறியவனே

      Delete

  14. ஆயிரம் பேர் பொய்யை உண்மை என்றால் பொய் உண்மையாகுமா ? என்று சகோதரர் வினா எழுப்பி உள்ளார் 574 வருடம் கந்தூரி விழா எடுத்து விட்டால்
    மார்க்கம் ஆஹிவிடுமா ?

    நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட(கியாமத்)து வந்து விடும். (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது.(6:134)

    இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ.

    அல்லாஹ்வையன்றி, நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் இணை தெய்வங்களை பார்த்தீர்களா? அவர்கள் பூமியில் எதைப் படைத்திருக்கின்றனர்?
    அல் குர் ஆன் - 35 : 40


    இறைவனுக்கு இணை கற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும்.
    என, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புஹாரி : 6675



    ReplyDelete
    Replies
    1. சகோதரே,
      //
      இறைவனுக்கு இணை கற்பிப்பது//

      இறைவனுக்கு இணை என்றால் என்ன ?

      Delete
  15. மூட பழக்கவழக்கத்தை ஒழித்து கட்டிய நபிகள் நாயகம் உம்மத்துகளில் எப்டி மூட நம்பிக்கை மீண்டும் நுழைந்தது ....

    இதற்க்கு யார் காரணம் ?

    ReplyDelete
  16. ஜாவியா அதனை பித்தத் என்ற இவர்கள் வழி சரி என்கிறதா அதிரை நியுஸ் ?

    ReplyDelete
  17. பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் தொடர்வதால் புதிதாக கருத்துப்பதிவது நிறுத்தி வைக்கப்படுகிறது.

    ReplyDelete