2. பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக எதிர்வரும் [ 06-12-2013 ] அன்று மாலை 4 மணியளவில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ள மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் நகர கிளை சார்பாக பெறும் திரளாக சென்று கலந்துகொள்வது என்ற தீர்மானத்தை அடுத்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து த.மு.மு.க வின் தலைமை கழக பேச்சாளார் திண்டுக்கல் பாருக் அவர்கள் மூலம் தெருமுனை பிரச்சாரங்கள் அதிரையில் பேருந்து நிலையம், தரகர் தெரு, கடற்கரைதெரு, பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, நடுத்தெரு [ தக்வா பள்ளி அருகில் ], மேலத்தெரு, பிலால் நகர் ஆகிய பகுதிகளில் இன்று [ 02-12-2013 ] காலை 10 மணிக்கு ஆரம்பமான பிரச்சாரம் இரவு வரை நீடித்தன. இதில் த.மு.மு.க வின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அஹமது ஹாஜா, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது ஆகியரோடு அதிரை நகர மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அதிரையில் இன்று மதியம் 3 மணிமுதல் பெய்து வரும் தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது குறிபிடத்தக்கது.
இது முற்றிலும் அவசியமானது ஒன்று இது தொடர்ந்து dec 6 இல் அல்லாஹ்வின் இல்லத்துக்கு மாறு செய்யக்கூடாது மற்றும் இனி ஒருபோதும் எவனும் அலலாஹ்இல்லத்தை கை வைக்ககூடாது என்பதில் எல்லோருக்கும் பங்களிப்பை காட்டும் வகையில் அனைவரும் பங்குகொள்ளவேண்டும்
ReplyDelete