skip to main |
skip to sidebar
காப்பி பேஸ்ட் வலைதளத்திற்கு அதிரை நியூஸின் கனிவான வேண்டுகோள் !
அதிரை நியூஸ் - 'உள்ளூர் நிகழ்வுகளை உடனுக்குடன்' வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த செய்திதளம். உள்ளூரிலிருந்து பொதுநல நோக்கில் மிகுந்த சிரமங்களுக்கிடையே சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டும், நேரடியாக களஆய்வு செய்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தளத்தில் செய்தியாக பதியப்பட்டு வருகின்றன. இவ்வாறாக பதியப்படும் செய்திகளையும் புகைப்படங்களையும் பதிந்த சில மணி நேரங்களில் எங்கேயோ இருந்துகொண்டு இலகுவாக காப்பி செய்யப்பட்டு குறிப்பிட்ட வலைதளமொன்றில் தொடர்ந்து பதியப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் நட்பு முறையில் எடுத்துச்சொல்லியும் இந்த இழிவான செயல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
எங்களைப் பொறுத்தவரை எங்களால் பதியப்படும் செய்திகளை பிற சகோதர தளங்கள் எடுத்துப்பதிவதில் எவ்வித ஆட்சபனையும் எங்களுக்கு இல்லையென்றாலும் அதிரை நியூஸ் பெயரை அடிக்குறிப்பிட்டு பதிவதையே நாங்கள் விரும்புகிறோம். ஆதலால் அதிரை நியூஸின் செய்திகளை / புகைப்படங்களை எடுத்துப்பதியும் நண்பர்கள் எங்களின் தள முகவரியை நன்றியுடன் குறிப்பிட்டு பதிய அன்புடன் வேண்டுகிறோம். இதுதான் ஊடக தர்மமும் ஆகும்.
அதிரை நியூஸ்குழு
மிகுந்த சிரமங்களுக்கிடையே சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டும், நேரடியாக களஆய்வு செய்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு ட செய்திகளை காப்பி அடிப்பது தொடர் கதையாகி விட்டது. இது போல் அதிரை பிறையிலும் சில பதிவுகளை சம்பந்தப்பட்ட தளம் காப்பி செய்து பதிந்து வருகிறது. இதை எடுத்து சொன்னாலும் எந்த பயனும் இல்லை. சம்பந்தப்பட்ட இணைய தளம் இது போண்ற ஊடக தர்மம் அற்ற செயல்களை தவிர்த்து கொண்டால் தங்கள் இணையதளத்துக்கு நல்லது.
ReplyDeleteஒருவரின் அனுமதியில்லாமல் ஒரு பொருளை எடுப்பது என்பது திருடுவதற்கு சமம். திருடுவது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் விரோத செயலாகக் கருதப்படுகிறது.
ReplyDeleteதிருடனும், திருடனுக்கு துணைபோறவனும் உண்மையான இஸ்லாமியனாகவே இருக்க மாட்டான்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதிருடுவதை நாம் பார்த்து விட்டால், அப்புறம் என்ன பதில் வரும் தெரியுமா? அட, சும்மாதாங்க விளையாட்டுக்கு அப்படி செய்தேன் என்றும், மேலும் நீங்கள் உஷாராக இருக்கின்றீர்களா என்பதை பரிசோதிக்க இப்படி செய்தேன் என்றும் பதில் வரும். மேலும் அந்த அது மாதிரி திருட்டு அதோடு நின்று விடும்.
திருடுவதை நாம் பார்க்காமல் இருந்து விட்டால், அப்புறம் அது தொடர் திருட்டாக அமைந்து விடும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
பேஸ்ட்டுக்கு அப்புறம்தான் காப்பி[coffee] காப்பிக்கு அப்புறம் பேஸ்ட் என்பது தலைகீழான விஷயம் அல்லவா so காப்பி பேஷ்ட்டும் அவ்வகையே! என்ன சொன்னாலும் மாற்ற முடியாது
ReplyDeleteமிகச் சிறந்த பதிவு, அநியாயத்தை தட்டிக்கேட்பதே சிறந்த ஊடகத்துக்கு அழகு, அது நமக்கு நேர்ந்தாலும் சரி, அதை பிற இணையங்களின் சார்பாக செய்த அதிரை நியூஸ் நிர்வாகத்துக்கு நன்றி
ReplyDeleteசில சாறுண்ணி குணம் சில நேரங்களில் சிலரிடம் வருவதுண்டு.
ReplyDeleteதிருடாதே பாப்பா திருடாதே.
நடத்த முடியவில்லை என்றால் நிறுத்திவிடுதல் நல்ல முடிவு.
ஏன் இப்படியெல்லாம் பேர் சம்பாதிக்கணும் ?
இதுதான் உங்கள் சமூக வழிகாட்டுதலா ?
உங்கள் போன்றோர் செயலால் எந்த அளவிற்கு வேதனைப்பட்டு
அதிரை பிறை, அதிரை நியுஸ் போன்றோர் இப்படி எழுதுவார்கள் !?
எத்தனையோ வேலைகள் இருக்கு. அதைப்பார்க்கலாம் திருடுதலை விட்டு.
அதிரைக்கு களங்கம்.
பதிவுகள் எங்கிருந்து எடுத்துப் பதியப்படுகிறது என்பதை வலைதள வாசகர்கள் நன்கு அறிந்தாலும் இப்படி பகிரங்க அறிவுப்புச் செய்யும்படி சூழலை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வறிவிப்பின் மூலம் இனிவரும்காலங்களில் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ள வாய்ப்பில்லையென நினைக்கிறேன். ஒற்றுமையெனும் கயிற்றை பற்றிப்பிடித்து அனைத்து சகோதர வலைதளங்களுடன் கைகோர்த்து நிற்க்கவே அதிரை நியூஸின் காழ்ப்புணர்வில்லா ஆசை என்பதினை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்வோமாக.!
ReplyDeleteஉங்கள் பதிவை முழுமையாக வரவேற்கிறோம்.
ReplyDeleteஉங்கள் வருத்தம் ஏற்புடையதே...
நன்றிக் கூட தெரிவிக்காமல், இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது.
அவர்கள் இதன்பிறகாவது திருந்துவார்களா...?
உங்களுடன் நாங்களும் எதிர்பார்கிறோம்!
எங்களின் உணர்வுகளுக்கு சேர்ந்து குரல் கொடுத்துள்ள அன்புச்சகோதரர்கள் அனைவருக்கும் மற்றும் சகோதர இணையதளங்கள் அதிரை போஸ்ட், அதிரை பிறை ஆகியவற்றிற்கு மிக்க நன்றி !
ReplyDeleteஉங்கள் பதிவை முழுமையாக வரவேற்கிறோம்.
ReplyDeleteஉங்கள் வருத்தம் ஏற்புடையதே...
நன்றிக் கூட தெரிவிக்காமல், இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கதக்கது.
அவர்கள் இதன்பிறகாவது திருந்துவார்களா...?
உங்களுடன் நாங்களும் எதிர்பார்கிறோம்