.

Pages

Wednesday, January 15, 2014

அதிரையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்படும் வரவேற்பு குறித்து அதிரை உமர்தம்பியோடு ஒரு நேர்காணல் [ காணொளி ] !


இந்திய அரசியலில் குறுகிய காலத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி அனைவரின் பார்வையும் கவர்ந்து வருகின்ற அரசியல் கட்சி ஆம் ஆத்மி. இந்த கட்சிக்காக தஞ்சை மாவட்ட அளவில் ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கினைப்பதற்காக அதிரையர்கள் கடந்த சில நாட்களாக மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக புதிய உறுப்பினர்களையும் சேர்த்து வருகின்றனர்.

அதிரையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்படும் வரவேற்பு குறித்து இந்த பணிகளை முன்னின்று செய்து வரும் அதிரை உமர் தம்பி அவர்கள் அதிரை நியூஸிற்கு அளித்த நேர்காணல் !

29 comments:

  1. ஆம் ஆத்மிக்கு அதிரையில் ஓர் சத்தியசோதனை

    ReplyDelete
  2. இந்தியா மண்ணில் இப்படி ஒரு அரசியல் மாற்றம் டெல்லியிலிருந்து துவங்கியிருப்பது நாட்டு மக்களுக்கு ஒரு விடிவுகாலமாக இருக்கக்கூடும். அதன் தொடர்ச்சியாக நமதூரிலும் கட்சியை ஆரம்பித்தது நல்லதே. 18 தேதிக்குள் 500 மெம்பர்கள் சேர்ப்பது பெரும் கஷ்டமாக இருக்காது. நிச்சயம் நல்ல வரவேற்பு நமதூரிலும், ஒட்டு மொத்த தமிழகத்திலும் இருக்கும். தேசிய கட்சிகளுக்கும் குடம்ப அரசியல் நடத்தும் கட்சிகளுக்கும் ஆம் ஆத்மி (பொது மனிதன்) கட்சி ஒரு சவாலாகவே வளரும். சீரும் சிறப்போடும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் கைப்பற்றிவிட்ட நிலையில் இன்று வரை இந்தியாவில் மிகப்பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கும் தலித், சிறுபான்மை, பழங்குடியின மக்கள் குறித்து தனது நிலைப்பாட்டில் மெளனமாக உள்ள கட்சி. தனது கொள்கையில் உறுதியில்லாத தன்மையுடையது என்பது காஷ்மீர் தொடர்பான அவர்களது கருத்தை வாபஸ் பெற்றதிலிருந்து உணர முடிகிறது.

    சில சமூக மக்களின் உயிர்களுக்கு உத்திரவாதமில்லாத, சுதந்திரமில்லா நாட்டில் ஊழலும் இலஞ்சமும் ஒழிந்து என்ன பயன்?

    ஆம் ஆத்மி கட்சி குறித்து தெளிவில்லாத சிந்தனை ஓட்டம்தான் சாமானிய மக்களிடம் உள்ளது.

    வெளுத்ததெல்லாம் பாலில்லை... இந்திய ஊடகங்கள் உருவாக்கி வரும் மாயையில் நாமும் சிக்க வேண்டாம்....

    Z. Muhammad Thambi BABL

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அழைக்கும்
    அல்லாஹு நமது மக்களை பாதுகாக்கணும் நாட்டுக்கு நல்லது செய்யபொரன்னு புதியபுதிய கட்சிகள் முளைக்கத்தான் செய்யும் அதுக்காக ஏற்கனவே உமர்தம்பி காக்காவும், அலி அக்பர் காக்காவும் தனித்தனி இருவேறு கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்துக்கொண்டு அது எப்படி வேறொரு கட்சிக்கு ஆதரவா உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபடமுடியும் ஒர குழப்பமா இருக்கப்பா இதுலே இவங்கள நம்பி போற நம்ப பசங்க ரொம்ப உசாரா இருந்துகுங்கப்பா இவங்க இப்போ நாங்க அரசியல் சாக்கடைய கழுவப்போற கட்சின்னு சொல்லி “தொடப்பான(வெளக்கமாறு)” சின்னம்மா அறிவிச்சிருக்காங்க இவங்களும் சரியில்ல இப்போ அந்த தொப்பான்ல சுத்தம் செஞ்ச சரியாகாதுன்னு சொல்லி ஒற்றடகுட்சிய சின்னமா அறிவிச்சி வேறொரு பெயரில “அரசியல் மாற்றுக்கட்சி” மேலும்மொரு கட்சி உருவாகும்பட்சதில் இவர்கள் போன்றவர்கள் தாவக்கூடும்னு சொன்ன அது மெய்யாகுமா

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அழைக்கும்
    அல்லாஹு நமது மக்களை பாதுகாக்கணும் நாட்டுக்கு நல்லது செய்யபொரன்னு புதியபுதிய கட்சிகள் முளைக்கத்தான் செய்யும் அதுக்காக ஏற்கனவே உமர்தம்பி காக்காவும், அலி அக்பர் காக்காவும் தனித்தனி இருவேறு கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்துக்கொண்டு அது எப்படி வேறொரு கட்சிக்கு ஆதரவா உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபடமுடியும் ஒர குழப்பமா இருக்கப்பா இதுலே இவங்கள நம்பி போற நம்ப பசங்க ரொம்ப உசாரா இருந்துகுங்கப்பா இவங்க இப்போ நாங்க அரசியல் சாக்கடைய கழுவப்போற கட்சின்னு சொல்லி “தொடப்பான(வெளக்கமாறு)” சின்னம்மா அறிவிச்சிருக்காங்க இவங்களும் சரியில்ல இப்போ அந்த தொடப்பான சுத்தம் செஞ்ச சரியாகாதுன்னு சொல்லி ஒற்றடகுட்சிய சின்னமா அறிவிச்சி வேறொரு பெயரில “அரசியல் மாற்றுக்கட்சி” மேலும்மொரு கட்சி உருவாகும்பட்சதில் இவர்கள் போன்றவர்கள் தாவக்கூடும்னு சொன்ன அது மெய்யாகுமா


    Reply

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    பட்டது போதும்.
    எதிலும் நிதானித்து முடிவு எடுத்தால் நல்லது.

    நாம் இஸ்லாமியர்கள் ஒன்றுபட்டு செயல் பட்டால் முடியாதது ஏதும் உண்டோ? வலுவான சிந்தனையும் நிதானமும் எப்பொழுதும் தேவை.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  7. பொதுவாக ஆரம்பத்தில் முஸ்லிம்கள் ஆதரவாகக் காட்டிக் கொள்ளும் பிற கட்சிகள் பின்பு அவர்களின் சுயரூபத்தை வெளிப்படுத்திவிடுகின்றனர்.

    இது இன்றுவரை தொடரும் கதைதான்.. ஏன்? திடீரென பா.ஜ.க போன்ற மதவாத கட்சிகளிடம் சரணடைந்து பின்பு இதுபோன்ற கட்சிகளுக்காக உழைத்த முஸ்லிமகளை அவமானப்படுத்திய வரலாறு உண்டு.

    திடீர் முன்னேற்றம் என ஆம் ஆத்மியை அன்னாந்து பார்க்க வைத்தாலும். இவ்விசயத்தில் நம் மக்கள் அவசரப்படுகிறார்களோ என்று என்னத் தோன்றுகிறது.

    ம்.. கொடிக் கம்பம் நட்ட நமதூரில் எல்லா கட்சியினரும் ஒன்று சேர்ந்து தனியாக ஒரு மனக்கெட்டு வாங்கி அங்கே மட்டும் நடவும்.. எல்லா தெருக்களிலும் கிளைகளை திறந்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கொடிக்கம்பங்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்காமல்
    இருந்தால் சரிதான்.

    இப்படி திடீர் என கட்சிகளை ஆதரித்து அதற்கு ஆள் சேர்ப்பது அறிவற்ற செயலாகவே தோன்றுகிறது.

    ReplyDelete
  8. கட்சியின் கொள்கைகளில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விலகி சென்று கொண்டிருக்கிறது.

    சொன்னவர் அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான வினோத்பின்னி.

    ReplyDelete
  9. எத்தன தடவை தான் கட்சி தாவல் ......

    ReplyDelete
  10. கேஜ்ரிவாலை வைத்து ஆம் அத்மியை எடை போடுவதா? அல்லது உமர் தம்பியை வைத்து ஆம் அத்மியை முடிவு செய்வதா?

    பழனி பாபா சென்னது ஷைத்தான் கட்சி ஆரம்பித்தாலும் அதில் முஸ்லிம்கள் சேருவார்கள்

    ReplyDelete
  11. நடுத்தெரு எஸ் டி பி ஐ துனைத்தலைவர் என்ற போர்ட் கடைத்தெருவை விட்டு இன்னும் அகளவில்லை அதற்குள் வேறு கட்சியிலா? அலி அக்பர் எஸ் டி பி ஐ இருக்காரா இல்லை அதிரை நிர்வாகிகள் தெளிவுப்படுத்தவும்

    http://theadirainews.blogspot.in/2014/01/sdpi.html

    ReplyDelete
  12. SHARE THIS STORY CommentComment ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இந்தியா 'ஆப்' கட்சிக்குள் அடிதடி.. ரகளை.. அடக்க முடியாமல் திணறும் அரவிந்த் கேஜ்ரிவால்

    Read more at: http://webcache.googleusercontent.com/search?q=cache:http://tamil.oneindia.in/news/india/aap-will-have-tough-time-resolving-divergent-views-on-key-issues-191421.html&safe=active

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு ஆலைக்கும்
    ஏனப்பா உமர் தம்பி என்னாச்சி உனக்கு நான் உன்னை எதிர் பார்க்க வில்லையே
    ஒழுங்கா ஒரு இயக்கத்தில இருப்பா.

    ReplyDelete
  14. ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்கைய்யா நமதூருக்கே உரித்தான பஸாது பேச ஆரம்பிச்சுட்டாங்கைய்யா. ரொம்ப நாளா செய்தி ஒன்றும் இல்லாமல் இருந்தது வந்துடுச்சு இப்பொழுது பாவத்தை அள்ளி கொட்டிக்கொள்ள.

    சகோதரர் உமர்தம்பி அவர்களின் சிறு பாவங்கள் மண்ணிக்கப்பட இது ஒரு வாய்ப்பு. அதாவது பிறர் செய்த குற்றத்தை மறைக்கும்படி ஹதீத் கூறுகிறது. அப்போ செய்யாத குற்றத்தை அசைபோடும்பொழுது, பேசப்பட்டவரின் பாவங்கள் மண்ணிக்கப்படுவதாக கேள்வி. பஸாது பேசியவருக்கு பன்மடங்கு பாவம் எழுதப்படும் என்பதும் ஹதீதின் கருத்து.

    ReplyDelete
  15. சகோ. உமர் தம்பி அவர்கள் தன்னார்வலராகத் தான் உறுப்பனர்களை சேர்த்து வருகிறார். தமிழக அளவில் யாருக்கும் இன்னும் பொறுப்புகள் அளிக்கப்படவில்லை. குற்றப்பிண்ணனி விசாரணைக்குப் பின்தான் யாருக்கும் பொறுப்புகள் அளிப்பார்கள்.

    ஊழல் கட்சியான திமுக கூட்டணியின் மமக, எஸ்டிபிஐ இணைந்ததை அதன் தொண்டர்களால் ஜீரணிக்க முடியாமல் பலர் அதிலிருந்து விலகி ஆஆகட்சியில் இணைந்து வருகின்றனர். நமதூரிலிருந்தும் மமகவிலிருந்து சிலர் விலகி ஆஆகவில் சேர்ந்துள்ளனர். மேலும் சிலர் ஆஆகட்சியில் இணைவதாக என்னிடம் சொல்லிவருகிறார்கள். ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்கள்,கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் என ஏராளமானோர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

    ஊழலை ஒழிக்க ஒரு இயக்கம். நானும் சமீபத்தில் அதில் இணைந்துகொண்டேன்.

    உறுப்பினராக விரும்புவோர் www.aamaadmiparty.org/join-us சென்று பதிந்து கொள்ளலாம்.

    Tanjore, Nagapattinam, Tiruvarur : Venkateswaran no. 9443689725
    chennai:7667910234, 9543701001.

    ReplyDelete
    Replies
    1. ஊழல் எதிர்ப்பில் ஆர்வமுள்ள நல்லுள்ளங்கள் அனைவரையும் ஆம் ஆத்மி கட்சியில் சேர அழைக்கிறேன். எனது கைப்பேசி எண்:006-016-6846123

      Delete
  16. சகோ. மாஹிர் அஸ்ஸலாமு அலைக்கும்

    ஆம் ஆத்மியி இணைவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விடயம் அதேபோல் அதற்கு அழைப்பதும் அக்கட்சியின் அனுதாபியாக உங்களைப்போன்றவர்களுக்கு உள்ள ஆர்வம் எதார்த்தமானதே..!!

    ஒருவேளை இக்கட்சியும் வழக்கமான அரசியல் கட்சியின் லிஸ்டில் சேர்ந்தால் என்ன செய்வோம்...!! ஏற்கனவே பல கட்சிகளில் உறுப்பினர்களாக இருந்து இப்போது திடீரென இக்கட்சியில் உறுப்பினராக சேர்வதை ஆர்வக் கோளாறு என்றுதான் நான் கருதுகிறேன்.

    யாரோடும் கூட்டணி வைக்காமல் சாதிக்கப் பிறந்த சமுதாயமாக நாம் இல்லையே..!! மமக.மு.லீக்.எஸ்டிபிஐ போன்றவை வேறு வழியில்லமல் திமுக வை ஆதரிப்பதாகவே நான் கருதுகிறேன்.. அதற்கு மாற்றுவழி ஆம் ஆத்மி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

    வேண்டுமானால் இருக்கக்கூடிய அனைத்து அமைப்புகளும் ஒன்று சேர்ந்து தனியாக தேர்தலை சந்திக்கலாம்


    அதற்கும் வக்கற்ற சமுதாயம் நாம்..

    எதைத் திண்டால் பித்தம் தீறும் என்கிற கணக்கில் அர்த்தமற்ற ஒரு மருந்தை தேடிச் செல்வதே இந்த ஆம் ஆத்மியில் நம் சமுதாய மக்களின் ஆர்வம் என்பதாகவே எனக்குப் படுகிறது.

    ReplyDelete
  17. வ அலைக்கும் சலாம்

    திமுகவின் புறங்கையை நக்குவதற்காக எதிர்பார்த்து மூன்று அமைப்புகளும் நிற்பது படுகேவலம். (எஸ்டிபிஐயும் திமுகவின் சீட்களுக்கு எதிர்பார்த்து கொண்டுள்ளது)

    வடநாட்டு முஸ்லிம்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். மோடியை எதிர்க்கும் துணிவு ஆம்ஆத்மிக்கே இருக்கிறது. கடந்த தில்லி தேர்தலிலும் முசுலிம்கள் ஆத்மிக்கே உறுதியளித்து வாக்களித்துள்ளனர்.

    (இவ்வளவு பேசுறோமே, தில்லி சென்று கெஜ்ரிவாலை சந்திக்க மமக தலைவர் ஒருவர் முயற்சித்தது எத்தனை பேருக்குத் தெரியும்?)

    ReplyDelete
    Replies
    1. சகோ மாஹிர் அவர்களே! ஊழல் இலஞ்சம் ஒழிப்பு என்பது புண்ணுக்கு மருந்திடுவது போன்றது... ஆனால் மதவாத பாசிசம், ஜாதிய ஆதிக்கம் என்பது புற்று நோய் போன்றது. புண்ணுக்கு மருந்திட வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை ஆனால் புற்று நோய் பரவாமல் தடுக்க நோய் கிருமியை அகற்ற வேண்டும்... இதில் ஆம் ஆத்மியின் நிலை புண்ணுக்கு மருந்திடுவது மட்டுமே! (சமாளிக்காமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தாருங்கள்)

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. மேலே கூறப்பட்ட தவறான கருத்துக்கள் மட்டும் எங்கள் ஆம் ஆத்மி கட்சி பெயரை வைத்து தவறான கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர் அவர்கள் நம் மக்களிடம் குழப்பத்தை உண்டாக்குவதற்காக மட்டும் அவர்கள் மோடி க்கு ஆதரவாளர்கள். தஞ்சாவூர் மாவட்ட அளவில் உறுப்பினர் சேர்க்கையை ஜனாப். உமர் தம்பி மரைக்காஅவர்களிடம் தஞ்சை பொருப்பாளர் வெங்கடேஸ் அவர்கள் உறுப்பினர் புத்தகத்தை கொடுத்து உறுப்பினர் சேர்க்க சொல்லியுள்ளார்கள் மேலும் சென்னை நிர்வாகி கணேசன் அவர்களும் ஒரு வாரத்திற்குள் 500 உறுப்பினர்களை சேர்க்கும்படி சொல்லியுள்ளார்கள் அதன் படிதான் உமர் தம்பி அவர்கள் உறுப்பினர் சேர்த்து வருகிறார்கள் அவர்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை , பொறாமையின் காரணமாக வதம்பிகளை பரப்புவர்களை நம்ப வேண்டாம்.

    ReplyDelete
  22. என்ன சகோதரரே... 500 பேரை சேர்க்கச் சொன்னால் இன்னும் சரியான அளவில் அறிந்து கொள்ள முடியாத ஒரு கட்சிக்கு ஆள் சேர்த்துவிடுவதா? டெல்லி வெற்றி மட்டும் ஒரு கட்சியை பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பா?

    பா.ஜ. கவை எதிர்ப்பது மட்டும் ஒரு கட்சியை சமுதாய ஆதரவு கட்சி என்று நினைப்பது அறிவின்மை.

    ஏற்கனவே இருக்கும் சமுதாயக் கட்சிகளை வலுப்படுத்தலாமே அதை விட்டு திடீரென இக்கட்சியில் சேர்ந்து அதுவும் சரியில்லை என்றால் சேர்ந்தவர்களை நட்டற்றில் விடுவதா?

    சமுதாயக் கட்சிகள் சுயநலத்துடன் தி.மு.க போன்ற ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததுதான் ஆம் ஆத்மியில் இணைய காரணம் என்றால் இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்ற? சென்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு இதேபோன்று காரனம் சொல்லப்பட்டது.
    இருந்துகொண்டே எதிர்ப்பைக் காட்டி அவர்களுக்கு புரிய வைப்பதுதான் சிறந்த செயல்.

    இக்கட்சி சிறப்பாக வர வேண்டும்.. மதவாதத்திற்கு எதிராக அமைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. ஆனால் சரியான அளவில் புரிந்து கொள்ள முடியாத இக்கட்சியில் திடீரென மக்களை சேர்த்து நம் மக்களின் அவசர புத்தியை என்னவென்று சொல்வது?

    ReplyDelete
  23. ஆம் ஆத்மி கட்சி முதலில் தங்களது சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களின் நலன் சார்ந்த கொள்கைகள் என்ன என்பதை தெளிவுபடுத்தவேண்டும். அவர்களின் உட்கட்சி சட்ட விதிகளில் எங்கும் இதுபோன்று சொல்லப்படவில்லை.
    தற்பொழுது அக்கட்சியின் வினோத் பின்னி என்ற சட்டமன்ற உறுப்பினர் இப்பொழுது கருத்து முரண்படுகிறார். காரணம் என்னவென்று உறுதியாக கூற முடியவில்லை. அவர்கள் அல்லாஹ்விற்காக செய்யவேண்டும் என்ற உளத்தூய்மையுடன் கூடிய நிபந்தனையற்றவர்கள், ஆதலால் அவர்கள் பின்னால் செல்வது என்பது எந்த அளவிற்கு இஸ்லாத்திற்கு ஒத்துப்போகும் என்பதை நினைத்துப்பார்க்க முடியாது.
    ஆகையால் தயவு செய்து சற்று தீர ஆராய்ந்து நம் மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்டுவிட்டு முடிவெடுங்கள்.

    ReplyDelete
  24. இன்று முளைத்த கட்சி சோடா பாட்டில் கேஸ் மாதிரி போய்விட்டால் சகோதரர் உமர் தம்பி, சகோதரர் அலி அக்பர் போன்றோர் எந்த கட்சிக்கு தாவலாம் என்று முன் கூட்டியே யோசித்து வைத்திருப்பார்கள், அந்த திட்டத்தையும் அவர்கள் தங்கள் புதிய உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டால் அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்படலாம்.

    ReplyDelete
  25. ஒட்ட பிரிச்சி காசு பாக்கும் நேரம் " தேர்தல் களம்" அரசியலில் சேர்வது விலகுவது அவரவர் விருப்பம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.