.

Pages

Wednesday, January 8, 2014

செக்கடி மேட்டு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரசின் விலையில்லா பொருட்கள் !

முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி ரேஷன்கார்டு தாரர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பொங்கல் பொருட்களாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூ.100 வழங்கப்படும் என்ற அறிவிப்பை அடுத்து நேற்று மாலை 4.30 மணியளவில் அதிரை செக்கடி மேட்டில் அமைந்துள்ள ரேஷன் கடையின் வாடிக்கையாளர்களுக்கு உணவு வட்ட வழங்கல் அலுவலர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலபிரிவின் செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ், அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் பிச்சை, அதிரை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சிவக்குமார், உதயகுமார், அதிமுக அதிரை நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.


2 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி. .

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. ஹாஜா மற்றும் அஷரப் ஆகியோர்களுக்கு இனிய மாட்டுபொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.