பல்வேறு தரப்பு கோரிக்கைகளின் அடிப்படையில் அதிரைக்கு நேற்றைய தினம் தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மகிழங்கோட்டை பகுதிக்கு ஒரு நாள் மாத்திரம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மகிழங்கோட்டை ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட அப்பகுதியினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த பகுதிக்கு நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்தகெடு இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் அதிரை பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் இன்று நள்ளிரவில் அதிரை குளங்களுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சியினரோடு நல்ல தொடர்பை வைத்துள்ள அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலபிரிவின் செயலாளருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் அவர்களும் தனது முயற்சியாக சம்பந்தபட்ட துறை அலுவலர்களிடமும், மக்கள் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தவண்ணம் இருந்து வந்தார்.
இன்று தண்ணீர் திறந்துவிடப்படும் போது தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலபிரிவின் செயலாளருமாகிய அதிரை அப்துல் அஜீஸ், அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் பிச்சை, அதிரை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சிவக்குமார், உதயகுமார், ஹிமாயத்துல் இஸ்லாம் சங்க துணைதலைவர் குலாப்ஜான் அன்சாரி, அதிரை TIYA தலைவர் ஜமாலுதீன், சமூக ஆர்வலர் முகம்மது அப்துல்லா, அதிமுக அதிரை நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி, மகிழங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மகிழங்கோட்டை கிராம ஆர்வலர்கள் மற்றும் அதிரை இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைதொடர்ந்து அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் பிச்சை தலைமையில் மேற்கே உள்ள சிஎம்பி வாய்க்காலை பார்வையிடச்சென்றனர்.
நேற்று இரவு முதல் அதிரை TIYA அமைப்பினர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை கண்டறிந்து சரிசெய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டால் அவற்றை கண்டறிந்து சரிசெய்ய இருப்பதாக உத்தேசித்துள்ளனர். இதற்காக உடைப்பு ஏற்படும் பகுதிகளில் மணல் மூடைகளை ஆங்காங்கே சேமித்து வைத்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக மகிழங்கோட்டையை சேர்ந்தவர்களும் இரவு நேர பணிகளில் ஈடுபட உள்ளனர்.
தண்ணீரின் வேகத்தை குறைப்பதற்காக ஆங்காங்கே மணல் மூடைகளை வைத்து தேக்கி வைத்துள்ளனர். சிஎம்பி வாய்க்கால் ஈரப்பதமாக இருப்பதால் தண்ணீர் சீராக விரைவில் அதிரைக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி. .
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.