.

Pages

Wednesday, January 8, 2014

மரைக்கா, செக்கடி குளங்களுக்கு வரத்தொடங்கிய தண்ணீர் ! அதிரை SIS, TIA நிர்வாகிகள் நேரில் ஆய்வு !!

நேற்று மாலை அதிரையின் வறண்ட குளங்களுக்கு மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் அதிரையின் குளங்களுக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கின்றன.

சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள மரைக்கா குளம், தண்ணீர் முழுமையாக நிரம்பாமல் உள்ள செக்கடி குளம் ஆகியவற்றிற்கு சென்று கொண்டிருக்கின்றன. இதனால் இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

இன்று காலை அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைதலைவர் ஹாஜி M.S. ஷிஹாப்புதீன், தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் துணைதலைவர் P.M.K தாஜுதீன், செயலாளர் ஜஃபருல்லா மற்றும் அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலபிரிவின் செயலாளருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் ஆகியோர் தண்ணீர் வரத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்த தண்ணீர் வரத்து தொடர்ந்து சில நாட்களுக்கு வரத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள ஒவ்வொரு குளங்களுக்கும் ஒன்றபின் ஒன்றாக தண்ணீர் நிரப்பப்படும் என தெரிகிறது. வாய்க்காலில் உடைப்பு - அடைப்பு ஏற்படாதவாறு ஆங்காங்கே இளைஞர்கள் பலர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.





4 comments:

  1. இதே போன்று ஒற்றுமையாக செயல்பட்டால் நாம் எதையும் சாதிக்கலாம்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி. .

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.