தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சி நடக்கும். இதில் லட்சக்கணக்கான வாசகர்கள் பங்கேற்று புத்தகங்களை வாங்கி குவிப்பர். இம்முறை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த கண்காட்சி இன்று துவங்கியது. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 777 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் – வாசகர் கலந்துரையாட தனி அரங்கு, குறும்படங்கள் வெளியிட வயதானோர் ஓய்வெடுக்க தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியும் “108″ அவசர கால மருத்துவ உதவி வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்பிக்கும் போட்டிகள், இளைய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்க சிறுகதைப் போட்டி ஆகியவை நடக்க உள்ளன.
இதற்கிடையில் இன்று நடக்கும் துவக்க விழாவில் சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார நாட்களில் பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை; விடுமுறை நாட்களில் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.
நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி. .
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.