.

Pages

Tuesday, January 28, 2014

ட்ரிங் ட்ரிங்! ட்ரிங் ட்ரிங்!! ஹலோ, அதிரை மின்சார வாரியமா?



ட்ரிங் ட்ரிங்! ட்ரிங் ட்ரிங்!! ஹலோ, அதிரை மின்சார வாரியமா?

ஆமாம், பியூஸ் ஏதும் போச்சா சார்?

பியூஸ் ஒன்னும் போகலே, இன்று ஜனவரி, செவ்வாய்கிழமை தேதி 28ஆச்சே மாதாந்திர பராமரிப்புக்கு மின் நிறுத்தம் செய்வீங்களே அது எப்போ சார்?

ஏன் சார், எதுக்கு கேக்குறீங்க?

வேறு ஒன்னும் இல்லே, நாளைக்கு எங்க வீட்டுலே ஒரு பங்க்ஷன் வைத்து இருக்கேன் அதுக்குதான் கேட்டேன்.

ஒ!! அதுவா சார், நாங்க நாளைக்கு  புதன்கிழமை 29ம்தேதி காலை 9மணி முதல் மாலை  6மணி வரை பவர் கட் இருக்கும் சார்.

அட! நீங்களும் நாளைக்குதானா? அதுசரி, மின்சாரம் சரியாக மாலை 6மணிக்கெல்லாம் வந்துருமா சார், ஏனென்றால் நாளைக்கு குடிதண்ணீர் வருகின்ற நாளாச்சே.

அதுக்கு முன்னாடியே கொடுக்க முயற்சிக்கிறோம் சார்.

ஓகே நன்றி சார்.

சரி சார்.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டை.



10 comments:

  1. நாங்கள் போன் செய்தால் மின்சார வாரியம் கண்டுக்கொள்வதே இல்லை. அது எப்படி நீங்கள் போன் செய்தால் உடனே பதில் கொடுக்கிறார்கள் ?

    சின்னச் சின்ன ஆசை
    தெரிந்துக் கொள்ள ஆசை.

    ReplyDelete
    Replies
    1. நான் போன் செய்து அவர்கள் எடுக்கலைன்ன அடுத்தது உயர் அதிகாரிகளுக்கு போய்விடுமே.

      Delete
    2. எங்களுக்கும் அந்த உயர் அதிகாரியின் தொடர்பு எண்ணை தெரிவித்தால் நல்லது.

      Delete
    3. எண்ணை தமிழில் தரவா? அரபியில் தரவா? எப்படி வேண்டும்?

      Delete
  2. தெரியாதோ நோக்கு...
    தொலைபேசின்னா...
    தொல்லை பேசி...
    அதனால்
    மின்சார ஆபிசுக்கு
    அலர்ஜி...

    ReplyDelete
    Replies
    1. அந்த அலர்ஜிக்கு அப்பப்போ மருந்து கொடுத்துக்கொண்டே இருக்கணும்.

      Delete
  3. அவர்கள் தொலைபேசியைத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டார்கள் !

    ReplyDelete
    Replies
    1. அவர்களிடம் பெரிய ஒரு மந்திரவாதி இருக்கின்றாராம்.

      Delete
  4. அப்போ.........மின்சாரவாரியத்தைக் கேட்டுக்கிட்டு தான் வீட்டு விஷேசத்தை நிச்சயம் பண்ணணுமோ.???

    ReplyDelete
    Replies
    1. விசேஷம் என்ன, நீங்க ஊருக்கு வருவதாக இருந்தாலும் முதலில் அவர்களிடம் கேட்ட பிறகே ஊருக்கு போக கம்பெனிக்கு லட்டர் கொடுக்கணும்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.