.

Pages

Sunday, January 26, 2014

அதிரை நகர காங்கிரஸார் கொண்டாடிய குடியரசு தின நிகழ்ச்சி [ புகைப்படங்கள் ]

இந்திய குடியரசு பெற்று 64 ஆண்டுகள் கழிந்து 65 வது ஆண்டை நோக்கிச் செல்லும் இந்த தினத்தில் இன்று காலை 8 மணியளவில் மெயின் ரோடு M.M.S வணிக வளாகத்தின் கார்னரில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் குடியரசு தின கொடியேற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.

அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம் தலைமையிலும், நகர செயலாளர் சிங்காரவேலு, பட்டுக்கோட்டை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அதிரை  மைதீன், நகர  இளைஞர்  காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஜலீலா ஜுவல்லரி முகைதீன் ஆகியோர் முன்னிலையில் இனிதே துவங்கியது.

பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அதிரை நகர காங்கிரசார் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து அதிரையின் முக்கிய பகுதிகளுக்கு பேரணியாக சென்று அங்கே அமைந்துள்ள காங்கிரஸ் கொடிக்கம்பத்தில் கொடியேற்றும்  நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இறுதியாக 8 வது வார்டு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சேனாமூனா ஹாஜா முகைதீன் நன்றியுரை வழங்கினார்.








4 comments:

  1. அருமையாக புகைப்படத்தினை தந்த அதிரை நியூஸ்க்கு நன்றிகளும் மற்றும் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  2. குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.