.

Pages

Friday, January 31, 2014

ஆதார் அட்டை மூலம் மானியம் வழங்கும் திட்டம் ரத்து ! வழக்கறிஞர் Z. முஹம்மது தம்பி தகவல் !!

ஆதார் அட்டை மூலம் மானியம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ், சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானிய தொகையை பயனாளிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தும் முறையை 18 மாநிலங்களில் உள்ள 289 மாவட்டங்களில் மத்திய அரசு அமல்படுத்தியது.

இந்த திட்டத்தின்படி, சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்குவோர் சந்தை விலையான 1,258 ரூபாய் கொடுத்து சிலிண்டரை வாங்கிக்கொள்ளவேண்டும். அந்த சிலிண்டருக்கு உரிய மானிய தொகையை அவர்களுடைய வங்கி கணக்கில் அரசு செலுத்திவிடும். இதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால், இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் இதுபற்றி வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறுகையில்;

ஆதார் அடையாள அட்டையின் அடிப்படையில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானிய தொகையை பயனாளிகளின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை ரத்து செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் யாரும் ஆதார் அட்டைக்காக அலைந்து தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு,
Z. முஹம்மது தம்பி BA., BL
9865997450

2 comments:

  1. இதுபோன்ற நிகழ்வுகளை இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து செய்தால் வியக்கத்தக்க மக்களிடம் வீறுகொண்டு வெளிச்சமாய் விளங்கும்

    ReplyDelete
  2. இதுபோன்ற நிகழ்வுகளை இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து செய்தால் வியக்கத்தக்க மக்களிடம் வீறுகொண்டு வெளிச்சமாய் விளங்கும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.