.

Pages

Tuesday, January 21, 2014

அதிரை நியூஸ் செய்தி எதிரொலி சாலை மறியல் போராட்டம் வாபஸ் !

அதிரை முத்தம்மாள் தெரு கிராம பொதுமக்கள் சார்பாக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்துறை ஆகியோரை கண்டித்து நாளை [ 22-01-2014 ] காலை 10 மணியளவில் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்றும் இதில் அதிரை நகர மக்கள் பங்கேற்க வேண்டும் என்ற முத்தம்மாள் தெரு வாசிகள் சார்பில் அழைப்பு விடப்பட்டது. இது குறித்த செய்தி அதிரை நியூஸில் நேற்று வெளியிடப்பட்டன.

இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். இதில் வட்டாட்சியர், அதிரை காவல்துறை ஆய்வாளர், அதிரை பேரூராட்சி செயல் அலுவலர், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர், முத்தம்மாள் தெருவாசிகள் சுமார் 50 பேர்கள் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் விரைவில் அப்பகுதியில் சமுதாயக்கூடம் அமைப்பதற்குரிய நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் கடிதம் மூலம் உறுதியளித்ததை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்படுவதாக முத்தம்மாள் தெருவாசிகள் தெரிவித்தனர்.

முத்தம்மாள் தெருவாசிகளுக்கு வழங்கிய உறுதிமொழி கடிதத்தில் வட்டாட்சியர், அதிரை காவல்துறை ஆய்வாளர், அதிரை பேரூராட்சி செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்டவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.