இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். இதில் வட்டாட்சியர், அதிரை காவல்துறை ஆய்வாளர், அதிரை பேரூராட்சி செயல் அலுவலர், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர், முத்தம்மாள் தெருவாசிகள் சுமார் 50 பேர்கள் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் விரைவில் அப்பகுதியில் சமுதாயக்கூடம் அமைப்பதற்குரிய நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் கடிதம் மூலம் உறுதியளித்ததை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்படுவதாக முத்தம்மாள் தெருவாசிகள் தெரிவித்தனர்.
முத்தம்மாள் தெருவாசிகளுக்கு வழங்கிய உறுதிமொழி கடிதத்தில் வட்டாட்சியர், அதிரை காவல்துறை ஆய்வாளர், அதிரை பேரூராட்சி செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்டவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.