.

Pages

Saturday, April 5, 2014

அதிரையில் ADT நடத்தும் கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம் அறிவிப்பு !

அதிரை தாருத் தவ்ஹீத்தின் [ ADT ] அங்கமாகிய பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையம், கடற்ரைதெரு அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, சிஎம்பி லேன் ஏ.எல். மெட்ரிக் பள்ளி ஆகியவை இணைந்து ஆண்டு தோறும் கோடை விடுமுறையில் நடத்துகின்ற பள்ளி - கல்லூரி மாணவ / மாணவியருக்கான இஸ்லாமிய நல்லொழுக்க பயிற்சி முகாம் எதிர்வரும் [ 03-05-2014 ] அன்று முதல் [ 15-05-2014 ] வரை மாணவர்களுக்கு பிலால் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய பயிற்சி மையத்திலும், மாணவிகளுக்கு CMP லேனில் அமைந்துள்ள AL மெட்ரிக் பள்ளியிலும் வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

இதற்கான அறிவிப்பு தட்டிகள் நகரின் பிராதான பகுதிகளில் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த அறிவிப்பு தட்டிகளில் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாண‌விகள் முன்பதிவு செய்துகொள்ளவும், விண்ணப்ப படிவங்களை பெற்றுகொள்ளவும், மேலதிக தகவல் பெறவும் அதிரை தாருத் தவ்ஹீதை அணுக அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


4 comments:

  1. நல்ல பாட திட்டங்கள், நல்ல முயற்சி, அனைவரும் தங்கள் வீட்டு குழந்தைகளை அனுப்பி பயன்பெற செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. இங்கேயும் சமுதாய அமைப்பின் ஊடுரவல் தொடங்கி விட்டன.......... ADT ஜாக்கிரதை.

    ReplyDelete
  3. நம்ம சமுதாயத்தில் ஒற்றுமை இல்லை. நாம் சமுதாயத்தில் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும் அதை முதலில் கற்று கொடுங்கள்.

    ReplyDelete
  4. மாணவர்களும் மாணவிகளும் தங்களின் விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் கழித்திட இந்த முகாமில் சேர்ந்து பயில முன்வர வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.