.

Pages

Tuesday, April 15, 2014

பட்டுக்கோட்டை சாலையில் நடந்த வாகன விபத்தில் அதிரையர் பலத்த காயம் !

அதிரை பிள்ளைமார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் [ வயது 35 ] இன்று மதியம் பட்டுக்கோட்டையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் அதிரையை நோக்கி வந்துகொண்டிருக்கையில் மாளியக்காடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக வாகனத்தோடு சறுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் காயமடைந்த பாலசுப்பிரமணியனை ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


5 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    உதவிகள் செய்த அக்கம் பக்கத்தினர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. பூரண குணமடைய பிராத்திப்போம்.

    ReplyDelete
  3. பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
    பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
    ந‌ன்மை கடலிற் பெரிது.

    திருக்குறள் 103

    ReplyDelete
  4. உதவி செய்தவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  5. யாரு பெத்த பிள்ளையோ, பெறோர்கள் மனது எப்படி இருக்கும். திருமணம் ஆகி இருந்தால் மனைவியின் மனம் எப்படி இருக்கும். வாகன ஓட்டிகளே உங்களை எப்படி வர்ணிப்பது? எவனோ செய்கின்ற தப்பினால் எல்லா வாகன ஓட்டிகளும் குற்றவாளிகளா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.