.

Pages

Wednesday, April 23, 2014

சவூதியிலிருந்து ஹாஜி ஸாருக்கு அதிரை ஜாஃபர் எழுதும் கடிதம் !

மறக்க முடியவில்லை ஹாஜி சார்...!!

அரிது அரிது மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரிது
                       
கற்கத் தகுந்த நுல்களைக் குற்றமின்றி கற்று, அக்கல்வியை தன்னலமின்றி பிறருக்கு கற்றுக் கொடுப்பதே ஆசிரியர்களின் குறிக்கோள். உலகில் மக்கள் செய்யும் தொழில்கள் பல காணப்பட்டாலும், ஆசிரியர் தொழிலே சிறந்தது. இதற்கு இணையான தொழில் வேறொன்றில்லை. மக்களின் அறியாமையை நீக்குவதால்தான் ஆசிரியப்பணியே அறப்பணி, அதற்கே தன்னை அர்ப்பணி ,தியாகப்பணி,  சமூகப் பணி என்று  எல்லோராலும் சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற கருத்தை மனதில் கொண்டு பணியாற்றுகின்றனர்.

அந்த வகையில் அதிரை மற்றும் அதை சுற்றி உள்ள ஊர் மாணவர்களுக்கு கல்வி வழங்கிய மேதைகளில் ஹாஜி முஹம்மது சாருக்கு மிக முக்கிய இடம் உண்டு. தனக்காக வாழாமல் மாணவர்களுக்காக வாழும் தன்னலமற்ற ஆசிரியர்களில் ஹாஜி சாரின் பணி மகத்தானது.

இவரிடம் கல்வி பயின்ற மாணவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டினால் தலைநிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் வெட்கத்தால் நாணி நிற்கும் மாணவர்களைக்  கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களை வெற்றிப் பாதையில் செலுத்தும் சிறந்த ஆசிரியராக வலம் வந்தவர் ஹாஜி சார். இன்றளவும் மாணவர்கள் மனதில் அழியாமல் நிற்கும் சிகரம் இந்த ஹாஜி சார். இவரின் சேவை  உண்மையிலேயே தாய்க்கும், பிள்ளைக்குமான உன்னதமான நிமைமை அன்று.

சிறந்த அர்ப்பணிப்பு உணர்வு, எந்த சுயநல நோக்கமும் இல்லாமை, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை உறுவாக்கியவர் இவர்

மற்றவர்கள் தவறு என்று விமரிசித்தாலும், தனது சுய சிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தவர்.  கும்பலோடு கும்பலாய்க் கரைந்து போய்விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியமிக்கவர் ஹாஜி சார்.

கற்கை நன்றே, கற்கை நன்றே
                பிச்சைப் புகினும் கற்கை நன்றே

என்பதற்கேற்க கல்வியை பிறரிடம் இரந்தாவது கற்க வேண்டும். அத்தகைய கல்வியைப்  புகட்டும் ஆசிரியப் பணிக்கு சிறந்ததொரு நிலையை நிறுத்தி காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியிலிருந்து விடை பெற்றாலும்...

எங்கள் மனதை விட்டு விடை பெறாத ஆசிரியப் பெருமகன் ஹாஜி முஹம்மது அவர்கள் நோயற்று நீடூடி வாழ வேண்டும் என்று  வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்

என்றும் பிரியத்துடன் உங்கள் முன்னாள் மாணவன்

ஜஃபருல்லாஹ் 
(கா.மு மேல் நிலைப் பள்ளி 1990 வரை)

11 comments:

  1. முன்னால் மாணவர் ஜபருல்லாஹ் மடல் அவர் ஏறிவந்த ஏணிப்டிகளை திரும்பிப்பார்த்து நன்றி கடன்செழுத்தியது போன்று அமைந்து இருந்தது. நன்றி

    ReplyDelete
  2. நண்பர் ஜாஃபர் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் பெரும்பாலான நேரங்களில் ஹாஜி ஸாரை பற்றி அடிக்கடி விசாரிப்பது உண்டு.

    ReplyDelete
  3. ஜபருல்லாஹ், உன் வாழ்த்துக்கள் அருமை, உன் போட்டோவை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது அவரிடம் அடிக்கடி அடி வாங்கியது - அவனா நீ ! முடிந்தால் உன் கைபேசி எண்ணை பதிவு செய்யவும்.

    ReplyDelete
  4. சந்தோசம்...மஸ்தான் கனி,, உங்கள் ஈ மெயில் ஐடி யை தரவும்.. தனி மடலில் தொடர்பு கொள்கிறேன்.மொபைல் எண் பொதுவில் பதிவதில்லை.

    ReplyDelete
  5. இந்த ஹாஜி முகம்மது சார் காரனமாக அதிரையர்கள் அதிகம் பயன் அடைந்துள்ளார்கள் மிக்க நன்றி உங்கள் எதிர்கால வாழ்விற்கும் மறுமைக்கும் துவா செய்வோம்.

    ReplyDelete
  6. நான் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஹாஜி சார் ஆசிரியராக பணி புரியாததால் அவர்களைப் பற்றி எனக்கு தெரியாவிட்டாலும் தாங்களின் பகிர்வு மூலமாக அவர்களைப் பற்றி அறிந்து திறமையான பல மாணவர்களை உருவாக்கிய நல்ல ஆசிரியர் என்பதை புரிந்து உங்களது பாராட்டில் நானும் கலந்து கொள்வதுடன் அவர்களது ஓய்வு காலம் நிம்மதியுடன் நல் சுகத்துடன் சிறந்து விளங்க துவா செய்கிறேன்.

    ReplyDelete
  7. ஹாஜி சார் உதவியால் பலவற்றை நான் மட்டும் அல்லாமல் பல மாணவர்களில் கற்றுள்ளனர். அவரின் சின்ன சின்ன சொல்கள் கூட விளையாட்டாக காமெடியாக நாங்கள் எடுத்துகொள்வோம் ஆனால் அவரின் வகுப்பைறையில் சிரித்தால் அதுக்கு வேற டிரிட்மெண்ட்தான்.

    அவர் சொன்ன வார்த்தைகளில் சில மறக்க முடியாதவை:‍‍

    கடற்கரைதெரு யாசர் ஒருநாள் வகுப்பைறைக்கு லேட்டாக வந்துவிட்டான்,வந்தவனைபார்த்து ஹாஜி சார் எங்கிருந்துப்பா வார என்று கேட்க ஹாஜிசார் கடற்கரைத்தெருவில் இருந்து சொன்னவுடன் ஹாஜிசார் அதற்கு காஷ்மீர் பக்கம் இருக்கே விமானம் பிடித்து வரலேட்டா ஆச்சா என்று கூறினார்.

    அதேபோல் இரவு வகுப்பைறையில் படித்து கொண்டு இருக்கும் போது மஹ்ரீப் தொழுல எல்லாரும் சென்று விட்டு பின்னர் வந்துவிட்டனர் சாதிக் லேட்டாக வர என்ன்ப்பா சாதிக் மஹ்ரீப்க்கு 3 ரக்காத்தா இல்ல 30 ரக்காத்தா என்று கூறினார்.

    நண்பர் ராஜா முஹம்மது வகுப்பறைக்கு வரலனு ஹாஜிசார் வீட்டிற்க்கு திருப்பி அனுப்பிவிட்டுவிட்டார் பெற்றோறை அழைத்துவற,பெற்றோரும் வந்துவிட்டனர் பள்ளிக்கு கொக்குபிடிக்க சொல்லுங்க என்று ஹாஜி சார் கூறினார் பெற்றோர் நினைக்க இப்ப பனிஷ்மென்ட் கொக்குபிடிக்க சொல்லுறாங்க புதுஷா இருக்கே ஹாஜிசார் குனிஞ்சி காமிச்சு இதே தான் சொன்னேன் என்று கூறினார்.

    ஹாஜாக்கு ஏர்வாடியில கூட இடம் கிடைக்காது.
    திருத்துறைப்பூண்டில மாத்திரையை போட்டுவிட்டு முத்துப்பேட்டையில தண்ணீர் குடித்து விட்டு அதிராம்பட்டினத்துல வந்துபாடம் நடத்துறேன் என்று கூறியது.

    "தம்பி திருவோடு இருக்கா பேனா பேன்சின் பிச்சை எடுக்க"

    நான் 10ம் வகுப்பி படிக்கும்போது இதேபோல் தேர்தல் சமயம் மாலை 6 மணிக்குமேல தேர்தல் பிரச்சாரம் பன்றாங்க இவனுக்குதான் 6 மணியோட நேரம் முடிஞ்சுருச்சி இவனைலம் பிடிச்சு உள்ளே போடானும் சொன்னது

    திருத்துறைப்பூண்டில இருந்து துவரங்குறிச்சில பஸ் இறங்க மாட்டுவண்டில வந்த போது நம்ம பசங்க லிப்ட் கொடுக்கமா இருசக்கர வாகனத்தினை வேகமாக ஒட்டிவந்து விட்டு வகுப்பைறையில அடிவாங்கியது

    அன்று ஒருநாள் ஹாஜி சார பார்த்தால் எல்லாருக்கும் கை கால் ஆட்டம் கண்டுவிடுமே ஹாஜ நகர் ஹக் ஒருநாள் மாலை வகுப்புக்குவராமல் ஒடும்பொழுது வகுப்பு ஆசிரியர் சீனிவாசன் அவனை பிடித்துவிட்டார் யாரு இன்னைக்கு மாலைவகுப்புனு ஹாஜிசார்னு சொல்றான் ஹாஜிசார் வர வண்டலுர்ல சிங்கம் தப்பிச்சுபோச்சாம் சார் அந்த சிங்கத்த பிடித்து அதன் வாய்ல ஹக்ட தலையவிட்டு கடிக்கவிடனும் சார் என்று ஹாஜி சார் கூற சீனிவாசன் உள்பட ஹாஜ் சார் முன்னாடி எல்லாரும் சிரித்தது அன்றுதான் முதல் தடவை..

    நீங்க பல பேட்ச் மாணவர்களாக இருந்தாலும் பெயரும்,கொடுக்க வேண்டிய ஃப்ன் தொகையை சரியாக சொல்லுவார் இன்றுளவு கூட நான் எல்லாம் ஃப்ன் காசு சார்ட்ட கொடுத்துட்டேன்.

    இன்னும் பல சுவரஸ்யமான தகவல்பல உள்ளன , ஹாஜி சாருக்கு தனி புத்தகமே போடாலாம்.

    ஹாஜிசார் உதவியால் பல மாணவர்கள் அரசியல் வாதிகளாகவும்,அரசு மற்றும் தனியார் பலதுறைகளின் உயர்பதவிகளிலும் சிற்ந்தவர்களாக உள்ளனர். ஹாஜி சாரை இன்று பார்த்தால் கூட "அது என்னானு தெரியல கைகால் எல்லாம் ஆட்டம் கண்டுறுது" அவர் வகுப்பறையில் சிறந்த ஆசியரியர் மாணவர்களை ஊக்குவிப்பாளாரகவும் வெளியில் சிறந்த நண்பரகவும் பலகும் சுபாவம் உடையவர்.

    நீங்கள் பள்ளியை விட்டு ஒய்வு பெற்று விட்டு சென்றாலும் உங்களின் தொடர்பில் பழைய மாணவர்களாக என்றும் இருப்போம் கூறி இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும்,நீண்ட ஆயுளையும்,இம்மை மறுமை அனைத்திலும் வெற்றிப்படும் நபராக இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தூஆ செய்வோமாக.

    என்றும் உங்களுடன்
    ப.அகமது முனாஸ்கான்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. நமதூரில் வட்டி தொழில் அதிகம் பெருக சில வெளியூரை சேர்ந்த வாத்தியார் மார்களே காரணம் மேலும் நமது சமுதாயத்தில் ஊரில் பைக்கில் பெண்களை ஏற்றி செல்லும் கலாச்சாரம் அறிமுகம் செய்யப்பட்டதும் இவர்களாலேயே என்பதில் மாற்று கருத்து கிடையாது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.