.

Pages

Tuesday, April 22, 2014

அதிரையில் நோட்டுக்கு ஓட்டு கேட்பா !?

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை அடுத்து பல்வேறு கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரங்கள் அதிரை நகரில் கடந்த சில வாரங்களாக சூடு பிடித்தன. இதற்காக அதிரையின் முக்கிய பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள், பேரணிகள், முக்கியஸ்தர்கள் சந்திப்பு, ஆட்டோ விளம்பரங்கள், வீடு வீடாகச்சென்று வாக்கு சேகரிப்பு இப்படி பல்வேறு வழிகளில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

இதுவரையில் பரபரப்பாக நடைபெற்று வந்த பிராசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற உள்ள நிலையில் நேற்று இரவு அதிரையின் சில முக்கிய பகுதிகளில் குறிப்பிட்ட சில கட்சியினர் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்தார்கள் என்ற தகவல் அதிரையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வாக்குரிமை என்பது நமது நாடு நமக்கு அளித்த மிகபெரும் வாய்ப்பு. இவற்றை சரியான முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். மனசாட்சிபடி வாக்களித்து நமது ஜனநாயக கடமையை நிலை நிறுத்த வேண்டும். விலைமதிப்பற்ற நமது வாக்கு உரிமையை பணத்திற்காக விட்டுகொடுப்பது தவறான செயல் ஆகும்.

தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை முழுவதுமாக தடுக்கும் நோக்கில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. புகார்களைப் பெற ‘1950’ என்ற எண் கொண்ட இலவச தொலைபேசி 24 மணி நேரமும் செயல்படுத்தி வருகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, வாக்குக்கு பணம் கொடுப்போர் மீதும், பெறுவோர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 171 பி பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும். என்று அறிவுறுத்தியுள்ளது.

நமது பகுதிகளில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா நடைபெற்றால், கீழ் கண்ட எண்களில் தேர்தல் பறக்கும் படையினரை உடனே தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள்.

5 comments:

  1. ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருடம் தண்டனை தான் ஆனால் தவறுதலாக ஓட்டு போட்டால் மக்களுக்கு 5 ஆண்டு தண்டனை அரசியல் வாதிகள் கொடுக்கிறான்.

    பார்த்துகோங்க - யோசனை பண்ணி ஓட்டு போடுங்க.

    காந்தி தாத்தா நல்லா தான் சிரிக்கிறார் அப்போ நாம் பணம் வாங்கினால்.......................
    அஷ்தொவ்பிருல்லாஹ்!

    ReplyDelete
  2. ஓட்டுக்கு பணம் வாங்கினால் ஒரு வருடம் தண்டனை தான் ஆனால் தவறுதலாக ஓட்டு போட்டால் மக்களுக்கு 5 ஆண்டு தண்டனை அரசியல் வாதிகள் கொடுக்கிறான்.

    பார்த்துகோங்க - யோசனை பண்ணி ஓட்டு போடுங்க.

    அதிகாரிகளில் யாராவது ஒருத்தர் இஸ்லாமியர் கிடையாது.

    ReplyDelete
  3. பணக்காரர்கள் மாடி வீட்டுக்காரர்கள் அதிகம் பணத்திற்கு ஆசைப்படுவதாக தெரிகிறது. ஈமான் என்பதெல்லாம் பணத்திற்கு முன் ..... தனக்கு விலை.... சிரிக்கும் காந்தித் தாத்தா பேப்பரா ?
    அற்பங்கள் சொர்ப்பத்திர்க்கு விளைபோகின்றதோ. கேவலம். தலைகுனிவு. மறுமைகளை மறந்துவிட்டவர்கள்....அன்று அடிமைகளை நல்ல விலைக்கு விற்றனர். இன்று பணக்காரர்கள் சொர்ப்பத்திர்க்கு விற்கப்படுகின்றார்கள். வாயில் இஸ்லாம். உள்ளத்தில்....

    ReplyDelete
  4. பாரதத்தில் பணத்தை கொடுத்து காரியத்தை முடித்து விடுகின்றனர். அந்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்ல சேவைகளை செய்து காரியத்தை முடிக்க முயற்சிக்காதது ஏன்? அரசியல் வாதிகள் கெட்டுப்போக பொதுமக்களும் ஒரு காரணம்.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வோட்டு உங்கள் உரிமை, அதை விற்று விட வேண்டாம் என்று வாய் கிழிய இந்திய அரசு கத்திக் கொண்டு இருக்கின்றது.

    பொதுமக்களே நீங்கள் திருந்தவில்லை என்றால் நமதூருக்கு எந்த ஒரு நலனும் கிடைக்க வாய்ப்பே இல்லே.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.