முதல் ஆட்டத்தை அதிரை காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர் அஸ்லம், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், அதிரை அனைத்து மஹல்லா தலைவர் MMS. சேக் நசுருதீன், கீழத்தெரு ஜமாஅத் தலைவர் தாஜுதீன், NMS. மன்சூர், மான் நெய்னா முஹம்மது, சேக்தாவூது, மான் சேக், கால் பந்து விளையாட்டு வீரர்கள் லியாகத் அலி, அன்வர் அலி ஆகியரோடு ESC நிர்வாகிகள் துவக்கி வைத்தார்கள்.
இன்றைய ஆட்டமாக நமதூரைச் சேர்ந்த ESC A மற்றும் ESC C ஆகிய இரு அணிகள மோதிய முதல் ஆட்டத்தை பார்வையாளராக கலந்துகொண்ட ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
மின்னொளியில் இரவு நேர ஆட்டமாக இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கின்ற போட்டிகளில் பல்வேறு ஊர்களைச் சார்ந்த தலைசிறந்த அணிகள் ஆட இருக்கின்றனர். நாளை நடைபெற இருக்கின்ற இறுதி போட்டியில் வெற்றி பெறும் சிறந்த அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
vaalthukal esc guys
ReplyDeleteமின்னொளி கைப்பந்து தொடர் போட்டி சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகள் !!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteமின்னொளி கைப்பந்து தொடர் போட்டி சிறப்பாக நடைபெற என் வாழ்த்துகள் !!!!!!!!!!!!!!!!! வான வேடிக்கை உலக கோப்பைக்கு நிகராக இருந்தது.
ReplyDeleteவாழ்த்துக்கள் மான் சேக் மற்றும் அணைத்து நண்பர்கள்.
அதிரையில் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடரா! ஐயா கவனம், கண்ணொளி பட்டுவிடப் போகுது.
ReplyDeleteஅன்புள்ள சகோதரர்களே.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வுடைய கோபப் பார்வை இந்த அதிராம்பட்டினத்தை வதைக்கின்றது.
பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் நமதூரில் கால் பந்து தொடர் போட்டிகள் மாலை நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு மஃரிபு நேரத்திற்குள் முடிந்து விடும், இது யாரையும் பாதிக்காமல் இருந்தது, ஆனால் இன்றோ மின்னொளி விளையாட்டு என்று பெயரை அறிமுகப்படுத்தி நமதூர் சிறுவர் முதல் பெரியவர்கள்(மார்க்க விபரம் அறிந்தவர்கள்) வரை கலந்து கொண்டு வருகின்றனர்.
இரவு நேரமுழுக்க அதிக ஒலிகளை எழுப்பி சினிமாப் பாடல்கள், இசைகள், அறிவிப்புகள், வண்ண வண்ண வெடிகள், இதன் காரணத்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், பச்சிளங் குழந்தைகள், நோய்வாய் பட்டவர்கள், முதுமை அடைந்தவர்கள், பெரியவர்கள், தஅஜ்ஹத் தொழ எழுந்திருப்பவர்கள், இவர்கள் எல்லோரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
சுபுஹு பாங்கு சப்தம் கேட்டுக் கொண்டு இருக்கின்றது, உங்களின் அறிவிப்பு நிறுத்தப்பட வில்லை, “தூக்கத்தை விட தொழுகை மேலானது” என்று பள்ளியில் ஒலிக்கும் ஒலியைவிட உங்களின் அறிவிப்பு ஒலி அதிகமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியை மாலை நேரத்தில் ஆரம்பித்து மஃரிபுக்குள் முடிக்கலாமே. இப்படி இரவு முழுக்க செய்யணும் என்று கட்டயமா? இதற்க்கு எவ்வளவு பணம் சிலவு ஆகி இருக்கும்? உங்களுடைய முகம், பெயர், எவ்வளவு பணம் போன்ற விபரங்கள் இணையத்திலும், போஸ்டரிலும் வரணும் என்று ஆசைபடும் நீங்கள், அந்த பணத்தை இயலாதவர்கள் எத்தனையோ உங்கள் கும்பத்தில் இருக்கலாம், ஊரில் இருக்கலாம், அவர்களுக்கு கொடுத்து உதவி இருக்கலாமே, உங்களுடையை பெயர் நாளை மறுமை நாளில் நன்மை பக்கத்தில் எழுதப்பட்டு இருக்குமே.
அல்லாஹ் உங்களை நம்பி கொடுத்த பணத்தை வீண் விரயம் செய்யாதீர்கள். அவன் சொன்னபடி செய்தால் பரக்கத் உண்டு.
குடும்பத்தை பிரிந்து பலமைல் தூரம் சென்று கஷ்டப்பட்டு சம்பாத்திக்கும் பணத்தை இப்படி அநியாயமாக சிலவுகள் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது. எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருக்காது. உங்களை நம்பித்தான் ஊரில் உள்ள மனைவி மக்கள் இருக்கின்றோம். நீங்க நல்லா இருந்தாத்தான் நாங்க நல்லா இருப்போம், நீங்க இல்லை என்றால் எங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீ ஊத்த ஒரு நாதியும் கிடையாது.
இனிமேல் யாரும் வசூல் என்று வந்து கேட்டால் கொடுக்காதீங்க, யாருடைய காசில் யாரு ஆட்டம் போடுவது?
இந்த இரவு நேர நிகழ்ச்சியால் ஹராமானது எது நடந்தாலும் அதுக்கு பொறுப்பு நீங்கதான். நமதூரில் ஒரு சின்ன விசேஷம் நடந்தால் முதலில் விற்கப்படுவது மதுபானம்தான்.
அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்
ஹுமைராஹ் சுல்தானாஹ்.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ப்ரதர்ஸ் இது உண்மைதான்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இரவினில் ஆட்டம்-பகலினில் தூக்கம்.
காட்டுப்பள்ளி கந்தூரிக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளன,.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
நேற்று இரவு நோய்யாளிகள் குழந்தைகள் யாரும் தூங்கவில்லை இவர்களின் சாபத்தை இனி மேல் வாங்க வேண்டாம் காவல் துறை இதுபோன்று விடிய விடிய ஒலி பொருக்கியை உபயோகிப்பதற்கு எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை இதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதற்குகாகதான் காவல்துறையை அழைக்கிறார்கள் போலும்
ReplyDeleteஇந்த விளையாட்டால் சிலர் அதிருப்தி தெருவிக்கிரார்கள், ஒரே தீர்வு Indoor Statium தான் தேவை. நம்மவூர்க்கு பரிச்சயமான வேட்பாளர் இருக்காரே அதான் நம்ம பாலு அவரிடம் கொடுத்தால் நிறைவேற்றி வைப்பார். ரயில் கோரிக்கைவோடு இதையும் சேர்த்துக்கோங்க.
ReplyDeleteஇரவு நேரத்தில் விளையாட்டு நடப்பதால் ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக விளையாடும் வீரர்கள் நேரமாக நேரமாக களைத்து போகிறார்கள் அதோடு பார்வையாளர்களுக்கு ஒரு கிலுகிலுப்பை ஏற்படுத்த கிரிகெட் டான்சர் போல ஒரு மின்னொளி டான்சர் வைத்தால் நல்ல இருக்குமுன்னு ஒருத்தர் அங்கலாய்த்து போனார்.
இவர் ரூம் போட்டு யோசிப்பார் போல.
இரவில் நடக்கும் நிகழ்ச்சிக்கு எதிக ஆரோகியம்தரும் விளையாட்டுகள் கராம் கிடையாது இரவில் நடபதால் தவறான முத்திரை வேண்டாம்.
ReplyDeleteநட்புடன்
மான் ஷேக்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி ஹுமைரா சுல்தானாஹ் சொன்ன கருத்து .வரவேற்க தக்கது .
ReplyDeleteசமூஹா ஆர்வலரென்று அதிரை வலைதளங்களுக்கு புகைப்படம் கொடுத்து கொண்டு திரிய கூடிய சமூகஆர்வம்காட்டும் .ஆர்வலர்களே ஒருநிமிடம் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் .நேற்று இரவு மின்சாரம் இல்லை கீழத்தெருவில்.மற்ற தெருவில் எப்படி என்று தெரியாது ஒரு அசம்பாவிதம் நடந்தால் அடுத்த வீட்டுக்கு தெரியாது நீங்கள் அடித்த கூத்தில் அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்.யாரும்எதிரிகள்கிடையாதுஎல்லோரும்நம்சகோதரர்கள்தான் இது போன்ற தவறுகள் இனிதவிர்த்துகொள்ளுங்கள் .
அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்,
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும்சமூகத்தினர்,அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களைநேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள்பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள்சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானைஎழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள்என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச்சோலைகளில் என்றென்றும் இருக்கும்படிஅவர்களைப்பிரவேசிக்கச்செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்.அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும்அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின்கூட்டத்தினர், அறிந்து
கொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின்கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள்.
வஸ்ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteஅதிரை நியூஸ் நிறுவனர் சகோதரர் M நிஜாம் அவர்களுக்கு.விசைப்பலகையை நீங்கள் கொஞ்சம் விரிவுபடுத்தினால் நல்லது .
வஸ்ஸலாம்
விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம், இது நமதூரில் ஆறு வருடங்களாக நடக்குக்து, இதை இப்படியே முற்ற விட்டால் அப்புறம் ஆண்டு முழுக்க விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.
ReplyDeleteஇதுமாதிரி விளையாட்டை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஊருக்கு ஒதுக்கு புறமாக வைத்துக் கொள்ள வேண்டும். யாருடைய ஆசையும் நிராசை ஆகாது.
நபி (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்
ReplyDeleteஒவ்வொரு ஆத்மாவும் கியாமநாளில் கிழ்கண்டக்கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஒரு அடிகூட நகர முடியாது.
1. உன் வாலிபத்தை எப்படி கழித்தாய் ?
2. நீ எவ்வாறு சம்பாதித்தாய்?
3.நீ எவ்வாறு அதை செலவு செய்தாய் ?
ஊர் முக்கியஸ்தர்களே!
ஒரு சில பேர் கொடுக்கிற பண பொறூதவியை வைத்துதானே இந்த வேடிக்கைகள் எல்லாம் நடத்து கிறார்கள். அவர்கள் இந்த உதவியை நிறுத்தி இல்லாத ஏழை களுக்கு கொடுத்தால் இதுலாம் நடக்க வழி இல்லையே! இதற்கு உதவி செய்பவர்கள் மேலே உள்ள ஹதீஸை சற்று சிந்திக்கவும்.
மேலும் அதிரை நியூஸ் அவர்களுக்கு இப்படிபட்ட இரவு விளையாட்டு போன்றவற்றை தங்கள் வலைதளங்களில் ( ஹராமானது ) போடுவதை தவிர்த்தல் நலம் .
சொல்வது என்கடமை ! எற்று கொள்வது உங்கள் விருப்பம்.
Elaikalukku help seyalam endru sollum nanbarhale.... Namathu ooril ulla baithul maallukku yaravathu panam anuppyathu unda?
ReplyDeleteSome body told ... We can help to poor people .... I want know ..who send money to baithul mall every month?
யாருடைய சாபமும் யாருக்கும் இல்லை, சாபம் என்பது நம் மார்க்கத்தில் இல்லை, கோழைத்தனமாக காவல் நிலையத்திற்கு போன் போட்டு புகார் செய்யும் நீங்கள் ஈமானை பற்றி பேசவேண்டாம், தான் செய்யும் செயல் சரியா? இது ஒரு விளையாட்டு போட்டி தான் இதில் தவறு இருந்தால் இன்ஷா அல்லாஹ் திருத்தி கொள்வோம்,
ReplyDelete20 20 மற்றும் உலக கிரிகெட் மேட்சை நேரம் தவறாமல் சீயர்ஸ் கேர்ல்ஸ்சுடன் ஆட்டம் போடுவதை தன் வீட்டு பெண்களுடன் பார்ப்பதை ரசிக்கும் நம் சகோதரர்கள் இந்த போட்டியை ஏன் விமர்சனம் செய்கிறார்கள்?
தவறை சுட்டிகாட்டுங்கள் திருத்தி கொள்வோம், தயவு செய்து கருத்து போட்டி வேண்டாம்.
நட்புடன்
மான் சேக்
பாதிக்கப்பட்டவனின் தூவவிற்கு அல்லாஹ்வுக்கு இடையில் எந்த திரையும் இல்லை பாதிக்கப்படவனின் தூவ ஏற்றுக்கொள்ளப்படும்
Deleteநீங்கள் விளையாடுவதற்குகாக ஊரில் உள்ளவர்களை எல்லாம் தூங்கவிட்டாமல் செய்வது எந்த விதத்தில் நியாயம்
சகோ குலாம் அவர்களே, நீங்கள் அடித்த கூத்தில் என்கிற வாசகம் மிக தவறானது, இருட்டிலும் வெளிச்சத்திலும் செய்யும் தவறை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே,
ReplyDeleteநீங்கள் தவறாக புரியவேண்டாம் குலாம் முகம்மது என்கிற பெயர் நம் சமுதாயம் வைக்ககூடாது, நாம் எல்லோரும் அல்லாஹ்வின் அடிமை, நபியின் அடிமை அல்ல.
நாமெல்லோரும் சாதாரண மனிதன் தான் தவறு எனும் பட்சத்தில் திருத்தி கொள்வோம்.
நட்புடன்
மான் சேக்
இரவு விளையாட்டு போன்றவற்றை தங்கள் வலைதளங்களில் ( ஹராமானது ) போடுவதை தவிர்த்தல் நலம் .
ReplyDeleteசகோ நூர் அவர்களே உலக கால்பந்து போட்டி இரவில் நடந்த பொது சவூதி அரேபிய அதை தடை செய்யவில்லை, அப்படி இருக்கும் போது இந்த விளையாட்டு எப்படி ஹராம் என கூர்வது?
நட்புடன்
மான் சேக்
இரவு விளையாட்டு போன்றவற்றை தங்கள் வலைதளங்களில் ( ஹராமானது ) போடுவதை தவிர்த்தல் நலம் .
ReplyDeleteசகோ நூர் அவர்களே உலக கால்பந்து போட்டி இரவில் நடந்த பொது சவூதி அரேபிய அதை தடை செய்யவில்லை, அப்படி இருக்கும் போது இந்த விளையாட்டு எப்படி ஹராம் என கூர்வது?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ]
ReplyDeleteசகோதரர் ( மான் சேக்) அறிவு கலஜியம்போல் பதில் கொடுத்துள்ளார்.வாசகர்கள்
குறிப்பிட்டது கருத்து என்னா? நான் வைத்த கருத்து என்ன .இரவில் தெரு நடு வீதியில் மைதானத்தை ஒட்டி சுற்றிலும் வீடுகள். வெடி வெடித்தும்.
இரவு நேரமுழுக்க அதிக ஒலிகளை எழுப்பியும் .இதற்க்கு பெயர் என்ன.இது எந்தவகையில் நியாய படுத்த பார்க்கிறீர்கள் .
குலாம் முகம்மது என்கிற பெயர் நம் சமுதாயம் வைக்ககூடாது, என்று
சகோதரர் குறிப்பிட்டு உள்ளார் அவர் அவர்பெயரை எப்படி குறிப்பிட்டு உள்ளார். ( மான் சேக்) இரண்டையும் பிரித்து படித்து பாருங்கள் .மான் என்றால் என்னா.?+ சேக் என்றால் என்னா? மான் என்றால் எல்லாருக்கும் தெரியும் சேக் என்றால் ஒரு நாட்டின் அதிபர்.சேக் என்பது பெயர் இல்லை அது
ஒரு பதவி +பொறுப்பு .
குலாம் முகம்மது நம் சமுதாயம் வைக்ககூடாது என்று எழுதிருந்தார் (குலாம் ரசூல்) என்று வைக்கலாமா?
சவுதியை வைத்து அல்ல மார்க்கம் அல்லாவும் அவனுடைய தூதரும் காட்டியதுதான் மார்க்கம்.
20 20 மற்றும் உலக கிரிகெட் மேட்சை நேரம் தவறாமல் சீயர்ஸ் கேர்ல்ஸ்சுடன் ஆட்டம் போடுவதை தன் வீட்டு பெண்களுடன் பார்ப்பதை ரசிக்கும் நம் சகோதரர்கள் என்று விமர்ச்சி இருந்தார் .அவர் அவர் வீட்டு பெண்களுடன்தான் அவரவர் பார்த்து இருக்கலாம் .சகோதரரே அதிலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதையும் நீங்கள் விம்ர்சிங்கள் . அதற்க்கும்
இன்ஷா அல்லாஹ் பதில் தருகிறேன் .
கைப்பந்து தொடர் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் கைப்பந்து விளையாட்டையோ விளையாட்டு வீரர்களையோ நான் விமர்சிக்கவில்லை.
வஸ்ஸலாம்
அது சரி எனதான் நீங்கள் சொல்லவருகிறீர்கள்? அறிவு களஞ்சியம் ஏன பொது மேடை ஏற நான் தயார் நீங்கள் தயரா? சவூதி அரேபியாவை வைத்து பல காரணத்தை சொல்லும் நீங்கள்கள் இதற்கு மட்டும் விதிவிலக்கா? மான் என்று எனது புனை பெயர் நான் வைத்து கொண்டது அல்ல அது உங்களுக்கு தெரியாதா?
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ் )
Deleteமேடை ஏறியது பத்தாதா.வேணும் என்றால் நான் தயார்
இரவில் அதி ஒலிஎலுபும் பலபேர் இரு சக்கர வாகன ஒட்டிநிர்களே அப்பொழுது உங்களை எப்படி அழைக்க? அறிவு களஞ்சியமா அல்லது மிருக தனமா?
ReplyDeleteசேக் என்றால் ஒரு நாட்டின் அதிபர்.சேக் என்பது பெயர் இல்லை அது ஒரு பதவி +பொறுப்பு . பொறுப்பான மனிதர்களுக்கு பதவி தானாக வரும்....
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ் )
Deleteஎல்லாம் தனாகதான் வரும் நிறைய வரும் வைக்க இடம் இருக்காது. ஆனால் தூங்க இடமிருக்காது
காட்டுப்பள்ளி தர்கா நடு வீதியா? ohhhhhhhhhhhhhhh
ReplyDeleteஇரவில் அதி ஒலிஎலுபும் பலபேர் இரு சக்கர வாகன ஒட்டிநிர்களே அப்பொழுது உங்களை எப்படி அழைக்க? அறிவு களஞ்சியமா அல்லது மிருக தனமா?
ReplyDeleteநாமெல்லோரும் சாதாரண மனிதன் தான் தவறு எனும் பட்சத்தில் திருத்தி கொள்வோம்.
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ் )
Deleteகண்டிப்பாக
குலாம் முகம்மது நம் சமுதாயம் வைக்ககூடாது என்று எழுதிருந்தார் (குலாம் ரசூல்) என்று வைக்கலாமா?
ReplyDeleteஇரண்டுக்கும் ஒரே அருதம்தான், ஆனால் பொது மேடைஎன்று வரும்போது தான் யார் என்று சிந்தித்து சியல்படவும்.
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ் )
Deleteகுலாம் ரசூல் யார் என்று தெரியவில்லையா சகோதரர்க்கு
நமக்குள்ளே சண்டையாப்போச்சே, இந்த பாழாப்போன பணம்தான் காரணம். பணத் திமிரு ஒழியாத வரைக்கும் நமக்குள் சண்டைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும். பணத் திமிரு ஒழிய வேண்டும்.
ReplyDelete