.

Pages

Monday, April 21, 2014

காணாமல் போன ஹாஜா ஷரிஃப் ஊர் திரும்பினார் !

அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஹாஜா ஷரிஃப். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்படும் இவரை காணாதவர்கள் இல்லை என சொல்லுமளவுக்கு அதிரையருக்கு மிகவும் பரிச்சையமானவர். சற்று மனநிலை பாதிப்படைந்த இவர் கடந்த சில நாட்களாக ஊரில் தென்படாதது அதிரையர்களுக்கு கவலையை வரவழைத்தது. இவரோடு தொடர்புடையவர்கள் இவரை பற்றிய தகவல்களை ஆங்காங்கே விசாரித்தும் வந்தனர்.

காணாமல் போன ஹாஜா ஷரிஃப் இன்று காலை ஊர் திரும்பினார் என்ற மகிழ்ச்சியான செய்தி நமக்கு கிடைத்தவுடன் செக்கடி மேடு பகுதியில் உலா வரும் இவரிடம் இத்தனை நாளா எங்கு சென்றீர்கள் ? என கேட்டதற்கு தான் நாகூர் சென்றதாக கூறினார். நலமாக ஊர் திரும்பிய இவரை ஏராளமான அதிரையர்கள் மகிழ்ச்சியுடன் விசாரித்து வருகின்றனர்.

15 comments:

  1. அல்ஹம்துலில்லஹி சலாம

    ReplyDelete
  2. காணமல் போனதிற்க்கும் அறிவிப்பு செய்தீர்கள் அவர் திரும்பி வந்ததும் தகவளாக தந்தீர்கள் அதிரை நியூஸ்அற்புதம் நன்றி.

    ReplyDelete
  3. ஹாஜா ஷரிப் போல இன்னொரு பையனையும் அதிரை மக்கள் பார்த்திருக்கலாம் அவன் பெயர் ஜெஹபர் அலி 14 வயதை கடந்தவன்.

    இவன் பெற்றோர் இழந்து தன் பெரியம்மா வீட்டில் வசித்து வந்தவன். பிறவிலேயே இரண்டு கண் பார்வை இழந்தவன்

    தன் வாயில் விசில் வைத்துக் கொண்டு தரகர் தெருவிலிருந்து- மெயின் ரோடு - பலஞ்செட்டி தெரு பஸ் ஸ்டாப் வரை யாருடைய உதைவி இன்றி தன்னே தனியாக வாகன போக்குவரத்துக்கு இடையில் சென்று வருபவன்.

    அபார நியாபக சக்திஉடையவன் எப்படி என்றால் பேச்சை வைத்துக்கொண்டு இன்னார் என்று பெயர் சொல்லி மரியாதைவோடு அளைப்பவன்-

    சின்னச் சிறார்களுக்கு ரொம்ப பிடித்தவன்.

    3 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனவன் இதுவரை என்னானது என்றும் அவனை சார்த்தவர்களுக்கு தெரியாது, அவர்களும் தேடி பார்த்தார்கள் அலைந்தது தான் மிச்சம்.

    அந்த நேரத்தில் தமிழ் நாட்டில் கிட்னி திருட்டு நடைபெறுவதை தினசரி நாளிதழில் தினமும் வந்ததை மக்கள் மறந்திருக்க முடியாது -

    ஒருவேளை அந்த சதிகார கும்பலிடம் அவன் மாட்டிருக்க கூடும் என்பது சந்தேகமாக இருக்கு.

    கண்பார்வை இருக்கும் மக்களிடமே டாக்டர்கள் ஆட்டை போட்டதையும் நாம் பார்க்கிறோம் .

    மனநிலை குன்றியவர்கள் , கண் பார்வை இழந்தவர்கள் பொது இடங்களில் பார்க்கும் பொது நாம் அவர்கள் மீது ஒரு " கண் " வைத்து சதிகார கும்பலிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

    நமக்கு அல்லாஹ் நற்கூலி தருவான்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    //கோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMED.
    April 19, 2014 at 3:52 PM
    பதிவுக்கு நன்றி.

    இன்று காலை பதினோரு மணிக்கு இவரின் தந்தை அஹ்மது கபீர் காக்கா அவர்களை சந்தித்து விசாரித்தவகையில், நேற்றைய முன் தினத்திற்கு முதல் நாள் அதாவது புதன் கிழமை பின்னேரம் நாகூர் தர்காவில் கந்தூரி முடிந்து கோடி இறக்கும் வேளையில் நமதூர் சில குடும்பங்கள் தன மகனை அன்று பார்த்ததாக சொன்னார்களாம், இருப்பினும் பல இடங்களுக்கு ஆட்களை விட்டு தேடும் பணி முடுக்கிவிட்டதாக சொன்னார்கள்.

    இந்த நிமிடம் வரை (3.52.53) ஒரு தகவலும் கிடைக்க வில்லை.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.//

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.

    ReplyDelete
  5. Hello kma Avl no khoodi illai kodi

    ReplyDelete
  6. காணமல் போனதிற்க்கும் அறிவிப்பு செய்தீர்கள் அவர் திரும்பி வந்ததும் தகவளாக தந்தீர்கள் அதிரை நியூஸ்அற்புதம் நன்றி.

    ReplyDelete
  7. Alhamdulillah. Good to know about brother Haja sharif's return. The same way he returned back, may Allah return his behaviour, good sense and iman and may he live as a normal man insha Allah.

    ReplyDelete
  8. அதிரையருக்கு மிகவும் பரிச்சையமான சகோ ஹாஜா ஷரிப் அவர்கள் எனது சகோதரர் மான் நைனா முஹமது அவர்கள் கூட ஒரே வகுப்பில் காதர் முஹிதீன் மேல்நிலை பள்ளியில் படித்தவர், அல்லாஹ்வின் நாட்டம் மனநிலை பாதிப்படைந்து விட்டார், யாரேனும் இவரிடம் கேலி கிண்டல் செய்வதை பார்த்தால் தயவு செய்து தடுத்து நிறுத்தவும்.

    நட்புடன்

    மான் ஷேக்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.