.

Pages

Tuesday, April 1, 2014

அதிரையின் மஹல்லா நிர்வாகிகள், பைத்துல்மால் நிர்வாகிகள், பஞ்சாயதார்களை சந்தித்து ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளர் ! [ படங்கள் இணைப்பு ]

காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளர் திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R. ரெங்கராஜன் MLA ஆகியோர் இன்று மாலை 5 மணியளவில் அதிரைக்கு வருகை தந்து மஹல்லா நிர்வாகிகள், பைத்துல்மால் நிர்வாகிகள், பஞ்சாயத்தார்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவளிக்க வேண்டினர்.

முதலில் M.M.S குடும்பத்தினரை சந்தித்த வேட்பாளார் அதனை தொடர்ந்து மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், கீழத்தெரு ஜமாத் நிர்வாகிகள், நெசவுத்தெரு ஜமாத் நிர்வாகிகள், சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள், முத்தம்மாள் தெரு பஞ்சாயத்தார்கள், புதுத்தெரு ஜமாத் நிர்வாகிகள், தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகள், கடற்கரைதெரு ஜமாத் நிர்வாகிகள், ஹாஜா நகர் வார்டு கவுன்சிலர் ஜபுரன் ஜெமிலா, கரையூர் தெரு, காந்தி நகர், பழஞ்செட்டி தெரு பஞ்சாயத்தார்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

சந்திப்பின் போது வேட்பாளரிடம் மஹல்லா நிர்வாகிகள், பஞ்சாயத்து நிர்வாகிகள் அதிரை பொதுநலன் சார்ந்த முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். கங்கிரஸ் கட்சியின் நகர நிர்வாகிகள் அதிரையின் முக்கிய பகுதிகளில் உள்ள நிர்வாகிகளை சந்திப்பதற்காக ஒவ்வொரு இடமாக அழைத்துச்சென்றனர்.






















2 comments:

  1. 12 vathu vardukku varamal ponathal 150 votdukal matra katchchekku podappadum,

    ReplyDelete
  2. Idu pola Oru mla podum....... Adiraikku

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.