.

Pages

Wednesday, April 23, 2014

லண்டனிலிருந்து ஹாஜி ஸாருக்கு அஹமது பாஸ்னியா எழுதும் கடிதம் !

அஸ்ஸலாமு அலைக்கும்

அதிராம்பட்டிணம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹமத் அவர்கள் கடந்த 32 ஆண்டுகள் சிறப்பான முறையில் ( பணியில் எப்போழும் நேர்மை) ஆசிரியர் பணியாற்றி இன்றுடன் விடைபெறுகிறார்.

நமது ஊரில் கல்வியின் அவசியத்தை அல்லாஹ் அவர்கள் மூலம் கொடுத்தது மற்றுமின்றி, 32 ஆண்டு காலம் நமதூர் இளைஞர்களின் கல்விக்கு உறுதுணையாக இருந்தவர்.

ஹாஜி சார் என்ற உடன் அதிரை இளைஞர்களுக்கு இன்றும் என்றும் நினைவில் வருவது நேரத்தை சரியாக பின்பற்றுவது அதை அவர்களிடம் கல்வி கற்ற ஒவ்வொரு மாணவர்களும் கண்டிப்பாக தெரியும்.

நான் படித்த நேரங்களில் ஹாஜி சாருடன் நடந்த சந்தோஷமான(நகைச்சுவையான) நிகழ்வுகள் அதிகம் உண்டு அதை இன்றும் எனது நண்பர்களுடன் பகிந்துக்கொள்வேன். அதை இப்பொழுது பகிந்துகொள்ள ஆசைபடுகிறேன்.

ஹாஜி சாரை பொறுத்தவரை அவர்களின் வகுப்பில் சுமார் ஐம்பதிற்கு மேற்பட்ட மாணவர்கள் இருப்பார்கள்  இதில் அவர்களுக்கு நன்கு பிடித்த, தெரிந்த மாணவர்கள் இரண்டு வகை மட்டுமே

ஒன்று மிகவும் நன்றாக படிக்கும் மாணவர்கள்  (வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுப்பவர்கள்)

மற்றொன்று சுத்தமாக படிக்காத மாணவர்கள் ( மக்கு பசங்க )

ஹாஜி சார் அவர்களுக்கு ஓர் பழக்கம் உண்டு

நன்கு படிக்கும் மாணவர்களை பெயர் சொல்லி கூப்பிடுவது.

படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுதனம் செய்யும் மாணவர்களை கோளறு என்று சேர்த்து பெயர் சொல்லி கூப்பிடுவது (செல்லமாக)

நான் பள்ளிக்கு பெரும்பாலும் சரியான நேரத்திற்கு வருவதில்லை அப்படி சரியான நேரத்திற்கு வந்தாலும் ஹாஜி சார் வகுப்பறைக்கு உள்ளே வந்த உடன் ( தம்பி கோளறு பாஸ்னியா வந்துட்டான ) என்று அவர்கள் பாணியில் கேட்பதை நினைத்தால் இப்போழும் சற்று நகைச்சுவையாக சந்தோஷமாக இருக்கின்றது.( நேரத்தின் அவசியத்தை இப்போழுது வேலை செய்யும்போது தான் புரிந்துகொண்டேன் ).

அதைப்போல் அவர்களின்  மற்றொரு பழக்கமான தினமும் ஓர் குறிப்பிட்ட பாடங்களை படித்து வரசொல்வது அதை மறுநாள் சொல்ல வேண்டும் ( சார் தேர்வு செய்யும் மாணவர்கள் மட்டும் குறிப்பாக கோளறு மாணவர்கள் )

சார் அவர்கள் கேள்வி கேட்கும் போழுது மிக முக்கியமான மூன்று காரணங்களை மாணவர்கள் கண்டிப்பாக சொல்லகூடாது

1. வரலே
2. தெரியலே
3. மறந்துட்டேன்

அப்படி கூறினால் சார் எப்படி அடிப்பார்கள் என்பதை நான் விளக்க தேவையில்லை. சார் அவர்களின்  அடிக்கு பயந்து படிப்பை விட்டு ஓடிய மாணவர்களும் அதிரையில் ஏறாலம்.

அப்படி காலையில் கூறியதை மாலையில் (பள்ளி நேரம் முடிந்த பிறகு நடைபெறும் சிறப்பு வகுப்பு ) தேர்வு எழுத வேண்டும்

தேர்வு என்றால் ஒவ்வொரு மாணவர்களுக்கும் நியாபகம் வருவேண்டியது

1. தேர்வு எழுதுவதற்கான அட்டை
2. பேப்பர்
3. பேனா

போன்ற அனைத்தும் கண்டிப்பாக இருக்கவேண்டும் இதில் ஒன்று குறைந்தாலும் முடிந்தது கதை (சட்னி தான்)

இதை சார் பாணியில் ஆங்கிலத்தில் கூறவேண்டும் என்றால்

All students today evening have special class at 5.30pm so make sure everybody should have exam pad, paper, pen, pencil with you

இப்படி அனைத்து மாணவர்களும் எதிலும் முறையாக இருக்கவேண்டும் எனறு நினைப்பவர்.

அப்படிப்பட்ட ஓர் நல்ல ஆசிரியரை நாம் பிரிவது என்பது சற்று கவலை அளிக்கின்றது.

அவர்களிடம் கல்வி கற்ற நானும், அனைத்து மாணவர்களும், மாணவர்களின் அனைத்து பெற்றோர்களும் குறிப்பாக கதிர் முகைதீன் கல்வி நிறுவனப் பொறுப்பளர்களும்,அதிரை மக்களாகிய நம் அனைவரும்
ஹாஜி முஹம்மது சார் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும்,நீண்ட ஆயுளையும்,இம்மை மறுமை அனைத்திலும் வெற்றிப்படும் நபராக இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தூஆ செய்வோமாக.

 - அஹமத் பாஸ்னியா 
   லண்டன்

22 comments:

  1. Nice writing format with respectful words. We are very lucky guys for had chance to study with direction of respectful sir Mr. Mohamed Haji shortly known as Haji sir.

    ReplyDelete
  2. ரொம்ப முக்கியம் அவர்ட்ட படிச்ச இந்தியாவில் வேலை பார்த்திருந்தால் பாராட்டலாம், யார்ட்டையும் படிக்காமலயே அமரிக்கா இன்னும் பல நாடுகளில் நல்ல வேலையில் இருக்கிறார்கள்,

    வேற வேலைய பாருங்க லண்டன் சார்

    ReplyDelete
    Replies
    1. ஓகே உள்ளுர் தொழில் அதிபரே!!???

      Delete
    2. குறைவாய் சம்பாதித்தாலும் நிறைவாய் இருக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் கற்ற கல்வி இது

      Delete
  3. அவருக்க அவர் நல்லவர்,

    மார்க்க கல்வி ஒழுங்காய் கற்றிருந்தால் இந்த கல்வி கசக்கும்

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஆனால் தற்போழுது நமதூர் பிள்ளைகள் மார்க்க கல்விக்காக பள்ளி செல்வது குறைந்துகொண்டே இருக்கின்றது

      Delete
  4. சிறந்த நினைவூட்டல்...

    ReplyDelete
  5. நாங்கள் அவரிடம் 92-93 வரை வரலாறு வடித்தோம் அது ஹாஜி சார் பாடம் நடத்தியதலோ என்னவோ வரலாறு மேல் அவ்வளவு காதல். retire ஆனாலும் அவரின் பணி நம் மக்களுக்கு என்றென்றும் வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள். அல்லாஹ் அன்னாருக்கு ஆயுளை நீடித்து நம் மக்களுக்கு சேவை செய்ய கிருபை செய்வானாக ஆமீன்.
    என்றும் பழைய நினைவுகளுடன் முன்னால் மாணவன்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. கல்வி அறிவு இல்லாத நம் சமுதாயத்தில் குறிப்பாக அதிரையில்

    32 ஆண்டு காலம் தன் முழு வாழ்வை கல்விக்காக செலவு செய்த ஹாஜி முகமது சார் அவர்களுக்கு அதிரையர்கள் நம் அனைவரும் நன்றி தெரிவிப்பதோடு அவருக்காக அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் தூஆ செய்ய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அரசு சம்பளம் இல்லாமல் இவர் உழைத்திருந்தால் உங்களுக்கு முன் அவருக்கு நன்றி செலுத்துகிறோம், இல்லை அவரிடைய வாழ்க்கைய உண்மையாய் அர்பணித்திருந்தாலும் ஓ,கே தான், எத்தனையோ பேர் சம்பளமின்றி பள்ளிவாசல் இமாம்களை தொழகை நடத்தி ஏழ்மையிலே பேணுதலாய் கல்வி கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு முதல் ஸலாம்,

      Delete
    2. இந்த பதவிக்கு பெரிய தொகையில் போட்டி நடக்குது, ஏதோ கல்வி ஒன்றே இலக்கு என்று இருந்ததுபோல் கூறுகிறீர்கள்,

      Delete
  9. ஆசிரியர்கள் மதிப்பிற்குரியவர்களே .........மணாக்காளுக்கு மலரும் நினைவுகளும் அவசியமான ஒன்றே .....இருப்பினும் ஹாஜி சார் பற்றிய புகழாரம் நமதூர் வலை தளங்களில் ஒரே பதிவாக வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  10. Assalamu Alaikum Varah ...
    MATHIPIRKURIYA JANAB HAJI SIR AVARHAL KADHIR MOHIDEEN SCHOOL AI VITTU SELVATHINAL MANAVARHALUKU PERUM ELAPPU THAN ENDRU SOLLA MUDIUM IPPADI PATTA NALLA ASIRIYARI VITTU
    NAAM PIRIVATHU KAVALAYAHA THAN IRUKIRATHU

    ENATHU NANBAN ADHAVATHU HAJI SIR BASAIEL SOLLA PONAL KOLAR BASNIYA ALAHANA MURAIEL HAJI SIR CLASSIL NADANDHA SVARASIYAMANA VISAYATHAI PAHIRNDHU KONDAN SUPER DA MACHAN......
    ENAGALUKU 2005 TO 2006 12TH ill CLASS SIR AAAHA IRUNDHARHAL MORNING 1ST prd HAJI SIR CLASS THAN SIR PADAM NADATHI IRUKUMBOTHU KOLARU BASNIYA LATE AAH VANDHU NINNU APPAVI MATHARI MOONJA VACHIRUPAN APO HAJI SIR
    ENNA THAMBI INNAIKU FLIGHT AAA PUDICHI VARATHUKU LATE AHIRICHA ENDRU KETKUMBOTHU NAHAISUVAYAHA THAN IRUKUM MATRONDRU VISAYAM UPPU THINNA THANNI KUDINGRA MATHARI HAJI SIRTA PADICHA MANAVARHAL HAJI SIR ADIYAI YARUM RUSIKAMAL ANDHA SCHOOLAI VITTU SENDRATHU ILLAI.

    ADHAI ELLAM NINAITHU PARTHAL HAJI SIR PONDRA ORU NALLA ASIRIYARAI VITTU NAM PIRIVATHU KAVALAYAHA IRUKIRATHU

    HAJI SIR AVARHALUKU ALLAH BARAKATH SEIVANAHA ...

    ReplyDelete
  11. I would like to take this opportunity to greet our respected Haji Mohamed sir for his selflessness, punctual and strictness towards the betterment of students. 

    Now I recall those days of my schooling when he was our social science and english teacher, he was really a talented teacher who can grab the attention of students. Among the others he was seen somewhat differently.

    He worked more than what he was paid for. The way he teaches was totally different from others, because of his strictness class room would make pin-drop silent. It was at the time when the English medium section was introduced in our school, Haji sir was the one and only who taught and interected with the student in English alone; Almighty has given him a talent to explain the subject in his own way.

    He spent his most part of his life to the welfare of our students, he was deserved to receive best teacher award from the Governments, but unfortunately it is not handful to him till date. Still, we, Adiraites are grateful to him; so I suggest that we should honour him during any event takes place in Adirai such as Holy Quran conference or any educational fair.   

    Once again, I pray Almighty to let him spend his remaining period of life with good health and wealth. 

    Your student, 
    Ahamed Thoufeek,
    Class 10th E 1997-98,
    Class 9th E 1996-97,
    Class 8th E 1995-96

    ReplyDelete
  12. நான் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஹாஜி சார் ஆசிரியராக பணி புரியாததால் அவர்களைப் பற்றி எனக்கு தெரியாவிட்டாலும் தாங்களின் பகிர்வு மூலமாக அவர்களைப் பற்றி அறிந்து திறமையான பல மாணவர்களை உருவாக்கிய நல்ல ஆசிரியர் என்பதை புரிந்து உங்களது பாராட்டில் நானும் கலந்து கொள்வதுடன் அவர்களது ஓய்வு காலம் நிம்மதியுடன் நல் சுகத்துடன் சிறந்து விளங்க துவா செய்கிறேன்.

    ReplyDelete
  13. varala theriyala maranthuttan


    itha ennala marakkave mudiyathu because nanum avar kitta adi vankinathi oruthan

    ReplyDelete
  14. ஹாஜி சார் உதவியால் பலவற்றை நான் மட்டும் அல்லாமல் பல மாணவர்களில் கற்றுள்ளனர். அவரின் சின்ன சின்ன சொல்கள் கூட விளையாட்டாக காமெடியாக நாங்கள் எடுத்துகொள்வோம் ஆனால் அவரின் வகுப்பைறையில் சிரித்தால் அதுக்கு வேற டிரிட்மெண்ட்தான்.

    அவர் சொன்ன வார்த்தைகளில் சில மறக்க முடியாதவை:‍‍

    கடற்கரைதெரு யாசர் ஒருநாள் வகுப்பைறைக்கு லேட்டாக வந்துவிட்டான்,வந்தவனைபார்த்து ஹாஜி சார் எங்கிருந்துப்பா வார என்று கேட்க ஹாஜிசார் கடற்கரைத்தெருவில் இருந்து சொன்னவுடன் ஹாஜிசார் அதற்கு காஷ்மீர் பக்கம் இருக்கே விமானம் பிடித்து வரலேட்டா ஆச்சா என்று கூறினார்.

    அதேபோல் இரவு வகுப்பைறையில் படித்து கொண்டு இருக்கும் போது மஹ்ரீப் தொழுல எல்லாரும் சென்று விட்டு பின்னர் வந்துவிட்டனர் சாதிக் லேட்டாக வர என்ன்ப்பா சாதிக் மஹ்ரீப்க்கு 3 ரக்காத்தா இல்ல 30 ரக்காத்தா என்று கூறினார்.

    நண்பர் ராஜா முஹம்மது வகுப்பறைக்கு வரலனு ஹாஜிசார் வீட்டிற்க்கு திருப்பி அனுப்பிவிட்டுவிட்டார் பெற்றோறை அழைத்துவற,பெற்றோரும் வந்துவிட்டனர் பள்ளிக்கு கொக்குபிடிக்க சொல்லுங்க என்று ஹாஜி சார் கூறினார் பெற்றோர் நினைக்க இப்ப பனிஷ்மென்ட் கொக்குபிடிக்க சொல்லுறாங்க புதுஷா இருக்கே ஹாஜிசார் குனிஞ்சி காமிச்சு இதே தான் சொன்னேன் என்று கூறினார்.

    ஹாஜாக்கு ஏர்வாடியில கூட இடம் கிடைக்காது.
    திருத்துறைப்பூண்டில மாத்திரையை போட்டுவிட்டு முத்துப்பேட்டையில தண்ணீர் குடித்து விட்டு அதிராம்பட்டினத்துல வந்துபாடம் நடத்துறேன் என்று கூறியது.

    "தம்பி திருவோடு இருக்கா பேனா பேன்சின் பிச்சை எடுக்க"

    நான் 10ம் வகுப்பி படிக்கும்போது இதேபோல் தேர்தல் சமயம் மாலை 6 மணிக்குமேல தேர்தல் பிரச்சாரம் பன்றாங்க இவனுக்குதான் 6 மணியோட நேரம் முடிஞ்சுருச்சி இவனைலம் பிடிச்சு உள்ளே போடானும் சொன்னது

    திருத்துறைப்பூண்டில இருந்து துவரங்குறிச்சில பஸ் இறங்க மாட்டுவண்டில வந்த போது நம்ம பசங்க லிப்ட் கொடுக்கமா இருசக்கர வாகனத்தினை வேகமாக ஒட்டிவந்து விட்டு வகுப்பைறையில அடிவாங்கியது

    அன்று ஒருநாள் ஹாஜி சார பார்த்தால் எல்லாருக்கும் கை கால் ஆட்டம் கண்டுவிடுமே ஹாஜ நகர் ஹக் ஒருநாள் மாலை வகுப்புக்குவராமல் ஒடும்பொழுது வகுப்பு ஆசிரியர் சீனிவாசன் அவனை பிடித்துவிட்டார் யாரு இன்னைக்கு மாலைவகுப்புனு ஹாஜிசார்னு சொல்றான் ஹாஜிசார் வர வண்டலுர்ல சிங்கம் தப்பிச்சுபோச்சாம் சார் அந்த சிங்கத்த பிடித்து அதன் வாய்ல ஹக்ட தலையவிட்டு கடிக்கவிடனும் சார் என்று ஹாஜி சார் கூற சீனிவாசன் உள்பட ஹாஜ் சார் முன்னாடி எல்லாரும் சிரித்தது அன்றுதான் முதல் தடவை..

    நீங்க பல பேட்ச் மாணவர்களாக இருந்தாலும் பெயரும்,கொடுக்க வேண்டிய ஃப்ன் தொகையை சரியாக சொல்லுவார் இன்றுளவு கூட நான் எல்லாம் ஃப்ன் காசு சார்ட்ட கொடுத்துட்டேன்.

    இன்னும் பல சுவரஸ்யமான தகவல்பல உள்ளன , ஹாஜி சாருக்கு தனி புத்தகமே போடாலாம்.

    ஹாஜிசார் உதவியால் பல மாணவர்கள் அரசியல் வாதிகளாகவும்,அரசு மற்றும் தனியார் பலதுறைகளின் உயர்பதவிகளிலும் சிற்ந்தவர்களாக உள்ளனர். ஹாஜி சாரை இன்று பார்த்தால் கூட "அது என்னானு தெரியல கைகால் எல்லாம் ஆட்டம் கண்டுறுது" அவர் வகுப்பறையில் சிறந்த ஆசியரியர் மாணவர்களை ஊக்குவிப்பாளாரகவும் வெளியில் சிறந்த நண்பரகவும் பலகும் சுபாவம் உடையவர்.

    நீங்கள் பள்ளியை விட்டு ஒய்வு பெற்று விட்டு சென்றாலும் உங்களின் தொடர்பில் பழைய மாணவர்களாக என்றும் இருப்போம் கூறி இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும்,நீண்ட ஆயுளையும்,இம்மை மறுமை அனைத்திலும் வெற்றிப்படும் நபராக இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தூஆ செய்வோமாக.

    என்றும் உங்களுடன்
    ப.அகமது முனாஸ்கான்.

    ReplyDelete
  15. கணக்கு வாத்தியாராக சேக்தாவுது சார் இருந்தாரே தெரியுமா? அவரைப்பற்றி கேள்வி பட்டுயிருக்கிறீர்களா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.