.

Pages

Tuesday, April 8, 2014

குடிநீர் வழங்காததை கண்டித்து ஷிஃபா மருத்துவமனை அருகே திடீர் சாலை மறியல் !

அதிரை பேரூராட்சியின் 20 வது வார்டு உட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து ஷிஃபா மருத்துவமனையின் பின்புறமாக வசிக்கும் காலனிவாசிகள் இன்று இரவு 8.30 மணியளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பகுதியினர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசத்தில் ஈடுபட்டனர். குடிநீர் உடனே வழங்க ஏற்பாடு செய்யப்படும் என போராட்டகாரர்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்தது.

நேற்று இரவும்  - இன்று மதியமும் ட்ரான்ஸ்பார்மரில் திடீரென ஏற்பட்ட பழுத்தால் அதிரையில் தொடர் மின்தடங்கள் ஏற்பட்டது. இதனால் அதிரையில் உள்ள சில இடங்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.





5 comments:

  1. நடுத்தெருவில் ஒரு பகுதிக்கு 35 நாட்களுக்கு மேல் தண்ணீர் வருவதில்லை அந்த பகுதியின் வார்டு உறுப்பினர்களும் கண்டுக்கொள்வதில்லை

    ReplyDelete
  2. உங்கள் உரிமையை பெற அஞ்சாதிர்கள்................

    ReplyDelete
  3. மின்சாரம் இருந்தால் தான் மோட்டார் இயங்கும். மோட்டார் இயங்கினால்தான் குடிநீர் விநியோகிக்கமுடியும். இங்கு பிரச்சனையே மின்சாரம்தான். இந்த பிரச்சனை அதிராம்பட்டினத்தில் மட்டும் அல்ல தமிழ் நாடு முழுவதும் இருக்கு. தமிழக அரசே எங்களுக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    நிலத்தடி நீர் மட்டம் போதுமானதாக இல்லை, பசுமை இல்லை, பருவ மழை இல்லை, சீரான மின்சாரம் கிடையாது, மக்களிடம் பொறுமை இல்லை, மக்களிடம் தண்ணீர் சிக்கனம் அறவே கிடையாது, அதிரை பேரூராட்ச்சியும் மாற்று வழிகளை சிந்திக்காமல் இப்பகுதியிலேயே அதாவது ஒரே இடத்திலேயே பல ஆழ்துளை குழாய் கிணறுகளை தோண்டி நீரை எடுத்து ஊர் முழுக்க விநியோகம் செய்கின்றது, மேலும் முயற்ச்சித்து வருகின்றது, பலன் தோல்வியே, போதாக் குறைக்கு இப்பகுதியில் பல ராட்சஷ ஆழ்துளை குழாய் கிணறுகளை தோண்டி ஒருநாளைக்கு பல இலட்சம் கன லிட்டர் தண்ணீரை வெளியில் எடுத்து வியாபாரம் வேறு. இலவச மின்சாரம் என்ற கணக்கில் பல விவசாய நிலங்களில் சரியான வாய்க்கால் வரப்பு அமைக்காததினால் விலை மதிப்பில்லா தண்ணீர் வீணாகிக் கொண்டு இருக்கின்றது. மேலும் சில விவசாயிகள் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கணக்கிட்டு இலவச மின்சாரத்தால் பெறப்படுகின்ற தண்ணீரை விற்கின்றனர், வேறு வழி இல்லாமல் பக்கத்தில் இருக்கின்ற தோப்பு வயல் உரிமையாளர்களும், டேங்கர் லாரிகளும் தண்ணீரை கணிசமான விலைக்கு பெற்று வருகின்றனர், டேங்கர் லாரிகள் மறு விலைக்கு விற்று வருகின்றனர்.

    இந்த நிலை இப்படியே நீடித்துக் கொண்டு போனால், ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீருக்கு பதில் நல்ல ரக மணல் கிடைக்கும், அப்படி கிடைக்கின்ற மணல்களை “இந்தோனேஷியா, கிழக்கு ஆப்பரிக்க” போன்ற நாடுகளுக்கு நல்ல விலைக்கு விற்று, விற்று வருகின்ற பணத்தில் தண்ணீரை “அமெரிக்க, ஆஸ்த்திரேலிய, ஐரோப்பா, எதியோப்பியா” போன்ற நாடுகளிலிருந்து தாராளமாக பெறலாம்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  5. இலவச பேன், மிக்க்ஷி, கிரைண்டர் கொடுப்பதோடு இனி மோட்டார் கொடுந்தான்கன்னா குழாயில் பொருந்தி தண்ணீர் இவங்க எடுக்கலாம், அடுத்த தேர்தல் அறிக்கையில் மோட்டார், மொபைல் இவை இடம்பெறலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.