நமதூர் அதிவீரராமபட்டினம் கரையூர்தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் முத்துசாமி (64). இவர் கடந்த 17.04.2014 வியாழன் அன்று காலை அதிவீரராமப்பட்டினம் பிலால் நகரில் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட மழைத்தொழுகையில் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்டார். இந்த தொழுகை காணொளி அதிவீரராமபட்டினம் முஸ்லீம் இணையதளங்களில் வெளியிடப்பட்டது.
மாணிக்கம் முத்துசாமி மத்திய தொழிற்கூட பாதுகாப்பு படையின் (CISF) தலைமை காவலர் பணியிலிருந்து ஒய்வுபெற்றவர். முழுக்க முழுக்க ஹிந்துக்கள் மட்டுமே வாழும், ஹிந்து சமுதாய விழாக்களுக்கும், ஒற்றுமைக்கும், ஹிந்து பண்பாடுகளுக்கும் பெயர்போன அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு மீனவ கிராமத்தின் கிராம நிர்வாகிகளுல் ஒருவர்.
இப்படிப்பட்ட நபர் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட தொழுகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொழுகை மேற்கொண்ட காணொளி அதிவீரராமபட்டினம் முஸ்லீம் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான கிராமத்தை சேர்ந்த ஒருவர், கிராம நிவாகிகளுள் ஒருவர் இவ்வாரு நடந்துகொண்டதை இணைய ஊடகங்களில் கண்ட கரையூர் கிராம ஹிந்து இளைஞர்கள், ஹிந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஹிந்து இயக்கங்கள் மற்றும் கரையூர் கிராம இளைஞர்கள் மற்றும் வெளிநாடுவாழ் ஹிந்து இளைஞர்கள் கரையூர்தெரு கிராம நிர்வாகத்தை தொடர்புகொண்டு மாணிக்கம் முத்துசாமி மீது புகார் கொடுத்தனர்.
இந்த புகார் கிராம நிர்வாகத்தின் மூலம் இன்று அதிவீரராமபட்டினம் கரையூர்தெரு ஸ்ரீமாரியம்மன் ஆலையத்தில் கிராம தலைவர், பஞ்சாயத்தார், கிராம நிர்வாகிகள், கிராம மக்கள், ஹிந்து இளைஞர்கள் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது.
இளைஞர்கள் முஸ்லீம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட மாணிக்கம் முத்துசாமியின் தொழுகை காணொளியை ஆதாரமாக சமர்பித்தனர்.
கிராம நிர்வாகிகள் மாணிக்கம் முத்துசாமியை விசாரித்தனர்.
இருதியில் அனைவர் முன்பும் மாணிக்கம் முத்துசாமி நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் அவர்மீது கிராம கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரையூர் கிராம ஹிந்து இளைஞர்கள், நடந்த இந்த சம்பவத்திற்கு அவர் இணையத்திலும் மன்னிப்பு கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரில் நமது அதிவீரராமபட்டினம் ஹிந்துக்கள் நிருபரை அழைத்தனர்.
நமது நிருபர் பஞ்சாயத்தாரின் அனுமதியுடன் மாணிக்கம் முத்துசாமி மன்னிப்பு கேட்டுக்கொண்டதை காணொளி பதிவு செய்தார்.
மாணிக்கம் முத்துசாமி :
17.04.2014 அன்று மழைதொழுகைக்காக நான் சென்று கலந்துகொண்டு பேசியமைக்கு அனைத்து தமிழ் மக்களும், ஹிந்து மக்களும் என்னை மன்னித்தருளுமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
மதவாதிகளுக்கு கிராம பஞ்சாயத்தார்கள் துணைபோவது வருத்தமடைய செய்கிறது.
ReplyDeleteStupid judgement........
ReplyDeleteகரையூர் தெரு பஞ்சாயத்தார்களின் இம்முடிவு வருத்தம் அளிப்பதாகாவும்,ஒற்றுமைக்கு எடுத்துகாட்ட இருக்க வேண்டிய பஞ்சாயத்து ஒரு சிலரின் தூண்டுதலுக்கு கட்டுப்பட்டுவது வேதனை அளிக்கிறது.
ReplyDeleteகம்பீரமாக காட்சியளிக்ககூடிய மனிதர் கூனிக்குறுகி மன்னிப்பு ! அப்படி என்ன சமூக குற்றத்ததை நிகழ்த்திவிட்டார் ? கடவுளால் படைக்கபட்ட அனைத்து ஜீவாராசிகளுக்கும் தண்ணீர் கேட்டு பிரார்த்தனை செய்ததில் என்ன தப்பு ?
ReplyDeleteமுந்தைய பதிவுகளையும், அவர் மன்னிக்க வேண்டி கேட்டுக் கொண்டதையும் பார்க்கும்போது, அவரை எந்த ஒரு முஸ்லிம்களும் போய் கூப்பிட்ததாக தெரியவில்லை, அவரே தானாக வந்தது மாதிரிதான் இருக்குது.
ReplyDeleteஒரு முஸ்லிம் இதுபோல் ஹிந்துக்களின் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் என்ன நடக்கும்? இஸ்லாமியர்களும் அப்படி செய்தவரை கூப்பிட்டு விளக்கம் கேட்டு இதுபோல் இனிமாதிரி நடக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்வர்.
இப்படி நடந்த சம்பவம், இரண்டு சாரார்களுக்கும் பொதுவானது.
இப்படி கூட பார்க்கலாம், தர்காவை முஸ்லிம்களில் ஒரு சாரார் வெறுக்கின்றனர், பல சாரார்கள் வரவேற்கின்றனர்.
அப்படி இந்தியாவில் உள்ள அனைத்து தர்காக்களிலும் முஸ்லிம்களை விட ஹிந்துக்களே அதிகம்.
எனவே ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு பாதை இருக்கலாம், ஆனாலும் சகோதரத்துவம்/மனிதநேயம்/ஒற்றுமை காக்கப்பட வேண்டும்.
அனைத்து ஜீவாராசிகளுக்கும் தண்ணீர் (மழை) கேட்டு பிரார்த்தனை செய்ததில் என்ன தப்பு ? எங்கே மனிதநேயம்?????
ReplyDeleteஒரு முஸ்லிம் கோவிலில் போய் வேண்டுதல் வைப்பதை நாம் ஏற்று கொள்வோமா?அதுபோல் தான் அவர்களின் உணர்வும் இருக்கும்.மாணிக்கம் முத்துசாமி அவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றால் அவரின் செயல்பாட்டை யாரும் கண்டிக்கமாட்டார்கள்.
ReplyDeletegud answar
Deleteஅஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)..
ReplyDeleteஇந்த செய்தியை அணைத்து சகோதரர்களும் படிக்கவும்..
அதில் ஆழமான கருத்து என்ன?
சிந்திப்பீராக... ?
2014 ஸ்ரீஜய வருட பொது பலன்கள்
ராஜாவாகவும், மந்திரியாகவும் சந்திரனே வருவதால் மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டு.டிசம்பர் 15-க்குப் பிறகு நீதித் துறை வலுவடையும். அதிகார மையங்களைத் தாண்டி நீதிபதிகள் ஆணைகள் பிறப்பிப்பார்கள். தீவிரவாதம் அடக்கப்படும்.
Posted by -இந்துக்கள்
அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)..
ReplyDeleteஇந்த செய்தியை அணைத்து சகோதரர்களும் படிக்கவும்..
அதில் ஆழமான கருத்து என்ன?
சிந்திப்பீராக... ?
2014 ஸ்ரீஜய வருட பொது பலன்கள்
ராஜாவாகவும், மந்திரியாகவும் சந்திரனே வருவதால் மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டு.டிசம்பர் 15-க்குப் பிறகு நீதித் துறை வலுவடையும். அதிகார மையங்களைத் தாண்டி நீதிபதிகள் ஆணைகள் பிறப்பிப்பார்கள். தீவிரவாதம் அடக்கப்படும்.
Posted by -இந்துக்கள்
அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)..
ReplyDeleteஇந்த செய்தியை அணைத்து சகோதரர்களும் படிக்கவும்..
அதில் ஆழமான கருத்து என்ன?
சிந்திப்பீராக... ?
2014 ஸ்ரீஜய வருட பொது பலன்கள்
ராஜாவாகவும், மந்திரியாகவும் சந்திரனே வருவதால் மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டு.டிசம்பர் 15-க்குப் பிறகு நீதித் துறை வலுவடையும். அதிகார மையங்களைத் தாண்டி நீதிபதிகள் ஆணைகள் பிறப்பிப்பார்கள். தீவிரவாதம் அடக்கப்படும்.
Posted by -இந்துக்கள்
அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)..
ReplyDeleteஇந்த செய்தியை அணைத்து சகோதரர்களும் படிக்கவும்..
அதில் ஆழமான கருத்து என்ன?
சிந்திப்பீராக... ?
2014 ஸ்ரீஜய வருட பொது பலன்கள்
ராஜாவாகவும், மந்திரியாகவும் சந்திரனே வருவதால் மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டு.டிசம்பர் 15-க்குப் பிறகு நீதித் துறை வலுவடையும். அதிகார மையங்களைத் தாண்டி நீதிபதிகள் ஆணைகள் பிறப்பிப்பார்கள். தீவிரவாதம் அடக்கப்படும்.
Posted by -இந்துக்கள்
என்னங்க போட்டு குழப்புறீங்க,
Delete//ராஜாவாகவும், மந்திரியாகவும் சந்திரனே வருவதால் மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டு//.
எப்படீங்க இரண்டுபேரும் ஒரே உருவத்தில் இருக்க முடியும்?
ராஜா ஆண்பால், அப்போ ராணி வேறு இடத்தில் இருப்பாள், மந்திரி ஆண்பாலா பெண்பாலா, விளக்கமாக இல்லையே.
ஒரு வேளை மந்திரி பெண்ணாக இருந்தால், ஆண் மந்திரி ராணி இடத்தில் இருப்பான்.
அப்படிஎன்றால் ஆட்சி மாற்றம் உண்டு.
மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டு என்று பதிவிட்டவர்கள், அடுத்ததாக கோர்ட் தீர்ப்பை பற்றி சொல்லியிருக்கிறார்கள். அந்த தீர்ப்புதான் பாபரி பற்றிய தீர்ப்பு..
Deleteஅவரவர் மதம் அவர்களுக்கு பெரியது, ஒருவர் பிராத்தனைஇல் கலந்து கொள்வதால் சமூக நன்னிலக்கமாகிவிடாது.
ReplyDeleteஒருவருக்கு ஒருவர் உதவி புரிதல், அமைதி, விட்டு கொடுத்தல் இதன் மூலம் தான் ஏற்படும்.
இந்த மாதிரி சம்பவங்கள் மீடியாக்கள் பெரிது படுத்துவதால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இதன் மூலம் அறியலாம்.
நம்ம சமுதாய தலைவர்கள் அரசியல் வாதிகளை தொழுகை நடத்தும் இடத்தில் அரசியல் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதத்தில் அரசியலை புகுத்த வேண்டாம்!
Eppadeyea solle,,,,solle
ReplyDeleteaamantha janmagkala
allahvai nenaiyugkal
avanedamea kealugkal
மதவாதிகளுக்கு கிராம பஞ்சாயத்தார்கள் துணைபோவது வருத்தமடைய செய்கிறது..............ஹாலீத்
ReplyDeleteஅன்பு, பண்பு, மரியாதை, அரவணைப்பு, சகித்துக் கொள்ளுதல், அடுத்தவர் உரிமையில் தலையிடா இருத்தல், சகோதரத்துவம் எல்லோரும் மனிதர்கள் என்று மனித நேயம் வளர வேண்டும்.
ReplyDeleteமழைநீர் உயிர் மூச்சு அது கிடைக்க நடக்கும் இந்த வழிபாட்டி கலந்துக்கொள்வதில் நான் அதிக ஆர்வமாக இருக்கேன் என்று முந்தைய பேட்டில்யில் அவரே சொல்லிருக்கார். மனிதநேயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இவைகளை முளையிலேயே அறுத்தெரியவேண்டிய ஒன்று....
ReplyDeleteஅவர் எப்படி இஸ்லாமிய மழைத் தொழுகை தொழமுடியும் ?
ReplyDeleteஅதற்கு பல அனுஷ்டானங்கள்உண்டு.
அவர் தொழவில்லை. அவர் மார்க்கம் மாறவும் இல்லை. அவ்வழியாக செல்லும்போது அதனைக்கண்ட அவர் அவர்களோடோ சேர்ந்து தானும் தன் நல்லெண்ணத்தை பதிந்தார். தன் வேண்டுதலை ஒத்த நோக்கோடு பதிந்திட்டார். அவர் உள்ளத்தில் அப்பொழுது அவர் வணங்கும் சக்த்தியைத்தான் நினைத்திருப்பார்.
நல்லவர் உள்ளங்கள் இப்படித்தான் நல்லது நடக்க விரும்பும். அச்செயலை நீதி பரிபாலனம் செய்யும் பஞ்சாயத்தில் மதச்சாயங்களுக்கு படிந்து வண்ணம் தீட்ட முயல்வது பல மக்களின் நிற்பந்தத்தினாலே ஏற்பட்டிருக்கலாம். காரணம் முறையான பஞ்சாயத்துக்களில் அப்பஞ்சாயத்தும் ஒன்று. இருப்பினும் அப்பெரியாரை மன்னிப்பு கேட்க்க வைக்க எப்படித்தான் மனம் சாய்ந்ததோ !
ஒன்றுபட்ட மனிதகுலத்தில் ஜாதி, மதம் தூண்டுதல் இந்த தேர்தலில் திணிக்க முயல்கிறது நன்கு தெரிகிறது.
எங்கிருந்தாலும் மனிதன் தோற்றுப் போகமாட்டான்.
யாரோ சம்பாதிக்க இம்மக்களை துண்டாட துடிப்பது புரிகிறது. நல்ல அதிரையர் அதற்கு இடம் தரமாட்டார்.
ஜாதி, மதம் மனிதர்களை ஒற்றுமை படுத்தாவிடில், அமைதியை ஏற்படுத்தாவிடில் அது தோற்று போய்விட்டது என்று சொல்வதைத்தவிர வார்த்தைகள் இல்லை !
ஒரு முஸ்லிம் கோவிலில் போய் வேண்டுதல் வைப்பதை நாம் ஏற்று கொள்வோமா?அதுபோல் தான் அவர்களின் உணர்வும் இருக்கும்.
ReplyDeleteசகோதரர்களுக்கு........இப்ப தெரியுதா ஊரில் ஏன் மழை பெய்வதில்லை என்பதை ????????
ReplyDeleteதவறாக போதிக்கப்படும் மனிதாபிமானங்கள்.
ReplyDeleteஅதே போல் ஊரில் மற்றும் அக்கம் பக்க ஊர்களில் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் அவரவர் வேலையுண்டு என அமைதியுடன் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் அநியாயமாய், அக்கிரமமாய் கலவரம் ஏற்படுத்தி பிறர் உயிருக்கும், உடமைக்கும் சேதம் ஏற்படுத்த முயலும் சில இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு மனிதம் போற்றும் முறையான நல்லுபதேசம் செய்து அவர்களை நேரான பாதைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை இது போன்ற கிராம, ஊர் பஞ்சாயத்து நிர்வாகம் மேற்கொள்மேயானால் இந்த நிர்வாகத்தை உலகறிய பாராட்டுவது நம் கடமை.
இஸ்லாமிய சமுதாயம் பெருகியுள்ள ஊர்களில் வயிற்றுப்பிழைப்பிற்காக அவர்களின் வீடுகளில், தொழில்துறைகளில் வேலை செய்யும் இந்து மத சகோதர, சகோதரிகளை மததுவேசம் கொண்டு அவர்களையும் தண்டித்து விடாதீர்கள்.
நான் சிறுவனாக இருந்தது முதல் பெரியவனாகி திருமணம் முடித்த பின்னரும் என் வீட்டில் காலம் சென்ற எனதருமை தாயாருக்கு உறுதுணையாக இருந்து வேலை செய்த நமதூர் முத்தம்மாள் தெருவைச்சேர்ந்த அஞ்சலை என்ற வயதான பெண்மணி உடல்நலக்குறைவால் நான் ஊரில் இருக்கும் பொழுது சென்ற டிசம்பர் மாதம் மரணித்தார்கள். என்னை என்றும் என் உம்மா போல் தம்பீ என்றழைக்கும் அந்த அஞ்சலை என்ற பெண்மணியின் இறப்பு செய்தி கேட்டு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்க இறுதிச்சடங்குகள் நடந்து கொண்டிருந்த முத்தம்மாள் தெரு வீடு சென்று அப்பெண்மணியின் பேரனை அழைத்து அக்கூட்டத்தாரினிடையே என் இரங்கலை தெரிவித்து வந்தேன். இதை இங்கு பெருமைக்காகவோ, சிறுமைக்காகவோ குறிப்பிடவில்லை.
நானறிந்த ஒரு இந்து நபரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு வந்ததால் என்னை என் சமூகம் தண்டிக்கவும் இல்லை, அதற்கு என் மார்க்கம் ஒரு போதும் அனுமதிக்கவும் இல்லை. மனிதம் போற்றும் மனிதாபிமானம் தவறான மனிதர்களால் தவறாக போதிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டுள்ளது.
ஒரே தடவை எல்லோருக்கும் இறைவனால் வழங்கப்பட்ட இவ்வுலக வாழ்க்கையை முறையே பயன்படுத்தி ஈருலகிலும் முன்னேற்றம் காண்போமாக......
மலரும் நல்நினைவுகளுடன்.....
மன உணர்வுக்கு விடப்பட்ட சவாலில் பாதிக்கப்பட்ட திரு மாணிக்கம் முத்துசாமி இந்த மகத்துவ மார்க்கத்தை முழுக்க உணர்ந்து கரையூர் தெருவுக்கே மார்க்கத்தை எத்திவைக்கும் ஜனாப் மாணிக்கமாக மாறிட அல்லாஹ் இதன் மூலம் வாய்ப்பை கொடுப்பானாக!
ReplyDeleteஎதையும் இல்லை என்று கூறயியலாது. இஸ்லாமியப் போர்வையில் எத்தனையோ பேர்கள் இருந்தாலும் சில நேரங்களில் ஜோசியம் பிரபல இந்துக்கள் இடம் சென்ற கேட்கிறார்கள். அவர்கள் அவர்களின் வழக்கப்படி அவர்கள் வணங்கும் தெய்வங்களை வைத்து இவர்களும் அங்கு இருக்கவைத்துதான் ஜோசியம் சொல்கிறார்கள். அவர்கள் தரும் சில பொருள்களையும் இவர்கள் வாங்கித்தான் வருகிறார்கள். அவர்களை அறிந்திருந்தாலும் எந்த இஸ்லாமிய அமைப்பும் விளக்கி வைத்ததாகவும் இல்லை. இதுபோன்று தண்டனைகள் கொடுத்ததாகவும் இல்லை. அவரவர் வழி என்று விட மனம் இல்லாத சிலரும் விபரங்களை எடுத்துக்கூறி சொல்லித்தான் இருந்தார்களே அன்றி இது போன்று தண்டனைகள் தந்ததில்லை. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
ReplyDeleteஇதுபோல் அன்றும் இன்றும் இந்துக்களும் பள்ளிவாசல் தொழுகை நேரங்களில் வாசலில் வந்து நின்று தங்கள் சீக்குகள் குணம்பெற அவர்கள் ஓதிவிட செல்பவர்களும் உண்டு., குணம் அடைவதால்தான் அவர்கள் வருகிறார்கள். தர்ஹாக்களுக்கு சென்று அவர்களின் வேண்டுதலை சொல்லி வருபவர்களும் உண்டு. அவர்களின் நம்பிக்கையில் குணம்கண்டவர்கள் என்றும் இதுபோன்றவைகளை விட்டதில்லை. அதனால் அவர்கள் இதுபோன்று தண்டிக்கப்படவும் இல்லை, துன்பப்படுத்தவும் இல்லை. இன்றுதான் துவேசங்கள் தினிக்கப்படுகிறது.
இஸ்லாமியர் தங்களுக்குள்ளேதான் கருத்து மோதல்களை செய்துக்கொள்வார்கள். அவ்வாறே இந்துக்களும்.
பாம்புகடி போன்ற விசஜந்துக்கள் விசங்களை தர்ஹாக்களில் வைத்து இறுக்கியது உண்டு. நாய்கடி போன்றவைகளுக்கு கழுவன்காடு செல்வதும் உண்டு. இவைகளை மனதில் கொண்டு ஒற்றுமையாக வாழ வேண்டும்.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் அன்னியோநியமாகத்தான் மதம் ஜாதி என்று பாராமல் பழகி வருகின்றனர். இப்பொழுது மதவாதம் தலைதூக்குகின்றது. வேறுபாடுகள் துல்லியமாக கண்டு பிரித்தாளும் சூழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளது. அரசியல் இலாபம் அடைய இன்று மனிதர்கள் உள்ளத்தில் துவேசங்கள் விதைக்கப்படுகிறது. இது நல்லதல்ல. எது வந்தாலும் நம் அமைதி, ஒற்றுமை இழக்க நாம் அனுமதிக்கக்கூடாது.
அன்றும் இன்றும். பள்ளிவாசல் உள்ளே இந்து பெரியவர்களை கண்ணியப்படுத்தியதும் உண்டு. கோவிலில் இஸ்லாமிய பெரியவர்கள் கண்ணியப்படுத்தியதும் உண்டு. எனவே துவேசங்களை விதைக்க விடாதீர்கள்.
உள்ளுரில் இருந்தாலும் வெளியூருக்கு சென்றாலும் பிறர் நம்மளை பார்த்து நீ எந்த ஊரு என்று கேட்டால் அதிராம்பட்டினம் என்று கூறிவருகிறோம். இந்த RSS காவி தீவிரவாதிகள் நமதுரின் பெயரை எப்படி குறிப்பிட்டுள்ளனர் என்று பாருங்கள் நமதூர் அதிவீரராமபட்டினம் என்று குறிப்பிட்டுள்ளனர் அப்படி என்றால் இவர்கள் எந்த அளவிற்கு மதவெறி பிடித்து அலைகிறார்கள் என்று பாருங்கள். பிற சமுதாய மக்களிடம் ஒற்றுமையாக வாழ இவர்கள் விடமாட்டார்கள். இந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை, இந்த மாதிரி பஞ்சாயத் இருக்கும் வரை சமுக நல்லிணக்கம் ஏற்படாது. RSS இயக்கத்தை ஒழித்தால் மட்டுமே அனைவரும் ஒற்றுமையாக வாழ முடியும்.
ReplyDelete