.

Pages

Saturday, April 5, 2014

முத்துப்பேட்டை அருகே கேஸ் ஏற்றிவந்த டேங்கர் லாரி தலைகீழ் கவிழ்ந்ததால் ஊரைவிட்டு கிராம மக்கள் வெளியேற்றம் !

முத்துப்பேட்டை அருகே பரபரப்பு டேங்கர் லாரி கவிழ்ந்து கேஸ் கசிவு ஊரை விட்டு மக்கள் வெளியேற்றம்.

நாகை அருகே உள்ள நரிமணத்தில் இருந்து 6 டேங்கர் லாரிகளில் சமையல் எரிவாயு(கேஸ்) எடுத்து செல்லப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக இந்த லாரிகள் இரவு 10.30 மணிக்கு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை கடந்து  பட்டுக்கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தது. வழியில் தம்பிக்கோட்டை கீழக்காடு என்ற இடத்தில் பாமணி ஆற்றின் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக முதலில் வந்த லாரி திடீரென அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் டேங்கர் மட்டும் தனியாக கழன்று விழுந்து டேங்கர் வால்வு சேதமடைந்தது. கேஸ் கசியத்தொடங்கியது.

உடனடியாக போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர். அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெருகவாழ்ந்தான், மன்னார்குடி வழியாக திருப்பி விடப்பட்டது. லாரி கவிழ்ந்த இடத்தின் அருகில் இருந்து 1.கி.மீ. சுற்றளவில் உள்ள வீடுகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு  வடகாடு பகுதிக்கும் 1 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள தோப்புகளுக்கும் அனுப்பி வைத்தனர். இரவு முழுவதும் பலர் தோப்புகளிலேயே தங்கி இருந்தனர். 1 கி.மீட்டர் சுற்றளவில் யாரும் அடுப்பு எரிக்க வேண்டாம், பீடி, சிகரெட் பிடிக்கவேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவித்தனர். அத்துடன் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, மதுக்கூர், மன்னார்குடி ஆகிய 5 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இவர்கள் கேஸ் வெளியாகும் சிலிண்டரில் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்துகொண்டிருக்கிறார்கள். இன்று காலை வரை அந்த பணி நடக்கிறது. சிலிண்டரை மீட்க, நாமக்கல், திருச்சியில் இருந்து பொக்ளின் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மீட்பு வாகனம் வந்தபிறகு தான் சிலிண்டரை சரியாக நிறுத்தி அதில் உள்ள காஸ் இன்னொரு சிலிண்டருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்குள்ளான லாரியை ஓட்டிச்சென்ற டிரைவர் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த வாஞ்சிநாதன்(25) என்பவரும் விபத்தில் காயமடைந்தார்.

நன்றி : தினகரன்

2 comments:

  1. தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர். தீயணைப்பு படை அதிரையில் உள்ளதா?

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.