.

Pages

Friday, April 18, 2014

அதிரையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட டிஆர் பாலு !


அதிரையில் நேற்று இரவு திமுகவின் தஞ்சை தொகுதி வேட்பாளர் டிஆர் பாலு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது திமுக கட்சியினர் அதிரையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் உற்சாகமாக அழைத்து சென்றனர். வேட்பாளர் டிஆர் பாலுவின் பிராசார வாகனத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், பட்டுகோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலு, கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் வேட்பாளரோடு ஒன்றாக நின்றுகொண்டு பொதுமக்களிடம் கையசைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வேட்பாளருக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள திமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதில் ஏராளமான திமுக கட்சியினர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இருசக்கர வானங்களில் வேட்பாளரின் வாகனத்தோடு அணிவகுத்து ஒவ்வொரு பகுதிகளுக்கும் பின்தொடர்ந்து சென்றனர்.

7 comments:

  1. திமுகவினர் ம ம கட்சி மீது அதிர்ப்த்தி
    தமிழகத்தில் பல இடங்களில் கூட்டணிக்கட்சிக்காக ஓட்டு சேகரிக்காமல் தன் கட்சி போட்டியிடும் மாயாவரத்தில் வாக்கு சேகரிப்பதற்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ம ம கட்சியினர் சென்றுவிட்டனர் எனவே திமுகவினர் அதிர்ப்பத்தில் உள்ளனர்

    இதுதான் கூட்டணி தர்மமா இதே போல் மாயாவரத்தில் உள்ள திமுக மற்றும் விடுதலை சிறுதகைகள் அவர்கள் போட்டியிடும் தொகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்
    இதுலே வேறு புறப்படும் போது புகைப்படங்கள் வேறு எடுத்து எங்கள் அப்பன் குர்திக்குள் இல்லை என்பதுபோல் காட்டுகிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. யார் எங்கிருந்தாலும் என்ன,பாராளுமன்றத்திற்கு ஒரு முஸ்லிம் சென்றால் நல்லதுதானே.."ஹைதர் அலியா" அல்லது மணிசங்கர் "அய்யரா", என்பதை ஆராய்ந்து உணர்ந்துக்கொள்ளலாமே...

      Delete
  2. சகோ அஸ்ரப் அவர்களே உங்கள் கருத்தை எப்படி வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் ஆனால் தி மு க வின் நப்பிகையான கூட்டணியான ம ம க மீது அதிர்ப்தி என்கிற கதை எல்லாம் வேண்டாம்.

    ReplyDelete
  3. செம கூட்டம், ஒரு பக்கம் கொடிகளின் வர்ணங்கள், மறுபக்கம் ஜூஸின் வர்ணங்கள். கலக்கிட்டீங்க போங்க.

    ReplyDelete
  4. பாராளுமன்றத்திற்கு வெற்றி பெறுகின்றவர்கள் கூட்டதிற்கு போவதே இல்லை உதாரணமாக நம்ம MLA க்கள் சட்ட சபையில் மேசை தட்ட தான் லாயக்கு, மக்கள் குறைகளை பற்றி பேசுவது இல்லை.

    மோடிக்கு பேச்சுக்கு சவால் விட்டு பேச திராணி உள்ளவர் ஹைதர் அலியா அல்லது அய்யரா என்று பாருங்கள். தெருவில் ஆர்ப்பாட்டம் பண்ணுவதை விட பாராளுமன்றத்தில் பேச வேண்டும் அதை விட்டு விட்டு சும்மா கூவ்ரதில் ஒன்றும் இல்லை.

    அய்யர் மோடிக்கு சவாலாக உடையவர் என்பதில் சந்தேகமே இல்லை அப்படியே ஹைதர் அலியும் இருப்பாரா?

    ReplyDelete
    Replies
    1. பல வருடங்களாக மத்தியில் அமைச்சராக இருந்த இந்த அய்யர் எத்தனை முறை முஸ்லிம்களுக்கு சலுகைகள் பெற்று தந்துள்ளார். பாராளுமன்றத்தில் பலமுறை முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துள்ளார், என்று உங்களால் நிருபீக்க முடியுமா?

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.