.

Pages

Thursday, April 17, 2014

பிஜேபி வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அதிரைக்கு வருகை ! ஏராளமான போலீஸார் குவிப்பு !

தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை ஒன்றியத்தின் கீழ்வரும் பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கருப்பு (எ) முருகானந்தம் இன்று இரவு 7.15 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் அதிரை வழியாக வருகைதர இருக்கிறார்.

மிலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டையிலிருந்து வருகை தரும் வேட்பாளர் வண்டிபேட்டை வழியாக அதிரை பேருந்து நிலையத்தை வந்தடைகிறார். அங்கே சிறிது நேரம் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அதனைதொடர்ந்து ஈசிஆர் சாலை வழியாக ஏரிபுறக்கரை கிராம பகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்கிறார்.

வாக்கு சேகரிப்பின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக அதிரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில், அதிரை காவல்துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் பொறுப்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிக்காக போலீஸ் படைகள் அதிரைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக அதிரை போலீசார் சார்பில் நேற்று இரவு அதிரையில் செயல்படும் அரசியல் கட்சி மற்றும் சமுதாய அமைப்புகளுக்கு அழைப்புவிடப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் பிஜேபி, தவ்ஹீத் ஜமாத், எஸ்டிபிஐ ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருத்துகளை வழங்கி இருக்கிறார்கள்.

14 comments:

  1. சினிமா பைத்தியம் போல் தேர்தலும் பைத்தியமாகி விட்டது. இதில் யார் பைத்தியம், வேட்பாளரா அல்லது மக்களா, இரண்டுபேருமே பைத்தியக் காரர்கள்.பைத்தியங்கள் ஒன்று சேர்ந்தால் பிரச்சனைதான் வரும்.

    ஆகவே, இரண்டுபேரும் நன்றாக சிந்தித்து செயல் படுங்கள்.பிரச்னையை கை விடுங்கள். வெற்றி தோல்வி சகஜம், ஒருவேளை நிலநடுக்கம் ஏற்பட்டு ஒட்டுமொத்த எல்லோரும் வீழ்ந்துவிட்டால் என்ன பண்ணுவீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்வி என்னை வியப்படைய வைக்கிறது. "Neenga Tamillan ah or bjp"

      Delete
  2. BJP காரனை ஊருக்குள் விடாதிங்க அவன் மத வெறி பிடித்தவன். அவன் ஊருக்குள் வந்தால் கலவரம் வரும். முத்துப்பேட்டைக்கு போனான் அங்கேயும் கலவரம். மல்லிப்பட்டினதுக்கு போனான் அங்கேயும் கலவரம். இப்ப முஸ்லிம்கள் வாழும் பகுதியான நமதுருக்கு வருவது ஒட்டு கேட்க அல்ல கலவரத்தை தூண்டவே வருகிறான். ஊரு மக்களே உஷாராக இருங்கள்.

    ReplyDelete
  3. ஆ! இன்று இரவு 7.15மணிக்கா? ஓட்டு கேட்டா, பயங்கர போலீஸ் பாதுகாப்பா, ச்சே கேவலம், இதுக்குபோய் அலடிக்கிட்டு.

    மாலை நேரம் தொடங்கி இரவு வரைக்கும் ஹபீபா ஹைப்பரில் பெண்கள் கூட்டம் அலைமோதுகின்றன. எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து பொது மக்கள் குறிப்பாக பெண்களின் நலன்கருதி ஒரு குறிப்பிட்ட நேரம் ஹபீபா ஹைப்பரை மூட சொல்லுங்கள். அல்லது பெண்களை வெளியில் வரவேண்டாம் என்று தடை செய்யுங்கள். இன்று ஒருநாள் மட்டும் வெளியில் வராமல் தியாகம் செய்யச் சொல்லுங்கள்.

    பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் பிரச்சனையில் வீழ்ந்து விடாமல் அமைதி காக்க வேண்டும்.

    நேசவுகாரத் தெருப் பக்கம் நடுராத்திரி வேளையில் நாய்களின் ஊளைகல் பெருத்த சங்கடமாக இருக்கின்றது, நமேக்கேன் வம்பு என்று நான் காதை பொத்திக்கொண்டு படுத்துக்குவேன்.

    ReplyDelete
  4. >>கருப்பின் நோக்கம் எதுவானாலும் வாக்கு சேகரிக்க வந்தவர் என்கிற வகையில் அவரை அனுமத்தித்திருக்கலாம், முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட பதட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதை அவர்கள் இப்படி வெளிப்படுத்தி இருக்கக் கூடாது. காவல்துறையை அணுகி, பெருங் கூட்டம், முழக்கங்கள் இல்லாமல் வாக்கு கேட்க வேண்டும் எனவும், அதிக அளவில் காவல்துறையினர் கூட வரவேண்டும் எனவும் கோரி இருக்கலாம்.

    அப்பாவிகள் பலரும் கைது செய்யபட்டுள்ளதாக முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இது காவல்துறை வழக்கமாகச் செய்வதுதான். உண்மையில் இப்படியான ஒரு பிரச்சினையைக் காவல்துறை எதிர்நோக்கி இன்னும் அதிகப் பாதுக்காப்பை அங்கு உறுதி செய்திருந்தால் இந்தச் சம்பவமே அன்று தடுக்கப் பட்டிருக்கலாம்.<<

    https://www.facebook.com/marx.anthonisamy

    ReplyDelete
  5. I request adirainews to publish Prof. Marx facebook status as a new post.

    ReplyDelete
  6. // I request adirainews to publish Prof. Marx facebook status as a new post. //

    Dear Br. Mahir

    Send it to Editor mail and we will consider it

    ReplyDelete
  7. என் மனதிற்க்கு எட்டிய செய்தியை இங்கு பதிவிடுகிறேன். கருப்பு (எ) முருகானந்தம் வருவதை செய்திடுவதே தவறு. அடுத்து அவன் வருவதை யாரும் ஒரு பொருட்படுத்த வேண்டாம், அதை பத்தின நினைப்பு கூட வேண்டாம் நம் மத்தியில். எல்லா தேர்தலிலும் BJP- நம் ஊருக்கு வருவார்கள் ஆனால் ஒரு காக்கை கூட அவனையும் அவன் பேச்சையும் கேட்காது. இன்னும் சிலருக்கு இப்படி ஒரு வேட்பாளர் கூடாவா நம் தொகுதியில் போட்டி இருகிறான் என்று கூட தேரியாது. அது தெரியவும் வேண்டாம்.
    நாம் ஏதாவது சிரிய எதிர்ப்பை காட்ட அதை இப்ப உள்ள விபச்சார ஊடகங்கள் ஊதி பெரிதாக்க பிறகு அவனுக்கு விழ இருந்த 10 ஓட்டு 1000 ஓட்டா மாரிவிடும். ஆதலால் அமைதியும், பொருமையும் காத்திட வேண்டும் நம்மவர்கள்.
    அவன் வருவதே ஓட்டு கேட்க்க அல்ல, அதை வைத்து கலகம் செய்து ஆதாயம் தேடவே தவிற வேறொன்றும் இல்லை. ஆகயால் நம்மவர்கள் எதையுமே கண்டுக்கொள்ளாமல் இருப்பதுவே மிகச்சிறந்தது. இதை நம்மவர்களுக்கு அறிவுருத்தவும்.

    ReplyDelete
  8. >>என் மனதிற்க்கு எட்டிய செய்தியை இங்கு பதிவிடுகிறேன். கருப்பு (எ) முருகானந்தம் வருவதை செய்தி பதிவிடுவதே தவறு. <<
    I too feel the same.... should be responsible media.

    ReplyDelete
  9. அதிரை மக்களின் சகோதரத்துவம் எந்த வகையிலும் பிளவு படுத்த முடியாதது. அதிரை பிரஜைகளாக நாம் அனைவரும் இந்தியாவை நேசிக்கிறோம்.

    ReplyDelete
  10. இன்னைக்கு அமாவசையா இல்லையா? அதை விடுங்க, ஏற்கனவே மின்சாரம் இல்லாமல் இருட்டு அவனும் கருப்பு அதற்க்கு ஏன் இவனுன்க்கு இவ்வளவு பில்டப்பு.

    தேர்தல் அதிகாரிகள் இவனுடைய வாகனத்தை மறக்காம செக் பண்ணுங்க!! பிளான் பண்ணி தான் வர்ராஅன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

    ReplyDelete
  11. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    மனிதர்களில் பலவகை இல்லையா, ஆக மொத்தத்தில் நாம் எல்லோரும் மனிதர்கள், தண்ணீரில் பலவகை இல்லையா ஆக மொத்தத்தில் தண்ணீர் எல்லாம் தண்ணீர்தான் அவ்வளுவுதான்.

    வேட்பாளர் அது யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்கள், உங்களுக்கு இஷ்டப்பட்டா ஆதரிங்க, இல்லாவிட்டால் ஆதரிக்காமல் இருங்க, உங்களை வலுக்கட்டாயப் படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. மேலும் நீங்கள் தகராறு பிரச்சனை அப்படி ஏதாவதொரு நிலையில் இல்லாமல் இருக்க வேண்டும்.

    எல்லோருக்கும் மேலாக இறைவன் இருக்கின்றான், நம் எல்லோருக்கும் அவனே போதுமானவனாக இருக்கின்றான்.

    இதுக்குமேலே வேறு ஏதும் உண்டா?

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  12. இரண்டுபேரும் நன்றாக சிந்தித்து செயல் படுங்கள்.பிரச்னையை கை விடுங்கள். வெற்றி தோல்வி சகஜம், ஒருவேளை நிலநடுக்கம் ஏற்பட்டு ஒட்டுமொத்த எல்லோரும் வீழ்ந்துவிட்டால் என்ன பண்ணுவீர்கள்?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.