.

Pages

Wednesday, April 2, 2014

தஞ்சை தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !? அதிரை நியூஸின் முதல் தகவல் அறிக்கை [ FIR ] !

தேர்தல்களம் - 2014 :
தொகுதி மறுசீரமைப்புக்கு பின் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. கடைமடை பகுதியான தஞ்சையில் கள்ளர் சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களை அடுத்து கணிசமான அளவில் இஸ்லாமியர்களும், ஆதிதிராவிடர்களும், ஏனைய சமூகத்தினர் சராசரியாகவும் உள்ளனர்.

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 6 அணிகள் களத்தில் இருக்கின்றன. இதில் ஆளுங்கட்சியான அதிமுக ஒரு அணியாகவும், திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் 'ஜனநாயக முற்போக்கு கூட்டணி அணியாகவும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனி அணியாகவும், தேமுதிக தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, பிஜேபி, ஆகியன தேசிய ஜனநாயக கூட்டணி என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தனி அணியாகவும், ஆம் ஆத்மி மற்றொரு தனி அணியாகவும் மோத உள்ளனர். இம்முறை தமிழக அளவில் போட்டிகள் மிகவும் பலமாக காணப்படும் என அரசியல் வல்லூனர்கள் கணித்துள்ள நிலையில் பிரதான கட்சிகளின் வெற்றி தோல்விகள் சொற்ப எண்ணிக்கையில்தான் வாக்கு வித்தியாசங்கள் அமையும் என்பதையும் மறுக்க இயலாது.

தஞ்சையை பொறுத்தவரை இதுவரையில் கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளார்களில் அதிமுக சார்பில் திரு. கு. பரசுராமனும், திமுக சார்பில் திரு. டிஆர் பாலுவும், காங்கிரஸ் சார்பில் திரு. கிருஷணசாமி வாண்டையாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எஸ். தமிழ்செல்வியும், பிஜேபி சார்பில் கருப்பு (எ) முருகானந்தமும், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் திரு. பழனிராஜனும் களத்தில் உள்ளனர். இவர்களிடேயே போட்டிகள் சற்று கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

களத்தில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்த முதல் தகவல் அறிக்கையை பார்ப்போம்.

திரு. டிஆர் பாலு ( திமுக ) :
தொகுதியில் திமுக தொடர்ந்து வெற்றியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. எஸ்எஸ் பழனிமாணிக்கத்திற்கு கட்சியில் இந்த முறை சீட் வழங்கப்படவில்லை என்பதால் ஆரம்பத்தில் இவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து  டிஆர் பாலு மற்றும் எஸ்எஸ் பழனிமாணிக்கம் ஆகியோரிடையே ஏற்பட்ட சமரசத்தை அடுத்து களத்தில் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இவருக்கு ஆதரவான வாக்குகள் அதிகமாக காணப்படுகின்றன. பட்டுக்கோட்டை தொகுதியை பொறுத்தவரை திமுகவின் கோட்டையாக இருந்து வருவதற்கு இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியே காரணம். இந்த முறை இஸ்லாமியர்கள் அதிகமாக காணப்படும் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் மனநிலை சற்று மாறியே காணப்படுகிறது. காரணம் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்ட பணிகளை கிடப்பில் போடப்பட்டதற்கு இவர்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை போக்கும் வகையில் மக்களை நேரடியாக அணுகி வாக்குறுதி கொடுத்தால் நிச்சயம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார மக்களின் வாக்கு வழக்கம் போல் திமுகவிற்கே கிடைக்கும். கூட்டணி கட்சிகளாகிய மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் ஆதரவு இவருக்கு கூடுதல் பலமாக அமையும். தஞ்சையின் மற்ற சட்டசபை தொகுதிகளாகிய ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சை ஆகியவற்றில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் வெற்றியை சுலபமாக தட்டிச்செல்லலாம்.

திரு. கு. பரசுராமன் ( அதிமுக ) :
ஆளுங்கட்சி வேட்பளாராகிய இவர் பலம் பொருந்திய வேட்பாளருடன் மோத இருப்பது பெரும் சவால்தான். மாநில அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்கிறார்கள். இவருக்கு சாதகமாக ஒரத்தநாடு, திருவையாறு, தஞ்சை ஆகிய சட்டசபை தொகுதிகளில் பெரும் வாக்குகளே. இதற்கு காரணம் கடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தட்டிச்சென்றதுதான். மேலும் அமைச்சரின் சொந்த தொகுதியாக இருப்பதால் இந்த பகுதிகளில் அதிகமான அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதும் இவருக்கு கூடுதல் பலம். மேலும் அதிமுகவிற்கு இந்த தேர்தலில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தினர் ஆதரவு தருவதால் இவருக்கு கூடுதல் பலமாக இருக்கும். இந்த தொகுதியில் உள்ள பிற சட்டசபை தொகுதிகளாகிய மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி கூடுதல் வாக்குகள் பெற முயற்சிப்பது அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு முதல்அமைச்சரின் நன்மதிப்பு லிஸ்டில் தொடர நிச்சயம் உதவும். தேர்தல் பணிகளில் கூடுதல் சுறுசுறுப்பு தேவை.

திரு. கிருஷ்ணசாமி வாண்டையார் ( காங்கிரஸ் ) :
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். மத்திய அமைச்சர் ஜிகே வாசனின் ஆதரவாளர். மதசார்பற்ற அரசு அமைய எண்ணுவோர் இவருக்கு வாக்களிக்க விரும்பலாம். மேலும் இந்த தொகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய வாக்குகள் மற்றும் இவர் சார்ந்த சமுதாய வாக்குகள் அப்படியே சிதறாமல் கிடைக்கும். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்ஆர் ரெங்கராஜன் அவர்கள் ஆதரவாக இருந்து தனது தொகுதியில் வாக்கு சேகரித்து கொடுப்பது இவருக்கு கூடுதல் பலமாக அமையும். மற்றபடி இரு பிரதான கட்சிகளின் பலம் பொருந்திய வேட்பாளர்களோடு மோதுவதால் வாக்கு சேகரிக்கும் வியூகத்தை சற்று துரிதப்படுத்த வேண்டும். அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது மட்டும் உறுதி.

எஸ். தமிழ்செல்வி ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) :
கட்சியின் சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமையை தட்டிச்செல்கிறார். பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர். சொந்த ஊரில் இவருக்கு கூடுதலான வாக்குகள் கிடைக்கும். இவர் வாங்கும் வாக்குகளில் பெரும்பாலானவை அதிமுகவிற்கு விழும் வாக்குகளாக அமையும். மற்றபடி டெபாசிட் பெறுவதற்கு கடும் முயற்சியில் ஈடுபட வேண்டியிருக்கும்.

திரு. எஸ். பழனிராஜன் ( ஆம் ஆத்மி ) :
பி.இ பட்டதாரியான இவர் அரசு  மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். ஊழலை ஒழித்துக்கட்ட எண்ணுவோர், புதிய மாற்றத்தை எதிர்பார்ப்போர் இவருக்கு வாக்களிக்க முற்படலாம். குறிப்பாக நகர்புறங்களில் படித்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இக்கட்சிக்கு வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. கிராம புறங்களில் இந்த கட்சிக்கு கூடுதல் அறிமுகம் தேவை. மற்றபடி டெபாசிட் பெறுவதற்கு கடும் முயற்சியில் ஈடுபட வேண்டியிருக்கும்.

'கருப்பு' (எ) முருகானந்தம் ( பிஜேபி ) :
தேஜ கூட்டணியின் சார்பில் பிஜேபி வேட்பாளராக முதன்முறையாக தொகுதியில் போட்டியிடுகிறார். முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவரான இவர் தீவிர இந்துமத பக்தர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். தீவிர மத ஆர்வலர்கள் இவருக்கு வாக்கு செலுத்த முற்படலாம். எனினும் கூட்டணி கட்சிகளான மதிமுக, தேமுதிக, பமக ஆகியன இந்த தொகுதியில் வலுவிழந்து காணப்படுவதால் வாக்குகள் இவருக்கு கிடைப்பது சற்று சிரமம்தான். மற்றபடி டெபாசிட் பெறுவதற்கு கடும் முயற்சியில் ஈடுபட வேண்டியிருக்கும்.

அதிரை நியூஸ் தேர்தல் குழுவினர்

3 comments:

  1. தேர்தல் களத்தில் கருத்து கணிப்பை பதிவு செய்து மற்ற ஊடகங்களுக்கு இணையாக அதிரை நியூஸ் முன்னேறுகிறது...... மாஷா அல்லாஹ். அசிரியர்கள்ளுக்கு என் வாழ்த்துக்கள்.

    மான் ஷேக்

    ReplyDelete
  2. தொடர்ந்து DMK தஞ்சை தொகுதி தக்கவைக்க காரணம் கூட்டணி தான் ஆனால் இப்போ நிலைமை வேற. மத்தியில் யார் வரணும் என்று தான் மக்கள் பார்ப்பார்கள்,ஆளும் கட்சி வேட்பாளரா அல்லது காங்கிரஸ் - ADMK க்கு போடும் ஓட்டு அது பிஜேபி க்கு தான் போகும், அம்மையார் பிரதமர் ஆக வாய்ப்பு குறைவு-முடியாது. காரின் ஓனர் நிர்வாக திறமையானவராக இருந்தாலும் டிரைவர் சரி இல்லை என்றால் சிக்கலை தான் தரும் - புரியும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. KARUTHU KANIPIL LVS UMARTHAMBI MARAIKAVAI KANAM..........?
    SUYATCHAIYAKA NINDRU VETRI PERUVARA MAATARAA.......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.