இந்நிலையில், இந்த பிரச்சனையை சமாளிக்கும் விதமாக தண்ணீர் பயன்பாட்டை 25 சதவிகிதம் குறைக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் ஜெர்ரி புரவுன் கூறுகையில், நாம் 5 அடி பனிக்குமேல் நிற்பதற்கு பதிலாக வெறும் தரை மீது நின்றுகொண்டிருக்கிறோம். இது மிகவும் ஆபத்தான அறிகுறி. கடுமையான பல சட்டங்கள் மூலம் இதை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி, கோல்ப் மைதானங்கள், அலங்கார புல்வெளிகள், தொழில் பூங்கா, கல்லறைகள் போன்றவைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நீரின் அளவில் 25 சதவிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
இதை அமல்படுத்தாதவர்கள் மீது 10 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு அளிக்கப்படும் நீரின் அளவு ஏற்கனவே கடுமையாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த கட்டுப்பாடுகள் அவர்களுக்கு பொருந்தாது என கூறியுள்ளார்.
அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாடு இல்லாத பொருளாதார வளர்ச்சிக்கான விலையை கொடுக்க ஆரம்பித்திருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி உள்ளார்கள்.
ReplyDeleteஎப்பாடுபட்டாவது தமது நாடுகளை அமெரிக்கா போல மாற்ற துடிக்கும் ஆட்சியாளர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். இல்லையெனில், மீனினமே அழிந்தபின் தூண்டில் போட்ட கதைதான் மிஞ்சும்!