.

Pages

Saturday, August 20, 2016

90 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புகள் சவூதியில் கண்டுபிடிப்பு !

அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 20
மண்ணுக்குள் புதைந்துள்ள பண்டைய காலங்களில் ஓடிய ஆறுகளின் தடங்களை மீட்டெடுக்கும் 'பசுமை அரேபியா' எனும் அகழ்வாரய்வு பணிக்காக 2012 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சவூதி மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்களின் கூட்டு ஆராய்ச்சியாளர்கள்; குழு, சவூதி அரேபியாவின் 'தைமா' நகரம் அருகேயுள்ள அல் நபூத் பாலைவனப் பிரதேசத்தில் சுமார் 90 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித விரல் எலும்புகளை கண்டறிந்துள்ளனர்.

மனித இனம் படைக்கப்பட்டு சுமார் 500,000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புகளிலேயே இது தான் மிகவும் பழமையானது என கணிக்கப்படுகின்றது.

அல் நபூத் பாலைவனத்தின் 'டாஸ் அல் குதாத்' பகுதியில் சுமார் 325,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் வாழ்ந்திருக்கக்கூடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர், தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறுகின்றன.

Source: Gulf News / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.