.

Pages

Wednesday, December 28, 2016

அதிரையில் நடந்த இரத்ததான முகாம்:100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

அதிராம்பட்டினம், டிச-28
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-2 மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இரத்த தானம் முகாம் இன்று [ 28-12-2016 ] புதன்கிழமை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெற்றது.

முகாமிற்கு கிளைத்லைவர் பஜால் முகைதீன் தலைமை வகித்தார். அவ்வமைபின் மருத்துவ அணி பொறுப்பாளர்கள் வல்லம் ஜாபர், முஹம்மது அவூன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் இரத்த கொடையாளர்களிடமிருந்து 63 யூனிட் இரத்தம் தானம் பெறப்பட்டது.

முன்னதாக தஞ்சை மீனாட்சி மருத்துமனை மருத்துவக்குழுவினர் இரத்தம் தானம் செய்ய முன்வந்தவர்களுக்கு இரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் அளவு, உடல் எடை ஆகியவை பரிசோதித்தனர்.

இம்முகாமில் தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-1, கிளை-2 நிர்வாகிகள் - உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான குருதி கொடையாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். இரத்தக் கொடையாளர்கள் அனைவருக்கும் ஜூஸ், பிஸ்கட், பேரிட்சை பழங்கள் வழங்கப்பட்டன. முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடந்தது. முகாம் ஏற்பாட்டினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை-2 செய்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.