மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை அவர்கள்
இன்று (17.12.2016) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் தஞ்சாவூரில் நடைபெற்ற நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 2400 நபர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மன்னர் சரபோஜி அரசினர் கலைக்கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாமில் நிறுவனங்கள் தேர்வு செய்த 365 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று வழங்கினார்.
இன்று நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் சென்னை விசாகாஸ், மீனாட்சி மருத்துவமனை, சீப்ரா பார்மசி (பி) லிட்., பெரம்பலூர் எம்.ஆர்.எப். லிமிடெட், சங்கம் ஹோட்டல், தஞ்சாவூர் அரசு ஹோட்டல், டாட்டா யரேக பார்பெர்ஸ் (பி) லிட்., ஏ.ஏன்.பி. நேச்சுரல் (பி) லிட்., கும்பகோணம் இன்போ நெட் பி.பி.ஓ., ஈக்விட்டாஸ் டெவலப்மெண்ட் இனிசியேட்டிவ்ஸ் டிரஸ்ட் லிட், ஜெல் இன் டெக் (பி) லிட்., திருச்சி மற்றும் தஞ்சை ஹை பேசன் கார்மென்ட் நிறுவனம், தஞ்சாவூர் காவேரி கேட்ரிங் சர்வீஸ், எல்.ஐ.சி.ஆப் இந்தியா, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஐசிஐசிஐ அகாடமி, சென்னை வேவ்ஸ், சென்னை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆப்பல்லோ பார்மசி, தஞ்சாவூர் எச்.டி.எப்.சி. இன்சுரன்ஸ், தஞ்சாவூர் விசன் இந்தியா, தஞ்சாவூர் சத்யா கம்ப்யூட்டர்ஸ், ஸ்ரீ லெட்சுமி ஹார்ட்வேர்ஸ், விக்னேஷ் என்டர்பிரைசஸ் அன்டு சர்வே இன்சினியரிங், குவாலிட்டி எலக்ட்ரிக்கல்ஸ் இந்தியா (பி) லிட்., சதர்ன் கிரீன் பவா கர்நாடகா, மகேந்திரா கம்பெனிஸ், அரியலூர் ஜேட் இன்ஸ்டியசன், திருச்சி, கீ இன்ஸ்டியசன், டாட்டா ஏ.ஐ.ஏ. இன்சுரன்ஸ், தஞ்சாவூர் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன், கோட்டாக் மகேந்திரா ஆகிய 30 நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை இன்று தேர்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திருமதி. ரேவதி, உதவி திட்ட அலுவலர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.