.

Pages

Thursday, December 22, 2016

துபாயில் கடந்த 11 மாதங்களில் 80,000 போக்குவரத்து குற்றங்கள் பதிவு !

அதிரை நியூஸ்: துபாய், டிச-22
துபையில் 2016 ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை கடந்த 11 மாதங்களில் சுமார் 80,710 போக்குவரத்து விதிமீறல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 28,180 குற்றங்கள் கண்காணிப்பு ரேடார் கேமராக்கள் மூலமும் எஞ்சியவை போலீஸ் மற்றும் பொதுமக்களின் புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்டவை.

அதிகபட்சமாக, கடந்த மே மாதம் 9,510 குற்றங்களும் குறைந்தபட்சமாக ஜனவரி மாதத்தில் 5,520 குற்றங்களும் பதிவாகியுள்ளன. முன்னாள் ராணுவத்தினர் பதியும் போக்குவரத்து புகார்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், பொதுமக்கள் 910 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாக தெரிவிக்கும் புகார்கள் போலீஸாரின் விசாரணைக்குப் பின் பதியப்படுவதாகவும் துபை போக்குவரத்துத் துறையின் மேலாண் இயக்குனர் பிரிகேடியர் சைஃப் அல் மஜ்ரோஹி அவர்கள் தெரிவித்தார்கள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.