பேராவூரணி டிச-31
பேராவூரணி லயன்ஸ் சங்க மாதாந்திரக் கூட்டம் வியாழன் அன்று மாலை நடைபெற்றது. பின்னர் நள்ளிரவில்பேராவூரணியில் சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும், இரவில் கொட்டும் பனியில் குளிரில் படுத்து உறங்கிய ஆதரவற்றவர்களுக்கு பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் பொறி. மு.கனகராஜ் தலைமையில் 22 நபர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் மணடலத்தலைவர் எஸ்.கே. இராமமூர்த்தி, சங்க செயலாளர் பொறி.கே. இளங்கோ, பொருளாளர் கே. கிருஷ்ணமூர்த்தி,
உறுப்பினர்கள் எம்.நீலகண்டன், செ.இராமநாதன், சரவணன், பொறி.ஜெயக்குமார், பொறி.குட்டியப்பன், சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நெகிழ்ச்சி
போர்வை வழங்கிக் கொண்டிருந்த லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கடைகளில் கையேந்தி யாசகம் பெற்று பிழைப்பு நடத்தும் தெருவோரம் உறங்கிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியை எழுப்பி, போர்வையை வழங்க முற்பட்ட போது, தன்னிடம் போர்வை இருப்பதாகவும், போர்வை இல்லாத, தேவைப்படும் யாருக்காவது வழங்குமாறு கூறி, பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.
மூதாட்டியின் செயலால் நெகிழ்ந்து போன லயன்ஸ் சங்க நிர்வாகிகள் அம்மூதாட்டிக்கு பண உதவிகளை செய்து திரும்பினர்.
தன் தேவைக்கும் அதிகமாக கிடைத்தாலும் வாரிச் சுருட்டிக் கொள்ள நினைக்கும் இக்காலத்தில் தன்னிடம் போர்வை இருப்பதாகவும், இல்லாதவர்க்கு வழங்கிடுமாறும் கூறி அம்மூதாட்டி லயன்ஸ் சங்கத்தினரை நெகிழ வைத்து விட்டார்.
பேராவூரணி லயன்ஸ் சங்க மாதாந்திரக் கூட்டம் வியாழன் அன்று மாலை நடைபெற்றது. பின்னர் நள்ளிரவில்பேராவூரணியில் சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும், இரவில் கொட்டும் பனியில் குளிரில் படுத்து உறங்கிய ஆதரவற்றவர்களுக்கு பேராவூரணி லயன்ஸ் சங்கத் தலைவர் பொறி. மு.கனகராஜ் தலைமையில் 22 நபர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் மணடலத்தலைவர் எஸ்.கே. இராமமூர்த்தி, சங்க செயலாளர் பொறி.கே. இளங்கோ, பொருளாளர் கே. கிருஷ்ணமூர்த்தி,
உறுப்பினர்கள் எம்.நீலகண்டன், செ.இராமநாதன், சரவணன், பொறி.ஜெயக்குமார், பொறி.குட்டியப்பன், சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நெகிழ்ச்சி
போர்வை வழங்கிக் கொண்டிருந்த லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கடைகளில் கையேந்தி யாசகம் பெற்று பிழைப்பு நடத்தும் தெருவோரம் உறங்கிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியை எழுப்பி, போர்வையை வழங்க முற்பட்ட போது, தன்னிடம் போர்வை இருப்பதாகவும், போர்வை இல்லாத, தேவைப்படும் யாருக்காவது வழங்குமாறு கூறி, பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.
மூதாட்டியின் செயலால் நெகிழ்ந்து போன லயன்ஸ் சங்க நிர்வாகிகள் அம்மூதாட்டிக்கு பண உதவிகளை செய்து திரும்பினர்.
தன் தேவைக்கும் அதிகமாக கிடைத்தாலும் வாரிச் சுருட்டிக் கொள்ள நினைக்கும் இக்காலத்தில் தன்னிடம் போர்வை இருப்பதாகவும், இல்லாதவர்க்கு வழங்கிடுமாறும் கூறி அம்மூதாட்டி லயன்ஸ் சங்கத்தினரை நெகிழ வைத்து விட்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.