அதிரை நியூஸ்: துபாய், டிச-18
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய மருத்துவ தொழிற்நுட்பமான 3D தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி கிட்னியில் வளர்ந்து வந்த கட்டியை (Tumour) அகற்றி சாதனை நிகழ்த்தினர் டாக்டர் யாஸிர் அல் சயீதி அவர்கள் தலைமையிலான துபை மருத்துவமனையின் (Dubai Hospitals) மருத்துவ குழுவினர்.
இந்த சதைக்கட்டியானது கிட்னியின் பின்பக்கத்தில் (Posterior part) இரத்த நாளங்கள் (Blood vessels) மற்றும் சிறுநீரகக் குழாயின் (Ureter) அருகிலும் மிக சிக்கலான முறையில் வளர்ந்திருந்தது. (Middle East & Nation of Africa) - MENA என சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பகுதியில் நடைபெற்ற முதல் 3டி அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
3D அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததை தொடர்ந்து துபை சுகாதார துறையின் தலைவர் ஹூமைத் அல் கத்தாமி அவர்கள் குறிப்பிடும் போது, மக்களுக்கு பயன்தரும் எந்த நவீன யுக்தியையும் உள்வாங்கிக் கொள்ள தயங்க மாட்டோம் என்றும் இந்த அறுவை சிகிச்சைக்கான பயிற்சிகள் பிற மருத்துவ நிபுணர்களுக்கும் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய மருத்துவ தொழிற்நுட்பமான 3D தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி கிட்னியில் வளர்ந்து வந்த கட்டியை (Tumour) அகற்றி சாதனை நிகழ்த்தினர் டாக்டர் யாஸிர் அல் சயீதி அவர்கள் தலைமையிலான துபை மருத்துவமனையின் (Dubai Hospitals) மருத்துவ குழுவினர்.
இந்த சதைக்கட்டியானது கிட்னியின் பின்பக்கத்தில் (Posterior part) இரத்த நாளங்கள் (Blood vessels) மற்றும் சிறுநீரகக் குழாயின் (Ureter) அருகிலும் மிக சிக்கலான முறையில் வளர்ந்திருந்தது. (Middle East & Nation of Africa) - MENA என சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பகுதியில் நடைபெற்ற முதல் 3டி அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
3D அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததை தொடர்ந்து துபை சுகாதார துறையின் தலைவர் ஹூமைத் அல் கத்தாமி அவர்கள் குறிப்பிடும் போது, மக்களுக்கு பயன்தரும் எந்த நவீன யுக்தியையும் உள்வாங்கிக் கொள்ள தயங்க மாட்டோம் என்றும் இந்த அறுவை சிகிச்சைக்கான பயிற்சிகள் பிற மருத்துவ நிபுணர்களுக்கும் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.