.

Pages

Saturday, December 24, 2016

பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலக 'ஆன்லைன் கோரிக்கை மனு பதிவு' மையத்தில் ஆட்சியர் ஆய்வு !

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழி கோரிக்கை மனு பதிவு மையத்தில் (Online Petition GDP Receiving Centre ) மனுக்கள் பெறப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ளதை  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் நேரில் இன்று (24.12.2016) ஆய்வு செய்தார்.

பொது மக்கள் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக தமிழகம் முழுவதும் இணைய வழி கோரிக்கை மனு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிற்து.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெருந்திட்ட வளாகத்திலும், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய 3 வருவாய் கோட்ட அலுவலகங்களிலும், தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 9 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இணைய வழி கோரிக்கை மனு பதிவு மையம் அமைக்கப்பட்டு இணைய தளம் மூலமாக பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது.  இம்மனுக்கள் அனைத்தும் ( Online )  ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டதற்கான ஒப்புதல் ரசீது வழங்கப்படும். அனைத்து வேலை நாட்களிலும், மனுக்கள் பெறப்பட்டு இதற்கான ஒப்புதல் ரசீது ஆன்லைன் மூலமாக மனுதாரர்களுக்கு வழங்கப்படும்.

பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இணைய வழி கோரிக்கை மனு பதிவு மையத்தில் மனுக்கள் பெறப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.