.

Pages

Tuesday, December 20, 2016

துபாயில் 'மதிப்புமிகு' மதிப்பிழந்த பழைய 10,000 ரூபாய் நோட்டுகள்

அதிரை நியூஸ்: துபாய், டிச-20
என்ன நண்பர்களே! தலைப்பு குழப்புகின்றதா?

மோடியின் செல்லாக்காசு அறிவிப்புக்கு முன் இந்தியாவில் 1946 ஆம் ஆண்டு வெள்ளைக்காரன் காலத்திலும், 1978 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவிலும் இதே கூத்துக்கள் அரங்கேறியுள்ளன என்றாலும் மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காக தினமும் செத்து மடியவில்லை, வங்கி வாசலில் வரிசைக்கட்டி நாள் முழுக்க நிற்கவில்லை.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஆவணங்களின்படி 10,000 ரூபாய் நோட்டை இந்திய அரசு செல்லாது என அறிவித்தபோது நாடு முழுவதும் இருந்த மொத்த நோட்டுக்களே 346 தான். அதில் இன்றும் பழைய நோட்டு சேகரிப்போரிடம் எஞ்சி இருப்பவை சுமார் 10 நோட்டுக்களே இருக்கும். அந்த 10 நோட்டில் ஒன்றே ஒன்று மட்டுமே துபையில் உள்ளது.

1946 ஆம் ஆண்டு புழக்கத்திலிருந்த 500, 1000 மற்றும் 10,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது போல் 1978 ஆம் ஆண்டு புழக்கத்திலிருந்த 1,000, 5,000 மற்றும் 10,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதாக வரலாறு கூறும் துபை வாழ் இந்தியரான ராம்குமார் துபையில் பழைய நோட்டுக்களை வாங்கி விற்கும் நிறுவனத்தை கடந்த 15 வருடங்களாக நடத்தி வருகிறார் அதாவது செல்லாத நோட்டுக்கள் இவரை செல்வந்தராக மாற்றியுள்ளது.

1946 ஆம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாய் நோட்டு மற்றும் 1978 ஆம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட1,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுக்களை தற்போதும் தன்னுடன் வைத்திருக்கும் ராம்குமார் இவற்றிற்கான சந்தை விலையை சொல்ல மறுப்பதுடன் இவை தனியாக பேசி முடிக்கப்பட வேண்டிய தொழில் ரகசியம் எனக்கூறுகிறார். மேலும் இதுபோன்ற பழைய நோட்டுக்கள் சர்வதேச அளவில் பகிரங்க ஏலம் மூலமும் விற்கப்படுகிறதாம்.

ஒருவேளை மோடியின் செல்லாத நோட்டுக்கள் கூட 50, 60 ஆண்டுகளுக்கு பின் லட்சக்கணக்கில் விலை போனாலும் போகலாம்! சகோஸ், இப்போது தலைப்பு புரிகிறதா?

தகவலுக்காக:
1957 ஆம் ஆண்டு வரை அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளில் இந்திய ரூபாய்களே பயன்படுத்தப்பட்டன. பின்பு இந்திய அரசாங்கம் வளைகுடா நாடுகளுக்கு என தனியான ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது. அமீரகம் 70களின் ஆரம்பத்தில் தனக்கென திர்ஹங்களை அச்சிடத் துவங்கியபின் இந்திய நோட்டுக்களின் வளைகுடா ஆதிக்கம் நிறைவுக்கு வந்தது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.