அதிரை நியூஸ்: டிச-19
மக்கள் வசிக்கும் கட்டிடங்கள் மற்றும் வில்லாக்களில் ஏற்படும் தீ விபத்துக்கள் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் போது அந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் மட்டுமே சட்டப்படி தண்டிக்கப்பட்டு வந்தனர். தீ விபத்து போன்ற சம்பவங்கள் குடியிருக்கும் வாடகைதாரர்களின் அலட்சியத்தினாலேயே பெரும்பாலும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் 2017 ஆம் ஆண்டு முதல் வாடகைதாரர்களை பொறுப்பேற்கச் செய்வதுடன் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அபராதமும் விதிக்க ஏதுவான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமீரகத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒரு நவீன (ஸ்மார்ட்) திட்டத்தின் மூலம் கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள லிப்டுகள் (Lifts), கட்டுப்பாட்டு கருவிகள் (Control Panel), தீயணைப்பு பம்புகள் (Fire Pumps), தண்ணீர் தொட்டிகள் (Water Tanks), வீட்டுத்தேவைக்கான கேஸ் இணைப்புக்கள் (Building Gas System) போன்றவை 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றாலும் மக்கள் அலட்சியமாக தூக்கி எரியும் சிகரெட் துண்டுகள் (Cigarette Buds), பார்பீக் (Barbecue Grills) அடுப்புப்பின் தீப்பொறிகள், ஷீஷாக்கள் (Shisha) எனப்படும் அரேபிய புகைப்பிடிப்பான்கள், அவசரகால வழிகளை அடைத்து வைப்பது, பொருட்களை கண்டவாறு சேமித்து வைப்பது போன்ற தீ பரவும், கட்டிடங்களை சேதப்படுத்தும் அலட்சிய குற்றங்களில் ஈடுபடுவது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் அமீரக தீயணைப்பு துறையினர்.
அதேபோல் கட்டிடங்களில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள தரமற்ற தீயணைப்பு கருவிகள் அனைத்தும் துபை மாநகராட்சியால் சோதனை செய்யப்பட்டு புதிய தரமான கருவிகளை பொருத்தவும் உத்தரவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புதிய சட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
மக்கள் வசிக்கும் கட்டிடங்கள் மற்றும் வில்லாக்களில் ஏற்படும் தீ விபத்துக்கள் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் போது அந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் மட்டுமே சட்டப்படி தண்டிக்கப்பட்டு வந்தனர். தீ விபத்து போன்ற சம்பவங்கள் குடியிருக்கும் வாடகைதாரர்களின் அலட்சியத்தினாலேயே பெரும்பாலும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் 2017 ஆம் ஆண்டு முதல் வாடகைதாரர்களை பொறுப்பேற்கச் செய்வதுடன் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அபராதமும் விதிக்க ஏதுவான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமீரகத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒரு நவீன (ஸ்மார்ட்) திட்டத்தின் மூலம் கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள லிப்டுகள் (Lifts), கட்டுப்பாட்டு கருவிகள் (Control Panel), தீயணைப்பு பம்புகள் (Fire Pumps), தண்ணீர் தொட்டிகள் (Water Tanks), வீட்டுத்தேவைக்கான கேஸ் இணைப்புக்கள் (Building Gas System) போன்றவை 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றாலும் மக்கள் அலட்சியமாக தூக்கி எரியும் சிகரெட் துண்டுகள் (Cigarette Buds), பார்பீக் (Barbecue Grills) அடுப்புப்பின் தீப்பொறிகள், ஷீஷாக்கள் (Shisha) எனப்படும் அரேபிய புகைப்பிடிப்பான்கள், அவசரகால வழிகளை அடைத்து வைப்பது, பொருட்களை கண்டவாறு சேமித்து வைப்பது போன்ற தீ பரவும், கட்டிடங்களை சேதப்படுத்தும் அலட்சிய குற்றங்களில் ஈடுபடுவது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் அமீரக தீயணைப்பு துறையினர்.
அதேபோல் கட்டிடங்களில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள தரமற்ற தீயணைப்பு கருவிகள் அனைத்தும் துபை மாநகராட்சியால் சோதனை செய்யப்பட்டு புதிய தரமான கருவிகளை பொருத்தவும் உத்தரவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புதிய சட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.