.

Pages

Thursday, December 29, 2016

துபாயில் கட்டாய மருத்துவ இன்ஸூரன்ஸ் சட்டம்: அலைமோதும் கூட்டம் !

அதிரை நியூஸ்: துபாய், டிச-29
துபையில் வசிக்கும் அனைவரும் 2016 ஜூன் மாதத்திற்குள் கட்டாய மருத்துவ இன்ஸூரன்ஸ் செய்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டு பின்பு அது 2016 டிசம்பர் இறுதிவரை நீட்டிக்கப்பட்டது, மேலும் கால அவகாச நீட்டிப்பு இல்லை என்றும் தவறுபவர்கள் மாதம் ஒன்றுக்கு 500 திர்ஹம் அபராதம் செலுத்துவதுடன் அவர்களுக்கு புதிய விசாக்கள் மறுக்கப்படுவதுடன் விசா புதுப்பித்தலும் செய்யப்படாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

துபையில் வசிக்கும் சுமார் 98 சதவிகிதத்தினர் (சுமார் 4 மில்லியன்) ஏற்கனவே இன்ஸூரன்ஸ் எடுத்திருக்கும் நிலையில் சுமார் 80,000 பேர் மட்டுமே இன்னும் எஞ்சியிருக்கின்றனர். இவர்களில் பலர் உடனிருக்கும் கணவன் அல்லது மனைவி, குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர் போன்றோரே அதிகம்.

அடிப்படை அத்தியாவசிய இன்ஷூரன்ஸ் தொகுப்பு (Basic essential package) எனப்படும் திட்டத்தின் பிரிமியம் தொகை சராசரியாக 565 திர்ஹம் முதல் 650 திர்ஹம் மட்டுமே அடக்கம். இத்தகைய அடிப்படை மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டத்தை அமீரகத்தில் செயல்படும் 50 கம்பெனிகளில் 9 கம்பெனிகள் மட்டுமே வழங்குகின்றன.

இந்நிலையில், வரும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள காலக்கெடுவால் அனைத்து இன்ஷூரன்ஸ நிறுவனங்களும் கடைசிநேர பொதுமக்களால் ஈக்களை போல் மொய்க்கப்பட்டுள்ளது.

முக்கிய இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வசூலிக்கும் அடிப்படை மருத்துவ இன்ஷூரன்ஸூக்கான பிரிமியம் பற்றிய விபரம்:
1. வீட்டுப் பணியாளர்களுக்கு திர்ஹம் 656 முதல் 650 வரை
2. மனைவியர்களுக்கு திர்ஹம் 1,650 முதல் 1,750 வரை (மகப்பேறு உடையவர்கள் கூடுதலாக செலுத்த நேரிடும்)
3. குழந்தைகளுக்கு திர்ஹம் 625 வரை

இந்த கட்டாய இன்ஷூரன்ஸ் திட்டம் துபைக்கு மட்டுமே பொருந்தும்.

கடைசி செய்தி:
இன்று பகல் சுமார் 12 மணியளவில் துபை சுகாதாரத்துறை அறிவித்துள்ளபடி, இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் அளவுக்கு அதிகமான (கடைசி நேர) மக்களால் நிறைந்து வழிவதால் மீண்டும் காலநீட்டிப்பு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது என்றாலும் கடைசி தேதி எது என அறிவிக்கப்படவில்லை, இன்று அல்லது நாளை தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.