அதிராம்பட்டினம், டிச-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பேட்மிண்டன் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் அஜுமுதீன். இவரது மகள் அஸ்மிதா (11) காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சாய்னா பேட்மிண்டன் கிளப் டோர்னமென்ட் சார்பில் நடந்த 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பேட்மிண்டன் சிங்கிள்ஸ் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மொத்தம் 15 பேர் விளையாடினார். இதில் முதல் போட்டியில் 30:8, 2 வது போட்டியில் 30:22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பேட்மிண்டன் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் அஜுமுதீன். இவரது மகள் அஸ்மிதா (11) காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சாய்னா பேட்மிண்டன் கிளப் டோர்னமென்ட் சார்பில் நடந்த 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பேட்மிண்டன் சிங்கிள்ஸ் போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மொத்தம் 15 பேர் விளையாடினார். இதில் முதல் போட்டியில் 30:8, 2 வது போட்டியில் 30:22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.