.

Pages

Thursday, December 22, 2016

சவூதியில் மீண்டும் சில்லரை பெட்ரோல் விலை உயர வாய்ப்பு !

அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, டிச-22
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிரடியாக சரிந்ததால் ஏற்பட்ட விளைவின் காரணமாக கடந்த வரும் சுமார் 97 பில்லியன் டாலர் அளவுக்கு பற்றாக்குறை பட்ஜெட் போட வேண்டிய நிலைக்கு சவுதி அரசு தள்ளப்பட்டது.

விளைவு அத்துடன் நிற்கவில்லை, பெட்ரோலிய வருவாய் தவிர்த்த மாற்று வருவாய்க்கான வழிகளை குறித்து ஆராய தூண்டியதுடன் பல்வேறு கட்டுமானப் பணிகளை நிறுத்தி, அமைச்சர்களின் சம்பளத்தை குறைத்து, அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்தி என பல்வேறு நடவடிக்கைகளை சவுதி அரசு எடுத்ததுடன் மாற்றுப் பொருளாதார திட்டத்திற்கான 'தொலைநோக்கு திட்டம் 2030' என்ற ஒன்றையும் அறிவித்தது.

இந்நிலையில், சமர்ப்பிக்கப்படவுள்ள சவுதி அரசின் புதிய பட்ஜெட்டில் பெட்ரோல் சில்லரை விலை உயர்த்தப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தண்ணீர் மற்றும் மின்சார மானியங்களை ரத்து செய்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 200 மில்லியன் ரியால்களை மிச்சப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Source: AFP / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.