அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, டிச-24
சவூதியை பொருத்தவரை ஆண், பெண் கலப்பாக வேலை பார்க்க அனுமதியில்லை என்றாலும் பெண்களின் தனித்துவம் போற்றும் வேலையை பார்க்க எந்தத் தடையும் இல்லை. ஒரு சில வேலைகளை பெண்களால் மட்டுமே திறம்பட செய்யவும் முடியும்.
இந்நிலையில் சவுதி புள்ளியியல் துறை (General Authority of Statistics) வெளியிட்டுள்ள ஒப்பீட்டின் படி, வேலைக்கு போகும் பெண்களில் சுமார் 72,895 பேர் விவாகரத்து பெற்றிருப்பதாகவும் அதேவேளை வேலைக்குக் செல்லாத பெண்களில் சுமார் 14,856 பேர் மட்டுமே விவாகரத்து பெற்றிருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விவாகரத்திற்கு இன்னொரு முக்கிய காரணமாக கணவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தாலும் பணியிடத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அழுத்தங்களுக்கு மேல் "தாங்கள் சம்பாதிக்கின்றோம்" என்ற மனநிலையுமே வேலை செய்யும் பெண்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பதன் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவாகரத்திற்கும் வேலைக்கும் முடிச்சுப் போடக்கூடாது என டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொங்கியுள்ளோரின் வார்த்தைகள் புள்ளியியல் துறையின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வண்ணமே வெளியாகியுள்ளது. அதில் பல டிவிட்டர்வாசிகள் கூறியுள்ள கருத்துச் சுருக்கம் யாதெனில், எங்களுக்கு கணவரை விட வேலையும், சம்பளமுமே முக்கியம்.
இது எத்தனை வருடத்திற்கான புள்ளிவிபரம் என பத்திரிக்கையில் விபரம் இல்லை.
Sources: Al Riyadh / Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சவூதியை பொருத்தவரை ஆண், பெண் கலப்பாக வேலை பார்க்க அனுமதியில்லை என்றாலும் பெண்களின் தனித்துவம் போற்றும் வேலையை பார்க்க எந்தத் தடையும் இல்லை. ஒரு சில வேலைகளை பெண்களால் மட்டுமே திறம்பட செய்யவும் முடியும்.
இந்நிலையில் சவுதி புள்ளியியல் துறை (General Authority of Statistics) வெளியிட்டுள்ள ஒப்பீட்டின் படி, வேலைக்கு போகும் பெண்களில் சுமார் 72,895 பேர் விவாகரத்து பெற்றிருப்பதாகவும் அதேவேளை வேலைக்குக் செல்லாத பெண்களில் சுமார் 14,856 பேர் மட்டுமே விவாகரத்து பெற்றிருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விவாகரத்திற்கு இன்னொரு முக்கிய காரணமாக கணவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தாலும் பணியிடத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அழுத்தங்களுக்கு மேல் "தாங்கள் சம்பாதிக்கின்றோம்" என்ற மனநிலையுமே வேலை செய்யும் பெண்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பதன் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவாகரத்திற்கும் வேலைக்கும் முடிச்சுப் போடக்கூடாது என டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொங்கியுள்ளோரின் வார்த்தைகள் புள்ளியியல் துறையின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வண்ணமே வெளியாகியுள்ளது. அதில் பல டிவிட்டர்வாசிகள் கூறியுள்ள கருத்துச் சுருக்கம் யாதெனில், எங்களுக்கு கணவரை விட வேலையும், சம்பளமுமே முக்கியம்.
இது எத்தனை வருடத்திற்கான புள்ளிவிபரம் என பத்திரிக்கையில் விபரம் இல்லை.
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.