அதிரை நியூஸ்: டிச-31
உத்தர பிரதேச மாநிலம் மஜாஹ்வான் நகரின் அருகிலுள்ள இனாயத்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 'விலாஸா' என்ற பெண்ணை 1976 ஆம் ஆண்டு கருநாகப் பாம்பு தீண்டியதை தொடர்ந்து பரிசோதித்த நாட்டு மருத்துவர் ஒருவர் அவர் இறந்து விட்டதாக அறிவித்தார்.
பின்பு இறந்தவருக்கான காரியங்களை செய்த குடும்பத்தினர் மத வழக்கப்படி கங்கைநதியில் விலாஸாவின் உடம்பை தூக்கி எரிந்துவிட்டு தங்களின் வழமையான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில், சிலதினங்களுக்கு முன் சுமார் 82 வயதில் 'விலாஸா' வீடு திரும்பினார். பேராச்சரியம் அடைந்த குடும்பமும் அவருடைய இருமகள்களான ராம் குமாரிக்கும், முன்னிக்கு தனது தாயை 40 ஆண்டுகள் கடந்த பின்பும் அடையாளம் காண்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
பிழைத்து மீண்டது எப்படி?
கங்கை ஆற்றில் மிதந்தபடி சென்ற விலாஸாவின் உடலில் உயிரிருப்பதை கண்ட மீனவர்கள் மீட்டு தங்கள் கிராமத்தின் கோயிலில் சேர்த்தனர் ஆனால் அவருடைய பழைய ஞாபகங்கள் அனைத்தும் மறந்திருந்தன.
சுமார் 40 வருட மறதியான வாழ்க்கைக்குப் பின் திடீரென சுயநினைவு திரும்பிய 'விலாஸா'க்கு தனது வீட்டையும், கிராமத்தையும், மகள்களை பார்ப்பதற்காக தெளிவான அடையாளங்களை கூறி வந்தவரை கல்லறையிலிருந்து வந்தவரைப் போல் முதலில் பார்த்தாலும் பின்பு அனைவரும் மனதார ஏற்றுக் கொண்டனர்.
தினம் தினம் நான் செத்துப் பிழைக்கின்றேன் என்று அலுத்துக் கொள்கின்றவர்கள் மத்தியில் மெய்யாலுமே?(!) செத்துப் பிழைத்தவர், ஆச்சரியங்கள் நிறைந்த உலகம்.
Source: Times of India / Msn
தமிழில்: நம்ம ஊரான்
உத்தர பிரதேச மாநிலம் மஜாஹ்வான் நகரின் அருகிலுள்ள இனாயத்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 'விலாஸா' என்ற பெண்ணை 1976 ஆம் ஆண்டு கருநாகப் பாம்பு தீண்டியதை தொடர்ந்து பரிசோதித்த நாட்டு மருத்துவர் ஒருவர் அவர் இறந்து விட்டதாக அறிவித்தார்.
பின்பு இறந்தவருக்கான காரியங்களை செய்த குடும்பத்தினர் மத வழக்கப்படி கங்கைநதியில் விலாஸாவின் உடம்பை தூக்கி எரிந்துவிட்டு தங்களின் வழமையான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில், சிலதினங்களுக்கு முன் சுமார் 82 வயதில் 'விலாஸா' வீடு திரும்பினார். பேராச்சரியம் அடைந்த குடும்பமும் அவருடைய இருமகள்களான ராம் குமாரிக்கும், முன்னிக்கு தனது தாயை 40 ஆண்டுகள் கடந்த பின்பும் அடையாளம் காண்பதில் எந்த சிரமமும் இருக்கவில்லை.
பிழைத்து மீண்டது எப்படி?
கங்கை ஆற்றில் மிதந்தபடி சென்ற விலாஸாவின் உடலில் உயிரிருப்பதை கண்ட மீனவர்கள் மீட்டு தங்கள் கிராமத்தின் கோயிலில் சேர்த்தனர் ஆனால் அவருடைய பழைய ஞாபகங்கள் அனைத்தும் மறந்திருந்தன.
சுமார் 40 வருட மறதியான வாழ்க்கைக்குப் பின் திடீரென சுயநினைவு திரும்பிய 'விலாஸா'க்கு தனது வீட்டையும், கிராமத்தையும், மகள்களை பார்ப்பதற்காக தெளிவான அடையாளங்களை கூறி வந்தவரை கல்லறையிலிருந்து வந்தவரைப் போல் முதலில் பார்த்தாலும் பின்பு அனைவரும் மனதார ஏற்றுக் கொண்டனர்.
தினம் தினம் நான் செத்துப் பிழைக்கின்றேன் என்று அலுத்துக் கொள்கின்றவர்கள் மத்தியில் மெய்யாலுமே?(!) செத்துப் பிழைத்தவர், ஆச்சரியங்கள் நிறைந்த உலகம்.
Source: Times of India / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.