.

Pages

Thursday, December 22, 2016

துபாய் தொழிலாளர் குடியிருப்பில் கேரளா முதல்வர்!

அதிரை நியூஸ்; துபாய், டிச-22
துபாய்க்கு அரசுமுறை பயணமாக வந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனின் அரசுமுறை சந்திப்புக்கள் இன்று (வியாழன்) அதிகாரபூர்வமாக துவங்கவுள்ள நிலையில், நேற்று மாலை (புதன்) துபை வந்தடைந்த கேரள முதல்வர் தனது முன்கூட்டியே அறிவிக்காத (Surprise) பயணமாக, துபை அல்கோஸ் பகுதிகளிலுள்ள தொழிலாளர் குடியிருப்புகளுக்கு நேரில் விஜயம் செய்து கேரள தொழிலாளர்களை சந்தித்து உரையாடினார், அப்போது பிற இந்திய தொழிலாளர்கள் உட்பட வெளிநாட்டினரும் பெருமளவில் ஆச்சரிய விழிகளுடன் குழுமியிருந்தனர்.

கேரள தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வர் விஜயன், துபை வாழ் அனைத்து கேரள தொழிலாளர்களையும் சந்திக்க முடியாத நிலையிலுள்ளதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், கேரளாவின் முதுகெலும்பாய் திகழும் அன்னிய செலாவணி வருவாயை ஈட்டித்தரும் உங்களுக்கு பிரதியுபகாரமாக கண்டிப்பாக கேரள அரசு பல நலத்திட்டங்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என உறுதியளித்தார் என்றாலும் அனைத்து தொழிலாளர்களும் மோடியின் செல்லாக்காசு திட்டத்தால் தாங்கள் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை கூட அத்தியவசிய குடும்ப செலவிற்கு எடுக்க முடியவில்லை என்ற குறையை தெரிவித்தனர்.

மலையாளிகளுக்கு அடுத்து அதிகளவில் தமிழர்களே வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நிலையில் நம்மையும் நேரில் தமிழக முதல்வர்கள்? வந்து காணும் அதிசயம் தற்போதைய சூழலில் கனவில் மட்டுமே சாத்தியம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.