உன்னை பெற்றதும்
உன்னில் என்னைக் குழந்தையாய்க் கண்டேன்
தன்னை மறந்தேன்
தனியே என்வானில் சிறகடித்துப் பறந்தேன்
தன்னில் பிரிந்த
தன்னின் பிம்பம் உருவில் !
என்னில் உடலுள்ளத்தில்
எல்லைதெரியா மகிழ்ச்சி !!
என் சிந்தனை உன் செயலாய் வளர்ந்தாய்
தன் அறிவு பின் தெளிவு கொண்டாய்
'நான்' 'நீ' வலுப்பெற அருவுருவில்
நகருதல் அதிகமாகியது உருவில்
வளர்ச்சியில் கேள்வி கேட்டலுமுண்டு நீ
மகிழ்ச்சியில் பார்த்து இரசித்தலுமுண்டு நான்
தான் வானாய் ஊனாய் ஆனதினாலோ
நான் நீயாய் பலவாய் காணுதலாகியோ
மனமே ! மகனே !
ஒன்றே பூத்துக் குலுங்கிறது
இன்றே பார்த்து தெளிந்துவிடு
நன்றாய் தன்னில் ஆழ்ந்துவிடு
என்றும் இதுதான் சுழன்றுவிடு
உண்டவுணவு உன்னில் பலவாகிறதே !!!
அப்படி சொன்னதில் காணப்பா !
எப்படி என்பது புரியுமப்பா
இப்படிக்கு பிரியமுடன் அப்பா.
ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்.
உன்னில் என்னைக் குழந்தையாய்க் கண்டேன்
தன்னை மறந்தேன்
தனியே என்வானில் சிறகடித்துப் பறந்தேன்
தன்னில் பிரிந்த
தன்னின் பிம்பம் உருவில் !
என்னில் உடலுள்ளத்தில்
எல்லைதெரியா மகிழ்ச்சி !!
என் சிந்தனை உன் செயலாய் வளர்ந்தாய்
தன் அறிவு பின் தெளிவு கொண்டாய்
'நான்' 'நீ' வலுப்பெற அருவுருவில்
நகருதல் அதிகமாகியது உருவில்
வளர்ச்சியில் கேள்வி கேட்டலுமுண்டு நீ
மகிழ்ச்சியில் பார்த்து இரசித்தலுமுண்டு நான்
தான் வானாய் ஊனாய் ஆனதினாலோ
நான் நீயாய் பலவாய் காணுதலாகியோ
மனமே ! மகனே !
ஒன்றே பூத்துக் குலுங்கிறது
இன்றே பார்த்து தெளிந்துவிடு
நன்றாய் தன்னில் ஆழ்ந்துவிடு
என்றும் இதுதான் சுழன்றுவிடு
உண்டவுணவு உன்னில் பலவாகிறதே !!!
அப்படி சொன்னதில் காணப்பா !
எப்படி என்பது புரியுமப்பா
இப்படிக்கு பிரியமுடன் அப்பா.
ஷேக் அப்துல்லாஹ் அ
அதிராம்பட்டினம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.