.

Pages

Thursday, December 22, 2016

சஹாரா பாலைவனத்தில் அதிசய பனிப்பொழிவு (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச-22
பொதுவாக கிருஸ்துமஸ், புத்தாண்டு போன்ற கிருஸ்தவ மத விழாக்கள் நெருங்கும் போது பனிப்பொழிவுடன் கொண்டாடும் இங்கிலாந்து இந்த வருடம் வறண்டு போயிருக்க, பனிப்பொழிவுகளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத உலகின் மிகவும் சூடான பாலைவனமான சஹாராவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

சஹாரா பாலைவனத்தின் நுழைவு வாயில் என அழைக்கப்படும் அல்ஜீரியா நாட்டின் அய்ன் செஃப்ரா (செந்நிற கண் என்று பொருள்) என்ற செம்மைநிற மணலால் சூழப்பட்ட பாலைவன நகரம் பனிப்பொழிவால் ஒருநாள் முழுவதும் மூடப்பட்டிருந்தது பார்ப்போரின் கண்களுக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், அற்புத காட்சியாகவும் திகழ்ந்துள்ளது.

இதற்குமுன் 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் நாள் அரைமணி நேர பனிப்புயலை சந்தித்திருந்த இந்நகரம் மீண்டும் 37 ஆண்டுகளுக்குப் பின் வெண்மைநிற பனிப்போர்வையால் போர்த்தப்பட்டது. இந்நகரம் இன்னும் 15,000 ஆண்டுகளில் பச்சைபசேல் என பசுமை நகராக மாறும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

குறிப்பு: 
"சஹாரா" என்ற அரபிச் சொல்லுக்கு "பாலைவனம்" என்றே அர்த்தம். அதாவது நாம் ஷாப்பு கடை, கேட்டு வாசல், கண்ணாடி கிளாஸ் என்று சொல்வது போல்.

Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.