அதிராம்பட்டினம், டிச-23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த பட்டுக்கோட்டை மெயின் ரோட்டில் புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரிலியணட் சி.பி.எஸ்.இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சிக்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்து வரவேற்றார். ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் இளங்கோவன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் 250 படைப்புகள் இடம்பெற்றன. மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளின் செயல்விளக்கத்தை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தனர். கண்காட்சியில் இடம் பெற்று இருந்த மாதிரி ஏவுகணைகள், பேரிடர் குறைப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
கண்காட்சியின் ஒரு பகுதியாக கல்வி, அறிவியல், ஆரோக்கியம், மொழி, பொதுஅறிவு, நீதிக்கதைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தலைவர்கள் வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்பின் கீழ் புத்தகங்கள் இடம் பெற்றன. பார்வையாளர்கள் இவற்றை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
கண்காட்சி முடிவில் பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன் செய்து இருந்தார்.
இக்கண்காட்சியில் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் தமிழரசன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக பொருளாளர் எஸ்.எம்.முகம்மது மொய்தீன், தொழில் அதிபர் முத்துகிருஷ்ணன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் நாடிமுத்து, புதுக்கோட்டை உள்ளூர் காங்கிரஸ் தலைவர் நடராஜன் மற்றும் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த பட்டுக்கோட்டை மெயின் ரோட்டில் புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரிலியணட் சி.பி.எஸ்.இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சிக்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்து வரவேற்றார். ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் இளங்கோவன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் 250 படைப்புகள் இடம்பெற்றன. மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளின் செயல்விளக்கத்தை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தனர். கண்காட்சியில் இடம் பெற்று இருந்த மாதிரி ஏவுகணைகள், பேரிடர் குறைப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
கண்காட்சியின் ஒரு பகுதியாக கல்வி, அறிவியல், ஆரோக்கியம், மொழி, பொதுஅறிவு, நீதிக்கதைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தலைவர்கள் வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்பின் கீழ் புத்தகங்கள் இடம் பெற்றன. பார்வையாளர்கள் இவற்றை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
கண்காட்சி முடிவில் பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன் செய்து இருந்தார்.
இக்கண்காட்சியில் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் தமிழரசன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக பொருளாளர் எஸ்.எம்.முகம்மது மொய்தீன், தொழில் அதிபர் முத்துகிருஷ்ணன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் நாடிமுத்து, புதுக்கோட்டை உள்ளூர் காங்கிரஸ் தலைவர் நடராஜன் மற்றும் பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.