அதிரையில் வரும் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது - தண்ணீர் பயன்பாட்டில் சிக்கனம் தேவை என சமூக ஆர்வலர் முஹம்மது அப்துல் காதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
29-12-2016 நிலவரப்படி, தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 904.59 மி.மீ மழையும், 2015 ஆம் ஆண்டு 1,121.97 மி.மீ, நடப்பாண்டில் ( 2016 ஆம் ஆண்டு ) 619.62 மி.மீ மழை பெய்துள்ளது. இவை கடந்தாண்டு பெய்த மழையை வீட நடப்பாண்டில் பாதியாக குறைந்துள்ளது.
அதிரையில் 2016 ஆம் ஆண்டு பெய்த மொத்த மழையின் அளவு 61 செ.மீ. இது அதிரையின் சராசரி மழை (124 செ.மீ)யை விட மிகவும் குறைவு. (Refer - Below screenshot image - Data collected from Regional Meteorological Centre, Chennai). சொல்ல போனால் பாதி அளவு கூட மழை பெய்யவில்லை. டிசம்பர் மாதத்துடன் மழை காலம் முடிகிறது. பின் வரும் மாதங்களும் (ஜனவரி முதல் மே வரை) தென்னிந்தியாவில் வறண்ட காலமாக (மழை அதிகம் பெய்யாத காலமாக உள்ளது). இதனால் அதிரையில் நிலத்தடி நீர் மிகவும் குறையும் அபாயம் உள்ளது.
போதுமான மழை பெய்யாத காரணம் ஒரு பக்கம் இருந்தாலும், காலத்தில் கட்டாயத்தால் பெருகி வரும் கட்டிடங்களும், மறைந்து வரும் மண் சாலைகளும், தரையாக மாறிவரும் வீட்டின் கொல்லை புறங்களும் மழை நீரை பூமியில் உறிஞ்சாமல் சாக்கடையில் தள்ளி விடுகிறது. இதனால் குறைந்த அளவு பெய்த மழையிலும் சொற்ப அளவு தண்ணீர் தான் நிலத்தில் சேருகிறது.
தற்போது, பெரும்பாலான வீடுகளில் ஆழ்துளை கிணறு (Bore Well) கொண்டு தான் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறோம். நிலத்தடி நீர் தான் அனைவருக்கும் நீர் ஆதாரமாக விளங்குகிறது. அதுவும் குறைந்து விட்டால் அதிரையில் வரும் கோடை காலங்களில் அன்றாட தண்ணீர் தேவைக்கு மிகவும் சிரமப்படும் அளவுக்கு மோசமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதனால் தண்ணீரை வீண் விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன் படுத்துவோம்.
முடிந்த வரை அனைத்து அதிரை வாசிகளுக்கு இந்த செய்தியை சேர்ப்போம். தேவைப்பட்டால், இந்த தகவலை நகல் எடுத்து தங்கள் வீட்டினுள் உள்ள அனைத்து Water Tape அருகிலும் ஒட்டி வைத்து கொள்ளுங்கள்.
- முஹம்மது அப்துல் காதர்
29-12-2016 நிலவரப்படி, தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 904.59 மி.மீ மழையும், 2015 ஆம் ஆண்டு 1,121.97 மி.மீ, நடப்பாண்டில் ( 2016 ஆம் ஆண்டு ) 619.62 மி.மீ மழை பெய்துள்ளது. இவை கடந்தாண்டு பெய்த மழையை வீட நடப்பாண்டில் பாதியாக குறைந்துள்ளது.
அதிரையில் 2016 ஆம் ஆண்டு பெய்த மொத்த மழையின் அளவு 61 செ.மீ. இது அதிரையின் சராசரி மழை (124 செ.மீ)யை விட மிகவும் குறைவு. (Refer - Below screenshot image - Data collected from Regional Meteorological Centre, Chennai). சொல்ல போனால் பாதி அளவு கூட மழை பெய்யவில்லை. டிசம்பர் மாதத்துடன் மழை காலம் முடிகிறது. பின் வரும் மாதங்களும் (ஜனவரி முதல் மே வரை) தென்னிந்தியாவில் வறண்ட காலமாக (மழை அதிகம் பெய்யாத காலமாக உள்ளது). இதனால் அதிரையில் நிலத்தடி நீர் மிகவும் குறையும் அபாயம் உள்ளது.
போதுமான மழை பெய்யாத காரணம் ஒரு பக்கம் இருந்தாலும், காலத்தில் கட்டாயத்தால் பெருகி வரும் கட்டிடங்களும், மறைந்து வரும் மண் சாலைகளும், தரையாக மாறிவரும் வீட்டின் கொல்லை புறங்களும் மழை நீரை பூமியில் உறிஞ்சாமல் சாக்கடையில் தள்ளி விடுகிறது. இதனால் குறைந்த அளவு பெய்த மழையிலும் சொற்ப அளவு தண்ணீர் தான் நிலத்தில் சேருகிறது.
தற்போது, பெரும்பாலான வீடுகளில் ஆழ்துளை கிணறு (Bore Well) கொண்டு தான் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறோம். நிலத்தடி நீர் தான் அனைவருக்கும் நீர் ஆதாரமாக விளங்குகிறது. அதுவும் குறைந்து விட்டால் அதிரையில் வரும் கோடை காலங்களில் அன்றாட தண்ணீர் தேவைக்கு மிகவும் சிரமப்படும் அளவுக்கு மோசமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதனால் தண்ணீரை வீண் விரயம் செய்யாமல் சிக்கனமாக பயன் படுத்துவோம்.
முடிந்த வரை அனைத்து அதிரை வாசிகளுக்கு இந்த செய்தியை சேர்ப்போம். தேவைப்பட்டால், இந்த தகவலை நகல் எடுத்து தங்கள் வீட்டினுள் உள்ள அனைத்து Water Tape அருகிலும் ஒட்டி வைத்து கொள்ளுங்கள்.
- முஹம்மது அப்துல் காதர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.