.

Pages

Saturday, December 24, 2016

பட்டுக்கோட்டை வட்டத்தில் ரேஷன் கார்டு கள ஆய்வுப் பணி !

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் சாமு முதலி  தெரு,
லட்சத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில்
குடும்ப அட்டைதாரர்களின் முன்னுரிமை பெற்ற குடும்பங்களை கண்டறிய
அரசால் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி 100 சதவிகிதம் கள ஆய்வு மற்றும் மேல் தணிக்கை பணிகள் நடைபெற்று வருவதை
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில்  சென்று பார்வையிட்டு இன்று (24.12.2016) ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் 1183 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள மொத்தம் 6,70,039 குடும்ப அட்டைகளில், தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைதாரர்களில் முன்னுரிமை பெற்ற குடும்பங்களைக் கண்டறிய அரசாங்கத்தால் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, 100 சதவிதம் கள ஆய்வு மற்றும் மேல் தணிக்கைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியானது வருகின்ற 29.12.2016-வரை நடைபெறவுள்ள இந்த கள ஆய்வுப்பணியில், மொத்தம் 1158-பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 37,473 குடும்ப அட்டைகளிலுள்ள உறுப்பினர்களின் ஆதார் மற்றும் செல்லிடபேசி எண் குடும்ப அட்டைதாரர்களால் வழங்கப்படாமல் உள்ளது.

கள ஆய்வு செய்வதற்காக மூன்று வகையாக தயார் செய்யப்பட்ட பட்டியல்கள், நியாயவிலை அங்காடிப் பணியாளர்களால் சரிபார்க்கப்பட்டு, கள ஆய்வுப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
     
1) குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களது ஆதார் விபரங்களும் பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல்.

2) குறைந்தது ஒரு குடும்ப உறுப்பினரது ஆதார் எண்ணாவது பதிவு செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல்.
     
3) ஆதார் எண் பதிவு செய்யப்படாத குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல்.
இப்பணியினை கண்காணித்திடவும், ஒருங்கியல் தணிக்கை செய்திடவும் வட்டம் வாரியாக கீழ்க்குறிப்பிட்டவாறு மாவட்ட  நிலை அலுவலர்களான துணை ஆட்சியர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் வட்டத்திற்கு வருவாய் கோட்ட அலுவலரும், திருவையாறு வட்டத்திற்கு உதவி ஆணையர் (கலால்) அவர்களும், பூதலூர் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அவர்களும், ஒரத்தநாடு வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களும், பட்டுக்கோட்டை வட்டத்திற்கு வருவாய் கோட்ட அலுவலர் அவர்களும், பேராவூரணி வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) அவர்களும், பாபநாசம் வட்டத்திற்கு மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் அவர்களும், கும்பகோணம் வட்டத்திற்கு தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதி மன்றம்) அவாகளும், திருவிடைமருதூர் வட்டத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களும் களப்பணி மேற் கொள்ளப்படவுள்ளனர்.

கள ஆய்வுப்பணிக்காக தங்கள் பகுதிக்கு வருகை தரும் அரசுப்பணியாளர்களுக்கு, அவர்கள் கோரும் விவரங்களை அளித்திடுமாறும், இது வரை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் மற்றும் செல்லிடபேசி எண் விவரங்களை பதிவு செய்திடாதவர்கள், அவ்விவரங்களை கள ஆய்வுப் பணியாளர்களிடம் அளித்து இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பட்டுக்கோட்டை வட்டத்தில் சாமு முதலி தெரு, லட்சதோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடும்ப அட்டைதாரர்களின் முன்னுரிமை பெற்ற குடும்பங்களை கண்டறிய கள ஆய்வு மற்றும் மேல் தணிக்கை பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று நேரில் வீடு வீடாக சென்று குடும்ப அட்டைகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.